ETV Bharat / state

'இடைநிலை நபர்கள் யாரும் தேவையில்லை' - பொதுமக்களின் நண்பனாக மாறிய ஆய்வாளர்! - புதிய காவல் ஆய்வாளரை அணுக இடைத்தரகர்கள் தேவை இல்லை.

நாகை: திருவெண்காட்டில் புதிய காவல் ஆய்வாளராக பொறுப்பேற்ற சதீஷ் என்பவர் காவல் ஆய்வாளர்களை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக மக்கள் சந்திக்க, 'இடைநிலை நபர்கள் யாரும் தேவை இல்லை' என தகவல் பலகையில் எழுதியிருப்பதற்கு அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

"இடைநிலை நபர்கள் யாரும் தேவை இல்லை"
author img

By

Published : Aug 20, 2019, 3:14 PM IST

காவல் நிலையத்திற்கு தங்கள் வழக்குகள் தொடர்பாக காவல் நிலைய ஆய்வாளரையோ, உதவி ஆய்வாளரையோ சாதாரண மக்கள் சந்திக்க வேண்டும் என்றால் அவர்களை நேரடியாக சந்திக்க முடியாத சூழலே பெரும்பாலான காவல் நிலையங்களில் நிலவுகிறது.

ஒரு சாமானியன் தனது வழக்கு தொடர்பாக காவல் ஆய்வாளரை சந்திக்க வேண்டுமென்றால், அதற்கான இடைத்தரகர்கள் மூலம்தான் தங்கள் பிரச்னையை எடுத்துச் செல்ல முடியும் என்ற எழுதப்படாத நடைமுறை பல காவல் நிலையங்களில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

"இடைநிலை நபர்கள் யாரும் தேவை இல்லை"
இவ்வாறான சூழலில் நாகை மாவட்டம் திருவெண்காட்டில் உள்ள காவல் நிலையம் ஒன்றில் சமீபத்தில் காவல் ஆய்வாளராக பொறுப்பேற்ற சதீஷ் என்பவர், காவல் நிலையத்தில் உள்ள தகவல் பலகையில், பொதுமக்கள் தங்களுடைய குறைகள் தொடர்பாக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க நேரடியாக காவல் நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளர், காவல் ஆய்வாளர் அவர்களை நேரடியாக அணுகலாம் என குறிப்பிட்டிருந்தார்.

மேலும் அதற்கு கீழே தகவல் பலகையில் சற்று பெரிய வாக்கியமாக "இடைநிலை நபர்கள் யாரும் தேவை இல்லை" என எழுதியிருந்தார்.

இந்தத் தகவல் பலகையினை அப்பகுதி இளைஞர் ஒருவர் புகைப்படம் எடுத்து, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட, அப்பகுதி மக்கள் இந்த அறிவிப்பை படித்து புதிய ஆய்வாளரின் செயலைப் பாராட்டிவருகின்றனர்.

காவல் நிலையத்திற்கு தங்கள் வழக்குகள் தொடர்பாக காவல் நிலைய ஆய்வாளரையோ, உதவி ஆய்வாளரையோ சாதாரண மக்கள் சந்திக்க வேண்டும் என்றால் அவர்களை நேரடியாக சந்திக்க முடியாத சூழலே பெரும்பாலான காவல் நிலையங்களில் நிலவுகிறது.

ஒரு சாமானியன் தனது வழக்கு தொடர்பாக காவல் ஆய்வாளரை சந்திக்க வேண்டுமென்றால், அதற்கான இடைத்தரகர்கள் மூலம்தான் தங்கள் பிரச்னையை எடுத்துச் செல்ல முடியும் என்ற எழுதப்படாத நடைமுறை பல காவல் நிலையங்களில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

"இடைநிலை நபர்கள் யாரும் தேவை இல்லை"
இவ்வாறான சூழலில் நாகை மாவட்டம் திருவெண்காட்டில் உள்ள காவல் நிலையம் ஒன்றில் சமீபத்தில் காவல் ஆய்வாளராக பொறுப்பேற்ற சதீஷ் என்பவர், காவல் நிலையத்தில் உள்ள தகவல் பலகையில், பொதுமக்கள் தங்களுடைய குறைகள் தொடர்பாக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க நேரடியாக காவல் நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளர், காவல் ஆய்வாளர் அவர்களை நேரடியாக அணுகலாம் என குறிப்பிட்டிருந்தார்.

