நாகப்பட்டினம் மாவட்டம் ஒரத்தூர் கிராமத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என மத்திய, மாநில அரசுகள் சமீபத்தில் அறிவித்தன. அதனைத் தொடர்ந்து நாகை பகுதிகளிலுள்ள பல்வேறு தரப்பினர் கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியனுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
மேலும், நாகப்பட்டினத்தில் உள்ள தனியார் பாரா மெடிக்கல் கல்லூரி மாணவ, மாணவிகள் அமைச்சர் ஓ.எஸ். மணியனை நேரில் சந்தித்து மருத்துவக் கல்லூரி அமைய நடவடிக்கை எடுக்கப்பட்டது தொடர்பாக நன்றி தெரிவித்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், ' நாகப்பட்டினம் அருகேயுள்ள ஒரத்தூர் கிராமத்தில் 60 ஏக்கர் நிலத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்க அரசாணை வெளியிடப்பட்டு, நிலத்தின் கட்டமைப்பு ஆய்வு, பொதுப்பணித்துறை ப்ளூ பிரின்ட் முதற்கொண்டு வழங்கப்பட்டுவிட்டது.
மருத்துவக் கல்லூரி அமைவதை யாராலும் மாற்ற முடியாது. மாவட்ட மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவர்கள், குழந்தைகள் மருத்துவர்கள், ஸ்கேன் மருத்துவர்கள் என எந்த மருத்துவர்களும் இல்லாத காரணத்தால் நாகை மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே, நாகைக்கு வரவுள்ள மருத்துவக் கல்லூரியை அனைவரும் ஏற்றுக்கொண்டு வரவேற்க வேண்டுமென' என வேண்டுகோள் விடுத்தார்.
இதையும் படிங்க: வார்டு உறுப்பினர் பதவிக்கு ஏலம்: செல்ஃபோனில் வீடியோ எடுத்ததால் பரபரப்பு!