ETV Bharat / state

சாலையில் சுற்றித்திரிந்த மாடுகள் கோசாலையில் ஒப்படைப்பு!

author img

By

Published : Nov 11, 2020, 10:56 AM IST

நாகப்பட்டினம்: மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட பகுதியில், போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிந்த மாடுகளை நகராட்சி ஊழியர்கள் பிடித்து கோசாலையில் அடைத்தனர்.

cow
cow

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் கடைவீதி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையில், போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கு இடையூறாக ஏராளமான மாடுகள் நகராட்சியின் முக்கிய வீதிகளில் சுற்றித்திரிந்து வந்தன.

இதனால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பல்வேறு இன்னலுக்கு ஆளாகினர். இதுகுறித்த பொதுமக்களின் புகாரைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் அண்ணாமலை தலைமையிலான சுகாதார ஆய்வாளர்கள், நகராட்சி ஊழியர்கள் மயிலாடுதுறை கண்ணாரத்தெரு பகுதிகளில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்து பாதுகாப்பாக கோசாலையில் ஒப்படைத்தனர்.

சாலையில் சுற்றித் திரிந்த மாடுகள் கோ சாலையில் ஒப்படைப்பு

பொறுப்புணர்வின்றி சாலைகளில் மாடுகளை அவிழ்த்து விடும் உரிமையாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும், நகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் சுற்றித் திரியும் மாடுகள் பிடிக்கப்படும் என நகராட்சி ஆணையர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பிகாரில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி: தோல்வியுற்றாலும் ஆர்ஜேடி கெத்துதான்!

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் கடைவீதி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையில், போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கு இடையூறாக ஏராளமான மாடுகள் நகராட்சியின் முக்கிய வீதிகளில் சுற்றித்திரிந்து வந்தன.

இதனால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பல்வேறு இன்னலுக்கு ஆளாகினர். இதுகுறித்த பொதுமக்களின் புகாரைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் அண்ணாமலை தலைமையிலான சுகாதார ஆய்வாளர்கள், நகராட்சி ஊழியர்கள் மயிலாடுதுறை கண்ணாரத்தெரு பகுதிகளில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்து பாதுகாப்பாக கோசாலையில் ஒப்படைத்தனர்.

சாலையில் சுற்றித் திரிந்த மாடுகள் கோ சாலையில் ஒப்படைப்பு

பொறுப்புணர்வின்றி சாலைகளில் மாடுகளை அவிழ்த்து விடும் உரிமையாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும், நகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் சுற்றித் திரியும் மாடுகள் பிடிக்கப்படும் என நகராட்சி ஆணையர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பிகாரில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி: தோல்வியுற்றாலும் ஆர்ஜேடி கெத்துதான்!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.