ETV Bharat / state

பூச்சி மருந்து கலந்த விதை நெல் - புறாக்கள் உயிரிழந்த சோகம்! - புறாக்கள் உயிரிழந்தன நாகை

நாகை: விவசாயி உதயமூர்த்தி என்பவர் வளர்த்துவந்த புறாக்கள், பூச்சிமருந்து கலந்து தெளிக்கபட்ட விதை நெல்லை சாப்பிட்டு பரிதாபமாகஉயிரிழந்தன.

Pigeons died because of pesticide
author img

By

Published : Sep 28, 2019, 6:43 PM IST


நாகை மாவட்டம் திருக்குவளை, அதனை சுற்றியுள்ள பெரும்பாலான பகுதிகளில் தற்பொழுது சம்பா சாகுபடி மும்முரமாக நடைபெற்றுவருகிறது. ஒருசில விவசாயிகள் வேளாண் விரிவாக்க மையத்தில் தங்களுக்குத் தேவையான விதைநெல்லை வாங்கினாலும்கூட, பல விவசாயிகள் தங்களுக்கு தேவையான விதை நெல்லினை தனியாரிடமே வாங்குகின்றனர்.

அவ்வாறு தனியாரிடம் வாங்கப்படும் விதை நெல்லில் கௌச்சா என்னும் பூச்சிக்கொல்லி மருந்து விதை நெல்மேல் தெளிக்கப்பட்டு, விவசாயிகளுக்கு வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. அதிக மகசூல், பூச்சிகளின் தாக்குலிலிருந்து பாதுகாத்துக்கொள்ளுதல் போன்ற நன்மைகளுக்காகக் கௌச்சாப் பூச்சி மருந்து கலந்த விதைநெல்லினை வாங்கி விவசாயிகள் பயன்படுத்துகின்றனர். ஆனால் விதை நெல் வயலில் தெளிக்கப்பட்டவுடன், அதை உண்ண வரும் புறாக்கள், நாற்றாங்குருவிகள், தவிட்டுக்குருவிகள் ,அணில்கள் ,கோழிகள், மயில்கள் உள்ளிட்ட பல பறவைகளும், உயிரினங்களும் கௌச்சா பூச்சிமருந்தில் உள்ள நச்சுத் தன்மையால் உயிர் இழந்துவருகின்றன.

pigeons died in Nagappattinam

இதன் தொடர்ச்சியாகத் தற்போது, விடங்கலூரை சேர்ந்த விவசாயி உதயமூர்த்தி வளர்த்துவந்த புறாக்கள் உயிரிழந்துள்ளன. 50 வளர்ப்புப் புறாக்களை தனது வீட்டில் அதற்கென தனிப் பெட்டகம் அமைத்து வளர்த்துவந்த உதயமூர்த்தி, அந்தப் புறாக்களை பகலில் இரை தேடுவதற்காக வெளியேப் பறக்கவிடுவது வழக்கம். அவ்வாறு இரைத் தேடச்சென்ற புறாக்கள் அனைத்தும், அருகிலிருந்த வயலில் தெளிக்கப்பட்டிருந்த விதைநெல்லை உண்டு, சில நிமிடங்களிலேயே மயங்கி விழுந்துள்ளன.

இதனால் பதறிப்போய் அவர் பறவைகளை ஆராய்ந்தபோது, விதை நேர்த்திக்காக வயலில் கௌச்சா கலந்துத் தெளிக்கப்பட்ட விதைகளை சாப்பிட்டு புறாக்கள் இறந்தது தெரியவந்தது. தான் வளர்த்த 50 புறாக்களில் தற்போது 33 புறாக்கள் உயிரிழந்த நிலையிலும், 17 புறாக்கள் உயிருக்கு போராடிய நிலையிலும், பறக்க முடியாமலும் தவித்து வருவதால், நஷ்டத்திற்கும் மிகுந்த மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளார் விவசாயி உதயமூர்த்தி.


நாகை மாவட்டம் திருக்குவளை, அதனை சுற்றியுள்ள பெரும்பாலான பகுதிகளில் தற்பொழுது சம்பா சாகுபடி மும்முரமாக நடைபெற்றுவருகிறது. ஒருசில விவசாயிகள் வேளாண் விரிவாக்க மையத்தில் தங்களுக்குத் தேவையான விதைநெல்லை வாங்கினாலும்கூட, பல விவசாயிகள் தங்களுக்கு தேவையான விதை நெல்லினை தனியாரிடமே வாங்குகின்றனர்.

அவ்வாறு தனியாரிடம் வாங்கப்படும் விதை நெல்லில் கௌச்சா என்னும் பூச்சிக்கொல்லி மருந்து விதை நெல்மேல் தெளிக்கப்பட்டு, விவசாயிகளுக்கு வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. அதிக மகசூல், பூச்சிகளின் தாக்குலிலிருந்து பாதுகாத்துக்கொள்ளுதல் போன்ற நன்மைகளுக்காகக் கௌச்சாப் பூச்சி மருந்து கலந்த விதைநெல்லினை வாங்கி விவசாயிகள் பயன்படுத்துகின்றனர். ஆனால் விதை நெல் வயலில் தெளிக்கப்பட்டவுடன், அதை உண்ண வரும் புறாக்கள், நாற்றாங்குருவிகள், தவிட்டுக்குருவிகள் ,அணில்கள் ,கோழிகள், மயில்கள் உள்ளிட்ட பல பறவைகளும், உயிரினங்களும் கௌச்சா பூச்சிமருந்தில் உள்ள நச்சுத் தன்மையால் உயிர் இழந்துவருகின்றன.

