ETV Bharat / state

'ரஜினிகாந்த் காவியும் இல்லை, கருப்பும் இல்லை' - இந்து மகா சபா  தலைவர் - Nagapattinam T.Balasubramanian Press Meet

நாகப்பட்டினம்: ரஜினிகாந்த் காவி பக்கமும் இல்லை, கருப்பு பக்கமும் இல்லை என இந்து மகா சபையின் மாநில தலைவர் த.பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அகில பாரத இந்து மகா சபா தலைவர் பேட்டி அகில பாரத இந்து மகா சபா தலைவர் த.பாலசுப்பிரமணியன் இந்து மகா சபா தலைவர் த.பாலசுப்பிரமணியன் பத்திரிக்கை சந்திப்பு நாகப்பட்டினம் த.பாலசுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பு Nagapattinam T.Balasubramanian Press Meet Hindu Maha Sabha Leader T Balasubramaniyan Press Meet
Hindu Maha Sabha Leader T Balasubramaniyan Press Meet
author img

By

Published : Jan 31, 2020, 12:47 PM IST

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் அகில பாரத இந்து மகா சபா நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், அகில பாரத இந்து மகா சபா மாநில தலைவர் த.பாலசுப்பிரமணியன் கலந்துகொணடார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசுகையில், "ஆன்மிக நகரமான மயிலாடுதுறையில் சேதமடைந்து காணப்படும் மயூரநாதர், திருக்கடையூர் அபிராமி கோயில்கள் சீரமைக்கப்பட வேண்டும்.

மத்திய அரசின் நிதி உதவியுடன் அமையவுள்ள அரசு மருத்துவக் கல்லூரியை மயிலாடுதுறையில் அமைக்க வேண்டும். இதற்காக, மயிலாடுதுறையில் 25 ஏக்கர் நிலம் வழங்க அகில பாரத இந்து மகா சபா தயாராகவுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தமிழ்நாட்டில் நடைபெறும் போராட்டங்கள் மத கலவரத்தை உருவாக்கக்கூடியது. இந்தச் சட்டங்களால் இந்தியாவில் வசிக்கும் யாருக்கும் பாதிப்பு இல்லை. 50 வருடங்களுக்கு முன்பு இலங்கை இந்தியாவுடன் சேர்ந்தது.

எனவே இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்து மீண்டும் அங்கு செல்ல முடியாத நிலையில் உள்ள தமிழர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்க வேண்டுமென்பது அகில பாரத இந்து மகா சபாவின் நோக்கம். பெரியார் குறித்து பத்திரிகைகளில் வந்ததைதான் ரஜினிகாந்த் பேசினார். அவர்களுக்கு எதிராக பேசிய போது வரவேற்றார்கள். இப்போது, பெரியாரைப் பற்றி பேசும் போது விமர்க்கிறார்கள். ரஜினிகாந்த் காவி பக்கமும் இல்லை, கருப்பின் பக்கமும் இல்லை அவர் எங்கு இருக்கிறார் என்பது அவருக்குத்தான் தெரியும்.

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை கொண்டு வந்தார். பின்னர் அதை வாபஸ் பெற்றார். கோயில்கள், மருத்துவமனைகள், சிறைச்சாலைகள் என அனைத்து இடங்களிலும் மத மாற்ற முயற்சிகள் நடைபெறுகின்றன. எனவே, தமிழ்நாட்டில் மீண்டும் அந்தச் சட்டத்தை கொண்டு வர வேண்டும். தமிழ்நாட்டில் குடமுழுக்கு செய்யப்படாமல் உள்ள அனைத்து கோயில்களிலும் குடமுழுக்கு நடத்த வேண்டும். பெரியாரின் தலைமையில் ராமரை அவமரியாதை செய்யப்பட்ட சேலத்தில் இந்த ராமநவமியன்று, அகில பாரத இந்து மகா சபா சார்பில் ராமநவமி விழா நடத்தவும் ராமநாத ஊர்வலம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

