ETV Bharat / state

வெற்றி பெற முடியாது எனத் தெரிந்து தேர்தலை நிறுத்த நினைக்கும் பாஜக! கி.வீரமணி விமர்சனம்

author img

By

Published : Apr 7, 2019, 9:38 AM IST

நாகபட்டினம்: தேர்தல் முடிவுகள் தங்களுக்கு சாதகமாக வராது என்பதால் இந்தத் தேர்தலை பாஜக நிறுத்த நினைக்கிறது என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

கி.வீரமணி

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் இந்த மாதம் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதே தேதியில் தமிழ்நாட்டில் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கின்றது. இதற்கான தேர்தல் பணிகளும், பரப்புரைகளும் முழு வீச்சில் நடைபெற்றுவருகின்றன.

இந்நிலையில், நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செ.ராமலிங்கத்தை ஆதரித்து மயிலாடுதுறையில் திராவிடர் கழக பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர், நாட்டிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு உள்ளது. அதனைப் பெற்றுத் தந்த பெருமை திராவிட கழகத்திற்கு உண்டு என கூறினார்.

சமூக நீதியை ஒழிப்பதே ஆர்.எஸ்.எஸ்.இன் கொள்கை. அதை அமல்படுத்தும் அரசாக பாஜக அரசு உள்ளது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் ஜனநாயக குடியரசு இருக்காது என அவர் விமர்சித்துப் பேசினார்.

ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை என்று சொன்ன மோடி ஆட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் நான்கரை கோடி பேர் வேலையிழந்ததாக சுட்டிக்காட்டினார். விவசாயிகளுக்கு இரட்டிப்பு வருமானம் ஏற்படுத்தி தருவதாக சொன்ன மோடி கஜா புயலினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அனுதாபம் கூட தெரிவிக்கவில்லை என தெரிவித்த அவர், 15 ஆயிரம் கோடி ரூபாய் புயல் இழப்பீடு கேட்ட தமிழ்நாட்டிற்கு வெரும்353 கோடி ரூபாய் மட்டுமே மத்திய அரசு வழங்கியுள்ளது என சாடினார்.

தேர்தல் முடிவுகள் தங்களுக்கு சாதகமாக வராது என்பதால் இந்தத் தேர்தலை பாஜக நிறுத்த நினைக்கிறது என கடுமையாக விமர்சனம் செய்தார்.

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் இந்த மாதம் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதே தேதியில் தமிழ்நாட்டில் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கின்றது. இதற்கான தேர்தல் பணிகளும், பரப்புரைகளும் முழு வீச்சில் நடைபெற்றுவருகின்றன.

இந்நிலையில், நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செ.ராமலிங்கத்தை ஆதரித்து மயிலாடுதுறையில் திராவிடர் கழக பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர், நாட்டிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு உள்ளது. அதனைப் பெற்றுத் தந்த பெருமை திராவிட கழகத்திற்கு உண்டு என கூறினார்.

சமூக நீதியை ஒழிப்பதே ஆர்.எஸ்.எஸ்.இன் கொள்கை. அதை அமல்படுத்தும் அரசாக பாஜக அரசு உள்ளது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் ஜனநாயக குடியரசு இருக்காது என அவர் விமர்சித்துப் பேசினார்.

ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை என்று சொன்ன மோடி ஆட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் நான்கரை கோடி பேர் வேலையிழந்ததாக சுட்டிக்காட்டினார். விவசாயிகளுக்கு இரட்டிப்பு வருமானம் ஏற்படுத்தி தருவதாக சொன்ன மோடி கஜா புயலினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அனுதாபம் கூட தெரிவிக்கவில்லை என தெரிவித்த அவர், 15 ஆயிரம் கோடி ரூபாய் புயல் இழப்பீடு கேட்ட தமிழ்நாட்டிற்கு வெரும்353 கோடி ரூபாய் மட்டுமே மத்திய அரசு வழங்கியுள்ளது என சாடினார்.

தேர்தல் முடிவுகள் தங்களுக்கு சாதகமாக வராது என்பதால் இந்தத் தேர்தலை பாஜக நிறுத்த நினைக்கிறது என கடுமையாக விமர்சனம் செய்தார்.

Intro:தேர்தல் முடிவுகள் தங்களுக்கு சாதகமாக வராது என்பதால் இந்த தேர்தலில் நிறுத்த நினைக்கிறது பாஜக. மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் செ.ராமலிங்கத்தை ஆதரித்து நடைபெற்ற திராவிடர் கழகப் பிரச்சார கூட்டத்தில் தலைவருக்கு கி.வீரமணி பேச்சு


Body:மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செ.ராமலிங்கத்தை ஆதரித்து மயிலாடுதுறையில் திராவிட கழக பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பிரச்சாரம் செய்தபோது பேசியதாவது:- இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டும் தான் 69 சதவீத இட ஒதுக்கீடு உள்ளது. அதனை செய்த பெருமை திராவிட கழகத்திற்கு உண்டு. சமூகநீதியை ஒழிப்பதே ஆர்.எஸ்.எஸின் கொள்கை அதை அமல்படுத்தும் அரசாக பாஜக அரசு உள்ளது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் ஜனநாயக குடியரசு இருக்காது. கோட்டையில்தான் கொத்தடிமைகள் உள்ளனர். கொத்தடிமைகள் ஒழிக்கப்படவேண்டும். தமிழ்நாட்டில் பாஜக 5 இடங்களில் போட்டியிடுவது ஜெயிப்பதற்கு அல்ல தமிழகத்தில் கணக்கு திறப்பதற்காக தான். இந்தியாவில் இந்தியாவில் ரிசர்வ் வங்கி, சிபிஐ, சுப்ரீம் கோர்ட் திட்டக் கமிஷன், என அனைத்து துறைகளிலுமே மோடியின் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை என்று சொன்ன மோடி ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் நான்கரை கோடி பேர் வேலையிழந்துள்ளனர். விவசாயிகளுக்கு இரட்டிப்பு வருமானம் ஏற்படுத்தி தருவதாக சொன்ன மோடி கஜா புயலினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அனுதாபம் கூட தெரிவிக்கவில்லை. 15,000 கோடி புயல் இழப்பீடு கேட்ட தமிழ்நாட்டிற்கு 353 கோடி மட்டுமே மத்திய அரசு வழங்கியுள்ளது. தேர்தல் முடிவுகள் தங்களுக்கு சாதகமாக வராது என்பதால் இந்த தேர்தலில் நிறுத்த நினைக்கிறது பாஜக என்று பேசினார்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.