pigeons died in Nagappattinam

இதன் தொடர்ச்சியாகத் தற்போது, விடங்கலூரை சேர்ந்த விவசாயி உதயமூர்த்தி வளர்த்துவந்த புறாக்கள் உயிரிழந்துள்ளன. 50 வளர்ப்புப் புறாக்களை தனது வீட்டில் அதற்கென தனிப் பெட்டகம் அமைத்து வளர்த்துவந்த உதயமூர்த்தி, அந்தப் புறாக்களை பகலில் இரை தேடுவதற்காக வெளியேப் பறக்கவிடுவது வழக்கம். அவ்வாறு இரைத் தேடச்சென்ற புறாக்கள் அனைத்தும், அருகிலிருந்த வயலில் தெளிக்கப்பட்டிருந்த விதைநெல்லை உண்டு, சில நிமிடங்களிலேயே மயங்கி விழுந்துள்ளன.

இதனால் பதறிப்போய் அவர் பறவைகளை ஆராய்ந்தபோது, விதை நேர்த்திக்காக வயலில் கௌச்சா கலந்துத் தெளிக்கப்பட்ட விதைகளை சாப்பிட்டு புறாக்கள் இறந்தது தெரியவந்தது. தான் வளர்த்த 50 புறாக்களில் தற்போது 33 புறாக்கள் உயிரிழந்த நிலையிலும், 17 புறாக்கள் உயிருக்கு போராடிய நிலையிலும், பறக்க முடியாமலும் தவித்து வருவதால், நஷ்டத்திற்கும் மிகுந்த மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளார் விவசாயி உதயமூர்த்தி.

Intro:நாகை அருகே பூச்சி மருந்து கலந்து தெளிக்கபட்ட விதை நெல்லை உண்டு புறாக்கள் உயிரிழப்பு.Body:நாகை அருகே பூச்சி மருந்து கலந்து தெளிக்கபட்ட விதை நெல்லை உண்டு புறாக்கள் உயிரிழப்பு.


நாகை மாவட்டம் திருக்குவளை மற்றும் அதனை சுற்றி உள்ள பெரும்பாலான பகுதிகளில் தற்பொழுது சம்பா சாகுபடி மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஒருசில விவசாயிகள் வேளாண் விரிவாக்க மையத்தில் தங்களுக்கு தேவையான விதை நெல்லை வாங்கினாலும் கூட பல விவசாயிகள் தங்களுக்கு தேவையான விதை நெல்லினை தனியாரிடம் வாங்குகின்றனர். அவ்வாறு தனியாரிடம் வாங்கப்படும் விதை நெல்லில் கௌச்சா என்னும் பூச்சிக்கொல்லி மருந்தினை விதை நெல் மேல் தெளித்து விவசாயிகளுக்கு வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. அதிக மகசூல், பூச்சி தாக்காமல் உள்ளிட்ட பல நன்மைகளுக்காக கௌச்சா பூச்சி மருந்து கலந்த விதை நெல்களை வாங்கி விவசாயிகள் பயன்படுத்துகின்றனர். ஆனால் விதை நெல் வயலில் தெளிக்கப்பட்ட உடன் அதனை உண்ண வரும் புறா, நாற்றங்குருவி, தவிட்டுக்குருவி ,அணில் ,கோழி, மயில் உள்ளிட்ட பல பறவைகள் கௌச்சாவில் பூச்சி மருந்தில் உள்ள நச்சுத் தன்மையால் உயிர் இழந்து விடுகின்றன.

இதன் ஒரு பகுதியாக விடங்கலூரை சேர்ந்தவர் உதயமூர்த்தி, விவசாயியான இவர் 50 வளர்ப்பு புறாக்களை தனது வீட்டில் அதற்கென தனி பெட்டகம் அமைத்து வளர்த்து வருகிறார். அந்த புறாக்களை பகலில் இரை தேடுவதற்காக வெளியில் பறக்க விடுவது வழக்கம். அவ்வாறு அவர் புறாக்களை பறக்க விட்ட பொழுது அவை அனைத்தும் அருகில் உள்ள வயலில் தெளிக்கப்பட்டு இருந்த விதைநெல்லை உண்டு சில நிமிடங்களிலேயே அவை மயங்கி கீழே விழுந்தன. அதனை தொடர்ந்து விவசாயி உதயமூர்த்தி பறவைகளின் வாயிலிருக்கும் நெல்மணிகளை பார்த்துள்ளார். அப்போது அதன் வாயில் விதை நேர்த்திக்காக வயலில் கௌச்சா கலந்து தெளிக்கப்பட்ட ரோஸ் நிற விதைகள் தென்பட்டன.மேலும் அவர் வளர்த்த 50 புறாக்களில் தற்போது 33 புறாக்கள் உயிர் இழந்த நிலையிலும் 17 புறாக்கள் உயிருக்கு போராடிய நிலையிலும் பறக்க முடியாமல் தவித்து வருகின்றனர். இதன்மூலம் நஷ்டத்தையும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினார் விவசாயி உதயமூர்த்தி.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.