ETV Bharat / state

மயிலாடுதுறையில் புதிய காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் திறப்பு!

author img

By

Published : Nov 4, 2020, 1:29 PM IST

நாகை: வேளாண்மைதுறை அலுவலக கட்டட மாடியில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மாற்றப்பட்டு, இன்று திறக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை
மயிலாடுதுறை

நாகையில் இருந்து மயிலாடுதுறை கோட்டத்தை பிரித்து தமிழ்நாட்டின் 38ஆவது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மார்ச் மாதம் அறிவித்தார். அதற்கான அரசாணை வெளியிடப்பட்டு மயிலாடுதுறை புதிய மாவட்டத்திற்கு எல்லை வரையறை செய்வதற்காக சிறப்பு அலுவலராக லலிதா ஐ.ஏ.எஸ் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஸ்ரீநாதா ஐபிஎஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் சிறப்பு அதிகாரி லலிதா ஐஏஎஸ்

அலுவலகமும், டிஎஸ்பி அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகமும் தற்காலிகமாக செயல்பட்டு வந்தது.

இந்நிலையில், வேளாண்மைத் துறை அலுவலக கட்டட மாடியில், மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மாற்றப்பட்டு அதன் திறப்புவிழா இன்று நடைபெற்றது. புதிய அலுவலகத்தை மாவட்ட சிறப்பு அலுவலர் லலிதா ஐஏஎஸ் திறந்து வைத்தார்.

மயிலாடுதுறையில் புதிய காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் திறப்பு

இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா ஐபிஎஸ் மற்றும் காவல்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க வேளாண்மைதுறை அலுவலகத்தில் செயல்படும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தன்னை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம் என ஸ்ரீநாதா ஐபிஎஸ் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மோசமான வானிலை: சென்னையில் தரையிறங்கிய பெங்களூரு விமானங்கள்

நாகையில் இருந்து மயிலாடுதுறை கோட்டத்தை பிரித்து தமிழ்நாட்டின் 38ஆவது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மார்ச் மாதம் அறிவித்தார். அதற்கான அரசாணை வெளியிடப்பட்டு மயிலாடுதுறை புதிய மாவட்டத்திற்கு எல்லை வரையறை செய்வதற்காக சிறப்பு அலுவலராக லலிதா ஐ.ஏ.எஸ் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஸ்ரீநாதா ஐபிஎஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் சிறப்பு அதிகாரி லலிதா ஐஏஎஸ்

அலுவலகமும், டிஎஸ்பி அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகமும் தற்காலிகமாக செயல்பட்டு வந்தது.

இந்நிலையில், வேளாண்மைத் துறை அலுவலக கட்டட மாடியில், மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மாற்றப்பட்டு அதன் திறப்புவிழா இன்று நடைபெற்றது. புதிய அலுவலகத்தை மாவட்ட சிறப்பு அலுவலர் லலிதா ஐஏஎஸ் திறந்து வைத்தார்.

மயிலாடுதுறையில் புதிய காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் திறப்பு

இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா ஐபிஎஸ் மற்றும் காவல்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க வேளாண்மைதுறை அலுவலகத்தில் செயல்படும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தன்னை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம் என ஸ்ரீநாதா ஐபிஎஸ் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மோசமான வானிலை: சென்னையில் தரையிறங்கிய பெங்களூரு விமானங்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.