நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் பேருந்து ஓட்டுநர்களுக்கு முதல் கியரை பயன்படுத்தி பேருந்தை இயக்குவதற்கான விழிப்புணர்வு பயிற்சி அரசு போக்குவரத்து கழகம் சார்பாக நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு பேருந்து போக்குவரத்து மேலாண் இயக்குநர் அறிவுறுத்தலின் பெயரில் நாகை கோட்ட மேலாளர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற பயிற்சியில் ஓட்டுநர்கள் பேருந்து நிலையத்தில் முதல் கியரை பயன்படுத்தி மட்டுமே பேருந்தை இயக்க வேண்டும், முதல் கியரில் இயக்குவதால்; பயணிகள் நடந்தே சென்று பேருந்தில் ஏறமுடியும் என்றும், இதனால் விபத்துகள் தவிர்க்கப்படுவதாகவும், டீசலுக்கான செலவினம் குறையும், என்றும் விழிப்புணர்வு பயிற்சியில் செயல்முறை விளக்கத்துடன் அறிவுறுத்தப்பட்டது. இதில் போக்குவரத்துத் துறை அலுவலர்கள் மற்றும் 12 ஓட்டுநர் பயிற்சி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.