த.பாலசுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பு

தொடர்ந்து பேசுகையில், மார்ச் மாதம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படவுள்ளது. இதுபோல் தமிழ்நாட்டில் 100 இடங்களில் ராமர் கோயில் கட்டும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். அயோத்தி போலவே காசியையும், மதுராவையும் இஸ்லாமியர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு கொடுத்துள்ளோம்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க:

கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் காசு வாங்காதே - இந்து முன்னணி ராமகோபாலன்

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் அகில பாரத இந்து மகா சபா நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், அகில பாரத இந்து மகா சபா மாநில தலைவர் த.பாலசுப்பிரமணியன் கலந்துகொணடார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசுகையில், "ஆன்மிக நகரமான மயிலாடுதுறையில் சேதமடைந்து காணப்படும் மயூரநாதர், திருக்கடையூர் அபிராமி கோயில்கள் சீரமைக்கப்பட வேண்டும்.

மத்திய அரசின் நிதி உதவியுடன் அமையவுள்ள அரசு மருத்துவக் கல்லூரியை மயிலாடுதுறையில் அமைக்க வேண்டும். இதற்காக, மயிலாடுதுறையில் 25 ஏக்கர் நிலம் வழங்க அகில பாரத இந்து மகா சபா தயாராகவுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தமிழ்நாட்டில் நடைபெறும் போராட்டங்கள் மத கலவரத்தை உருவாக்கக்கூடியது. இந்தச் சட்டங்களால் இந்தியாவில் வசிக்கும் யாருக்கும் பாதிப்பு இல்லை. 50 வருடங்களுக்கு முன்பு இலங்கை இந்தியாவுடன் சேர்ந்தது.

எனவே இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்து மீண்டும் அங்கு செல்ல முடியாத நிலையில் உள்ள தமிழர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்க வேண்டுமென்பது அகில பாரத இந்து மகா சபாவின் நோக்கம். பெரியார் குறித்து பத்திரிகைகளில் வந்ததைதான் ரஜினிகாந்த் பேசினார். அவர்களுக்கு எதிராக பேசிய போது வரவேற்றார்கள். இப்போது, பெரியாரைப் பற்றி பேசும் போது விமர்க்கிறார்கள். ரஜினிகாந்த் காவி பக்கமும் இல்லை, கருப்பின் பக்கமும் இல்லை அவர் எங்கு இருக்கிறார் என்பது அவருக்குத்தான் தெரியும்.

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை கொண்டு வந்தார். பின்னர் அதை வாபஸ் பெற்றார். கோயில்கள், மருத்துவமனைகள், சிறைச்சாலைகள் என அனைத்து இடங்களிலும் மத மாற்ற முயற்சிகள் நடைபெறுகின்றன. எனவே, தமிழ்நாட்டில் மீண்டும் அந்தச் சட்டத்தை கொண்டு வர வேண்டும். தமிழ்நாட்டில் குடமுழுக்கு செய்யப்படாமல் உள்ள அனைத்து கோயில்களிலும் குடமுழுக்கு நடத்த வேண்டும். பெரியாரின் தலைமையில் ராமரை அவமரியாதை செய்யப்பட்ட சேலத்தில் இந்த ராமநவமியன்று, அகில பாரத இந்து மகா சபா சார்பில் ராமநவமி விழா நடத்தவும் ராமநாத ஊர்வலம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

த.பாலசுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பு

தொடர்ந்து பேசுகையில், மார்ச் மாதம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படவுள்ளது. இதுபோல் தமிழ்நாட்டில் 100 இடங்களில் ராமர் கோயில் கட்டும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். அயோத்தி போலவே காசியையும், மதுராவையும் இஸ்லாமியர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு கொடுத்துள்ளோம்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க:

கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் காசு வாங்காதே - இந்து முன்னணி ராமகோபாலன்

Intro:பெரியாரின் தலைமையில் ராமர் அவமரியாதை செய்யப்பட்ட சேலத்தில் ராம நவமி அன்று ராம ரத ஊர்வலம் நடத்த உள்ளதாக அகில பாரத இந்து மகா சபா தலைவர் த.பாலசுப்பிரமணியன் மயிலாடுதுறையில் பேட்டி:-


