வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள நிவர் புயல் காரணமாக பல துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை குண்டு ஏற்றப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற ஏராளமான விசைப்படகுகள் இதுவரை கரை திரும்பவில்லை.
இந்நிலையில் நிவர் புயல் காரணமாக கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்களை கரை திரும்ப மீன்வளத் துறை எச்சரிக்கை விடுத்ததையடுத்து மீனவர்கள் அவசர அவசரமாக கரை திரும்பி வருகின்றனர்.
இந்தச் சூழலில் நாகப்பட்டினம் துறைமுகத்தில் கடல் சீற்றம் காரணமாக விசைப்படகுகள் கரை திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நுழைவு பகுதியில் காற்றின் வேகம் மற்றும் அலையின் சீற்றம் காரணமாக விசைப்படகுகள் கரை திரும்ப முடியாமல் கரைகளில் கொட்டப்பட்டுள்ள கற்பாறைகளில் மோதி சேதமடைந்து மோசமான நிலையில், கரைக்கு திரும்பி வருகின்றன.