ETV Bharat / state

கிராம சபைக் கூட்டத்தில் துர்கா ஸ்டாலினுக்கு புகழாரம் சூட்டிய அமைச்சர் மெய்யநாதன்!

சீர்காழி அருகே திருவெண்காட்டில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தான் அமைச்சராக காரணம் துர்கா ஸ்டாலின் தான் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 2, 2023, 11:07 PM IST

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபைக்கூட்டம்
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபைக்கூட்டம்
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபைக்கூட்டம்

மயிலாடுதுறை: காந்தி ஜெயந்தி நாளான இன்று(அக்.02) நாடெங்கும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாடு முழுவதும் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன. முன்னதாக அதனைக் காணொளி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சுதந்திரப் போராட்ட வீரரும், தனது அகிம்சை வழி கொள்கையால் உலகளவில் அனைவரது மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் காந்தியடிகள். 1969 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி பிறந்த, காந்திக்கு இன்று 154வது பிறந்தநாளாகும். இதனை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசு சார்பில், மாநிலம் முழுவதும் ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு கிராம சபைக் கூட்டம் இன்று(அக்.02) பல்வேறு இடங்களில் நடைபெற்றது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியாகி இருந்தது. அதில், "இந்த அரசு, மக்கள் அதிகாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், பொறுப்பேற்றவுடன் கிராம ஊராட்சிகளில் ஆண்டுதோறும் நடைபெற்று வந்த 4 கிராம சபை கூட்டங்களின் எண்ணிக்கையை 6 ஆக உயர்த்தி அரசாணை வெளியிட்டது.

மேலும் கிராமங்கள் மூலம் தான் இந்தியா வாழ்கிறது என்று உரைத்த காந்தியடிகள் பிறந்த தினமான அக்டோபர் 2ஆம் தேதி கிராம சபை கூட்டங்கள் நடைபெற உள்ளது. இதில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும், பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துகொள்ள வேண்டும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதேசமயம் பொதுமக்களை இதுபோன்ற கிராம சபைக் கூட்டங்களுக்கு வரவழைக்கும் வகையில், கிராம சபைக் கூட்ட அழைப்பிதழ்கள் வடிவமைக்கப்பட்டு, பல ஊராட்சிகளில் வீடு தோறும் வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் மகளிர் நலன், காலை உணவுத்திட்டம், மகளிர் உரிமைத் தொகை, விவசாயிகள் நலன், நான் முதல்வன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் குறும்படங்கள் ஒளிபரப்பி மக்களிடையே காட்சிப்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

கிட்டதட்ட தமிழ்நாடு முழுவதும் 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகளில் நடைபெறும் இந்த கிராம சபை கூட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாகத் தொடங்கி வைத்தார். அப்போது கிராம சபை கூட்டத்தின் முக்கியத்துவம் குறித்த கருத்துகளை மக்களிடத்தில் பகிர்ந்து கொண்டார்.

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 241 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் சிறப்பாக நடைப்பெற்றது. குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா திருவெண்காட்டில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துணைவியாரின் ஊரில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், "திருவெண்காடு ஊராட்சிக்குத் தனி அதிகாரியை நியமித்து, ஆறுமாத காலத்துக்குள் ஊராட்சி தேவைகளைப் பட்டியலில் நிறைவேற்றிட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இந்த கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி. இதற்கு காரணம், 2016 சட்டமன்ற தேர்தலில் எனக்கு வாய்ப்புகள் வழங்கப்பட வில்லை. பின்னர் ஆலங்குடி தொகுதியில் போட்டியிட்ட தலைவர் மு.க.ஸ்டாலின், எனக்கு வாய்ப்புகளைப் பெற்றுத் தந்தார். அதற்கு முழு முதற்காரணம் இந்த மண்ணில் பிறந்த துர்கா ஸ்டாலின். அவர்கள் எனக்கு மீண்டும் ஆலங்குடியில் பேட்டியிடும் வாய்ப்பினை பெற்றுத் தந்து, அரசியலில் இன்று அமைச்சராக உயரக் காரணமாக இருந்தவர் என்பதை நன்றியுடன் இங்கு பதிவு செய்கிறேன்.

ஒரு வேளை இந்த வாய்ப்பை அவர் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை எனில், அரசியலில் திசை மாறி போயிருப்பேன். நாங்கள் பெரிதும் மதிக்கின்ற அவர் பிறந்த மண்ணில் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என துர்கா ஸ்டாலின் குறித்து புகழாரம் சூட்டினார்.

கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

  • திருவெண்காடு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை.
  • பெருந்தோட்டம் ஏரியை சுற்றுலா தளமாக மாற்ற வேண்டும்.
  • மயிலாடுதுறை மாவட்டத்திற்கான மருத்துவ கல்லூரியை திருவெண்காட்டில் அமைக்க வேண்டும்.
  • அரசு உயர் நிலைப்பள்ளியை மேல் நிலைப்பள்ளியாகத் தரம் உயர்த்த வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை, கிராம சபை கூட்டத்தில் கிராம மக்கள் முன்வைத்தனர். மேற்கண்ட கோரிக்கைகள் குறித்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் உறுதி அளித்தனர்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபைக்கூட்டம்

மயிலாடுதுறை: காந்தி ஜெயந்தி நாளான இன்று(அக்.02) நாடெங்கும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாடு முழுவதும் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன. முன்னதாக அதனைக் காணொளி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சுதந்திரப் போராட்ட வீரரும், தனது அகிம்சை வழி கொள்கையால் உலகளவில் அனைவரது மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் காந்தியடிகள். 1969 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி பிறந்த, காந்திக்கு இன்று 154வது பிறந்தநாளாகும். இதனை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசு சார்பில், மாநிலம் முழுவதும் ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு கிராம சபைக் கூட்டம் இன்று(அக்.02) பல்வேறு இடங்களில் நடைபெற்றது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியாகி இருந்தது. அதில், "இந்த அரசு, மக்கள் அதிகாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், பொறுப்பேற்றவுடன் கிராம ஊராட்சிகளில் ஆண்டுதோறும் நடைபெற்று வந்த 4 கிராம சபை கூட்டங்களின் எண்ணிக்கையை 6 ஆக உயர்த்தி அரசாணை வெளியிட்டது.

மேலும் கிராமங்கள் மூலம் தான் இந்தியா வாழ்கிறது என்று உரைத்த காந்தியடிகள் பிறந்த தினமான அக்டோபர் 2ஆம் தேதி கிராம சபை கூட்டங்கள் நடைபெற உள்ளது. இதில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும், பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துகொள்ள வேண்டும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதேசமயம் பொதுமக்களை இதுபோன்ற கிராம சபைக் கூட்டங்களுக்கு வரவழைக்கும் வகையில், கிராம சபைக் கூட்ட அழைப்பிதழ்கள் வடிவமைக்கப்பட்டு, பல ஊராட்சிகளில் வீடு தோறும் வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் மகளிர் நலன், காலை உணவுத்திட்டம், மகளிர் உரிமைத் தொகை, விவசாயிகள் நலன், நான் முதல்வன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் குறும்படங்கள் ஒளிபரப்பி மக்களிடையே காட்சிப்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

கிட்டதட்ட தமிழ்நாடு முழுவதும் 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகளில் நடைபெறும் இந்த கிராம சபை கூட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாகத் தொடங்கி வைத்தார். அப்போது கிராம சபை கூட்டத்தின் முக்கியத்துவம் குறித்த கருத்துகளை மக்களிடத்தில் பகிர்ந்து கொண்டார்.

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 241 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் சிறப்பாக நடைப்பெற்றது. குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா திருவெண்காட்டில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துணைவியாரின் ஊரில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், "திருவெண்காடு ஊராட்சிக்குத் தனி அதிகாரியை நியமித்து, ஆறுமாத காலத்துக்குள் ஊராட்சி தேவைகளைப் பட்டியலில் நிறைவேற்றிட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இந்த கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி. இதற்கு காரணம், 2016 சட்டமன்ற தேர்தலில் எனக்கு வாய்ப்புகள் வழங்கப்பட வில்லை. பின்னர் ஆலங்குடி தொகுதியில் போட்டியிட்ட தலைவர் மு.க.ஸ்டாலின், எனக்கு வாய்ப்புகளைப் பெற்றுத் தந்தார். அதற்கு முழு முதற்காரணம் இந்த மண்ணில் பிறந்த துர்கா ஸ்டாலின். அவர்கள் எனக்கு மீண்டும் ஆலங்குடியில் பேட்டியிடும் வாய்ப்பினை பெற்றுத் தந்து, அரசியலில் இன்று அமைச்சராக உயரக் காரணமாக இருந்தவர் என்பதை நன்றியுடன் இங்கு பதிவு செய்கிறேன்.

ஒரு வேளை இந்த வாய்ப்பை அவர் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை எனில், அரசியலில் திசை மாறி போயிருப்பேன். நாங்கள் பெரிதும் மதிக்கின்ற அவர் பிறந்த மண்ணில் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என துர்கா ஸ்டாலின் குறித்து புகழாரம் சூட்டினார்.

கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

  • திருவெண்காடு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை.
  • பெருந்தோட்டம் ஏரியை சுற்றுலா தளமாக மாற்ற வேண்டும்.
  • மயிலாடுதுறை மாவட்டத்திற்கான மருத்துவ கல்லூரியை திருவெண்காட்டில் அமைக்க வேண்டும்.
  • அரசு உயர் நிலைப்பள்ளியை மேல் நிலைப்பள்ளியாகத் தரம் உயர்த்த வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை, கிராம சபை கூட்டத்தில் கிராம மக்கள் முன்வைத்தனர். மேற்கண்ட கோரிக்கைகள் குறித்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் உறுதி அளித்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.