Body:நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் அகில பாரத இந்து மகா சபா நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இதில் பங்கேற்ற அகில பாரத இந்து மகா சபா மாநில தலைவர் த.பாலசுப்பிரமணியன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது;
ஆன்மீக நகரமான மயிலாடுதுறையில் சேதமடைந்து காணப்படும் மயூரநாதர் கோயில் மற்றும் திருக்கடையூர் அபிராமி கோவில் ஆகியன சீரமைக்கப்பட வேண்டும். மத்திய அரசின் நிதி உதவியுடன் அமைய உள்ள அரசு மருத்துவக் கல்லூரியை தமிழக அரசு மயிலாடுதுறையில் அமைக்க வேண்டும். இதற்காக, மயிலாடுதுறையில் 25 ஏக்கர் நிலப்பரப்பை தர அகில பாரத இந்து மகா சபா தயாராக உள்ளது. குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழகத்தில் நடைபெறுகின்ற போராட்டங்கள் மதக்கலவரத்தை உருவாக்கக்கூடியது. இந்த சட்டங்களால் இந்தியாவில் வசிக்கும் யாருக்கும் பாதிப்பு இல்லை. 50 வருடங்களுக்கு முன்பு இலங்கை இந்தியாவுடன் சேர்ந்ததுதான். எனவே இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்து மீண்டும் அங்கே செல்ல முடியாத நிலையில் உள்ள தமிழர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை தர வேண்டுமென்பது அகில பாரத இந்து மகா சபாவின் நோக்கம். பெரியார் குறித்து ரஜினிகாந்த் பத்திரிகைகளில் வந்ததைதான் பேசினார். எனவே அவர்களுக்கு எதிராக பேசிய போது வரவேற்றார்கள். இப்போது, பெரியாரைப் பற்றி பேசும் போது அவரை தவறாக விமர்சிப்பவர்கள். ரஜினிகாந்த் காவி பக்கமும் இல்லை, கருப்பின் பக்கமும் இல்லை அவர் எந்த பக்கம் இருக்கிறார் என்பது அவருக்குத்தான் தெரியும். அவரது பேச்சு குழப்பத்தை தான் ஏற்படுத்தும். 25 வருடங்களுக்கு முன்பு மனநலம் (மெண்டல்) பாதிக்கப்பட்ட ரஜினிகாந்தை அமாவாசை, பௌர்ணமி நாட்களில் அவரது வீட்டில் கட்டிப் போடுவார்கள் என பத்திரிக்கையில் படித்து உள்ளேன். அவரது பேச்சு தமிழக அரசியல் குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை கொண்டு வந்தார். பின்னர் அதை வாபஸ் பெற்றார். கோவில்களில், மருத்துவமனைகள், சிறைச்சாலைகளில் என அனைத்து இடங்களிலும் மதமாற்ற முயற்சிகள் நடைபெறுகிறது. எனவே, தமிழக அரசியலை மீண்டும் அந்த சட்டத்தை கொண்டு வர வேண்டும். தமிழகத்தில் கும்பாபிஷேகம் செய்யப்படாமல் உள்ள அனைத்து கோவில்களிலும் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். பெரியாரின் தலைமையில் ராமர் அவமரியாதை செய்யப்பட்ட சேலத்தில் இந்த ராமநவமியன்று அகில பாரத இந்து மகா சபா சார்பில் ராமநவமி விழா நடத்தவும் ராமநாத ஊர்வலம் நடத்த முடிவு செய்துள்ளோம். வருகிற மார்ச் மாதம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட உள்ளது. இது போல தமிழகத்தில் 100 இடங்களில் ராமர் கோவில் கட்டும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். அயோத்தி போலவே காசியையும், மதுராவையும் இஸ்லாமியர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு கொடுத்துள்ளோம்.

பேட்டி:- த.பாலசுப்பிரமணியன் - தலைவர். (அகில பாரத இந்து மகா சபா)


Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.