மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா பருத்திகுடி ஊராட்சியில் பரமசிவபுரம் முதல் பருத்திக்குடி வரை குண்டும் குழியுமாக இருந்த தார் சாலையை புதிதாக அமைப்பதற்காக ரூபாய் 90 லட்சம் மதிப்பீட்டில் கடந்த ஆண்டு சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
கப்பிகற்கள் பரப்பிய நிலையில் சாலை போடாமல் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் கிராம மக்கள் தினந்தோறும் பெரும் அவதிக்குள்ளாகிவருகின்றனர். கிடப்பில் போடப்பட்ட சாலையை செப்பனிடக் கோரி பருத்திக்குடி ஊராட்சி பகுதியில் தப்பு அடித்து சங்கு ஊதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.