மேலும் அதற்கு கீழே தகவல் பலகையில் சற்று பெரிய வாக்கியமாக "இடைநிலை நபர்கள் யாரும் தேவை இல்லை" என எழுதியிருந்தார்.

இந்தத் தகவல் பலகையினை அப்பகுதி இளைஞர் ஒருவர் புகைப்படம் எடுத்து, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட, அப்பகுதி மக்கள் இந்த அறிவிப்பை படித்து புதிய ஆய்வாளரின் செயலைப் பாராட்டிவருகின்றனர்.

Intro:காவல்நிலையத்தில் காவல் ஆய்வாளரை அணுக இடைத்தரகர்கள் தேவை இல்லை.
Body:காவல்நிலையத்தில் காவல் ஆய்வாளரை அணுக இடைத்தரகர்கள் தேவை இல்லை.


காவல் நிலையத்திற்கு வழக்குகள் தொடர்பாக காவல் நிலைய ஆய்வாளரையோ அல்லது துணை நிலை ஆய்வாளரையோ சாதாரண வெகுஜன மக்கள் சந்திக்க வேண்டும் என்றால், அவர்களை நேரடியாக சந்திக்க முடியாத சூழலே பெரும்பாலான காவல்நிலையங்களில் நிலவுகிறது.

அவ்வாறு ஒரு சாமானியன் தனது வழக்கு தொடர்பாக காவல் ஆய்வாளரை சந்திக்க வேண்டுமென்றால், பல காவல் நிலையங்களில் அதற்காக இடைத்தரகர்கள் இருப்பதும், அவர்கள் மூலம் தங்கள் பிரச்சனையை காவல் ஆய்வாளரிடம் எடுத்துச் செல்லும் எழுதப்படாத நடைமுறை இருப்பது, காவல் நிலைய அனுபவம் உள்ள பலருக்கும் தெரிந்த ஒன்று தான்.

இவ்வாறான சூழலில் நாகை மாவட்டம் திருவெண்காட்டில் உள்ள காவல்நிலையத்தில் சமீபத்தில் காவல் ஆய்வாளராக பொறுப்பேற்ற சதீஷ், காவல் நிலையத்தில் உள்ள தகவல் பலகையில் பொதுமக்கள் தங்களுடைய குறைகள் தொடர்பாக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க நேரடியாக காவல்நிலையத்தில் பணி புரியும் சிறப்பு உதவி ஆய்வாளர் உதவி ஆய்வாளர் காவல் ஆய்வாளர் அவர்களை நேரடியாக அணுகலாம் எனவும் தகவல் பலகையில் குறிப்பாக சற்று பெரிய வாக்கியமாக *இடைநிலை நபர்கள் யாரும் தேவை இல்லை* என எழுதி வைத்துள்ளார்.

இந்த தகவல் பலகையிணை புகைப்படம் எடுத்த அப்பகுதி இளைஞர் ஒருவர் தனது பேஸ்புக் வலைதளத்தில் பதிவிட அப்பகுதி மக்கள் இந்த அறிவிப்பை படித்து இதற்கு முன் இந்தக் காவல் நிலையத்தில் தங்கள் அனுபவத்தை நினைவு கூர்ந்து, தற்போது உள்ள ஆய்வாளரின் இந்த செயலை கண்டு ஆச்சரியமும் வியப்பும் அடைந்து பலரும் பாராட்டி வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.