ETV Bharat / state

பாஜக அலுவலகத்திற்கு தீ - வெளியான சிசிடிவி காட்சிகள்

author img

By

Published : Jul 2, 2022, 9:01 AM IST

மயிலாடுதுறை அருகே பாஜக மாவட்ட பொதுச்செயலாளர் அலுவலகத்திற்கு தீ வைத்த நபரை கைது செய்யகோரி, பாஜகவினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். மேலும், சிசிடிவி பதிவுகளை கொண்டு பொறையார் போலீசார் தீ வைத்த நபரை தேடி வருகின்றனர்.

பாஜக அலுவலகத்திற்கு தீவைத்த நபரை கைது செய்யகோரி சாலைமறியல் போராட்டம்.
பாஜக அலுவலகத்திற்கு தீவைத்த நபரை கைது செய்யகோரி சாலைமறியல் போராட்டம்.

மயிலாடுதுறை: தரங்கம்பாடி தாலுகா எருக்கட்டாஞ்சேரியில் வசித்து வருபவர் பாலாஜி (49). இவர் பாஜக மாவட்ட பொதுச் செயலாளராக உள்ளார். இவர் ஒழுகைமங்கலத்தில் பல ஆண்டுகளாக வசித்து வந்த வீட்டின் முன்பகுதியை பாஜக கட்சி அலுவலகமாக பயன்படுத்தி வருகிறார். கட்சி அலுவலகம் உள்ள இடம் தொடர்பாக அதே பகுதியில் வசிக்கும் உதயகுமார் குடும்பத்தினருக்கும் இவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று (ஜூன் 1) வீட்டின் முன்பகுதி கீற்றுகொட்டகை திடீரென்று தீப்பற்றி எரிந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தரங்கம்பாடி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். இதில் முன்பகுதி கொட்டகை எரிந்து சேதமானது. இச்சம்பவம் அறிந்து வந்த பாலாஜி, சிசிடிவி பதிவுகளை பார்த்தபோது உதயகுமார் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொளுத்துவது அதில் பதிவாகியிருந்தது.

பாஜக அலுவலகத்திற்கு தீவைத்த நபரை கைது செய்யகோரி சாலைமறியல் போராட்டம்.

இதனையறிந்த பாஜக மாவட்ட தலைவர் அகோரம் தலைமையில் பாஜகவினர் தீ வைப்பு சம்பவத்தை கண்டித்தும், குற்றவாளியை உடனடியாக கைது செய்யகோரியும் தரங்கம்பாடி சாலையில், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, பாலாஜி பொறையார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி பதிவுகளை கொண்டு உதயகுமாரை தேடி வருகின்றனர். போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் நடத்துவோம் என்று பாஜகவினர் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: நேரடி நெல் விதைப்பு விவகாரம் ; 144 தடை உத்தரவு

மயிலாடுதுறை: தரங்கம்பாடி தாலுகா எருக்கட்டாஞ்சேரியில் வசித்து வருபவர் பாலாஜி (49). இவர் பாஜக மாவட்ட பொதுச் செயலாளராக உள்ளார். இவர் ஒழுகைமங்கலத்தில் பல ஆண்டுகளாக வசித்து வந்த வீட்டின் முன்பகுதியை பாஜக கட்சி அலுவலகமாக பயன்படுத்தி வருகிறார். கட்சி அலுவலகம் உள்ள இடம் தொடர்பாக அதே பகுதியில் வசிக்கும் உதயகுமார் குடும்பத்தினருக்கும் இவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று (ஜூன் 1) வீட்டின் முன்பகுதி கீற்றுகொட்டகை திடீரென்று தீப்பற்றி எரிந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தரங்கம்பாடி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். இதில் முன்பகுதி கொட்டகை எரிந்து சேதமானது. இச்சம்பவம் அறிந்து வந்த பாலாஜி, சிசிடிவி பதிவுகளை பார்த்தபோது உதயகுமார் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொளுத்துவது அதில் பதிவாகியிருந்தது.

பாஜக அலுவலகத்திற்கு தீவைத்த நபரை கைது செய்யகோரி சாலைமறியல் போராட்டம்.

இதனையறிந்த பாஜக மாவட்ட தலைவர் அகோரம் தலைமையில் பாஜகவினர் தீ வைப்பு சம்பவத்தை கண்டித்தும், குற்றவாளியை உடனடியாக கைது செய்யகோரியும் தரங்கம்பாடி சாலையில், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, பாலாஜி பொறையார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி பதிவுகளை கொண்டு உதயகுமாரை தேடி வருகின்றனர். போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் நடத்துவோம் என்று பாஜகவினர் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: நேரடி நெல் விதைப்பு விவகாரம் ; 144 தடை உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.