ETV Bharat / state

'தமிழில் வேதங்கள் பாட அரசு சம்பளம் தரவேண்டும்' - திருவாவடுதுறை ஆதீன மடாதிபதி - திருவாடுதுறை ஆதீன மடாதிபதி

நாகை: ஆலயங்களில் தமிழ் வேதங்களான தேவாரம், திருவாசகம் பாடும் ஓதுவார்களுக்கு போதிய சம்பளம் இல்லாத காரணத்தால் எண்ணிக்கை குறைந்து வருவதாக திருவாவடுதுறை ஆதீன மடாதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.

Thiruvaduthurai Athinam
author img

By

Published : Nov 18, 2019, 9:26 AM IST

நாகை மாவட்டம் குத்தாலம் அடுத்துள்ள திருவாவடுதுறை ஆதீனத்தில் சென்னை தமிழ்ச் சங்கம் மற்றும் திருவாவடுதுறை ஆதினம் இணைந்து நடத்திய தெய்வீக தேவார திருவிழா நடைபெற்றது. திருவாவடுதுறை ஆதீன மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், திருமூலர் திருமந்திரம் என்ற நூல் வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சென்னை தமிழ் சங்கத் தலைவர் தியாக.இளங்கோவன், தமிழ்நாடு அரசு இசைப்பள்ளி கலை மற்றும் பண்பாட்டுத் துறை இயக்குநர் பூரண புஷ்கலா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய திருவாவடுதுறை ஆதீன மடாதிபதி, "தமிழ் மொழியின் வளர்ச்சியில் தேவாரம், திருவாசகம் ஆகியவற்றிற்குப் பங்கு உண்டு. தெய்வப் பக்தியுடன் தமிழை வளர்த்தனர். இன்று ஆலயங்களில் தேவாரம் பாடும் ஓதுவார்கள் எண்ணிக்கை குறைந்து வருகின்றது.

போதிய சம்பளம் இல்லாததால் ஆலயங்களில் தமிழ் வேதங்கள் பாடுவதற்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனைச் சரிசெய்ய அரசே கோயில்களில் ஓதுவார்களை நியமித்து சம்பளம் வழங்க வேண்டும்" என்று கூறினார்.

நாகையில் நடைபெற்ற தெய்வீக தேவார திருவிழா

மேலும், உழவாரப் பணிகளைச் செய்வதற்கு தற்போது ஆட்கள் முன்வருவதில்லை என்றும், ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி அனைத்து சமுதாயத்தையும் அரவணைத்து நல்லது செய்வதுபோல தமிழ்நாடு அரசு செய்ய வேண்டும் என்றும் அவர் பேசினார்.

இதையும் படிங்க: 'பெருமாள் கோயிலுக்கு ஈ.சி.ஆரில் முதலமைச்சர் இடம் ஒதுக்கியுள்ளார்' - திருப்பதி தேவஸ்தானம்

நாகை மாவட்டம் குத்தாலம் அடுத்துள்ள திருவாவடுதுறை ஆதீனத்தில் சென்னை தமிழ்ச் சங்கம் மற்றும் திருவாவடுதுறை ஆதினம் இணைந்து நடத்திய தெய்வீக தேவார திருவிழா நடைபெற்றது. திருவாவடுதுறை ஆதீன மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், திருமூலர் திருமந்திரம் என்ற நூல் வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சென்னை தமிழ் சங்கத் தலைவர் தியாக.இளங்கோவன், தமிழ்நாடு அரசு இசைப்பள்ளி கலை மற்றும் பண்பாட்டுத் துறை இயக்குநர் பூரண புஷ்கலா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய திருவாவடுதுறை ஆதீன மடாதிபதி, "தமிழ் மொழியின் வளர்ச்சியில் தேவாரம், திருவாசகம் ஆகியவற்றிற்குப் பங்கு உண்டு. தெய்வப் பக்தியுடன் தமிழை வளர்த்தனர். இன்று ஆலயங்களில் தேவாரம் பாடும் ஓதுவார்கள் எண்ணிக்கை குறைந்து வருகின்றது.

போதிய சம்பளம் இல்லாததால் ஆலயங்களில் தமிழ் வேதங்கள் பாடுவதற்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனைச் சரிசெய்ய அரசே கோயில்களில் ஓதுவார்களை நியமித்து சம்பளம் வழங்க வேண்டும்" என்று கூறினார்.

நாகையில் நடைபெற்ற தெய்வீக தேவார திருவிழா

மேலும், உழவாரப் பணிகளைச் செய்வதற்கு தற்போது ஆட்கள் முன்வருவதில்லை என்றும், ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி அனைத்து சமுதாயத்தையும் அரவணைத்து நல்லது செய்வதுபோல தமிழ்நாடு அரசு செய்ய வேண்டும் என்றும் அவர் பேசினார்.

இதையும் படிங்க: 'பெருமாள் கோயிலுக்கு ஈ.சி.ஆரில் முதலமைச்சர் இடம் ஒதுக்கியுள்ளார்' - திருப்பதி தேவஸ்தானம்

Intro:ஆலயங்களில் தமிழ் வேதங்களான தேவாரம், திருவாசகம் பாடும் ஓதுவார்களுக்கு போதிய சம்பளம் இல்லாத காரணத்தால் எண்ணிக்கை குறைந்து வருகின்றது. கோவில்களில் ஓதுவார்களை நியமித்து சம்பளம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவாடுதுறை ஆதீனத்தில் நடைபெற்ற தெய்வீக தேவார திருவிழாவில் திருவாடுதுறை ஆதீனம் பேச்சு:-


Body:நாகை மாவட்டம் குத்தாலம் அடுத்துள்ள திருவாடுதுறை ஆதீனத்தில் சென்னை தமிழ் சங்கம் மற்றும் திருவாடுதுறை ஆதினம் இணைந்து நடத்திய தெய்வீக தேவார திருவிழா நடைபெற்றது.
திருவாடுதுறை ஆதீன மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற விழாவில், திருமூலர் திருமந்திரம் எனும் நூல் வெளியிடப்பட்டது. தேவார ஆசிரியர்கள், மற்றும் ஓதுவார் களுக்கு தெய்வீக தேவார தமிழ் விருதுகள் வழங்கப்பட்டன. சென்னை தமிழ் சங்கத் தலைவர் தியாக.இளங்கோவன், புதுடெல்லி சென்னை தமிழ் சங்க தலைவர் டாக்டர் வி.பாலசுப்பிரமணியன், மலேசியா தமிழ் சங்கத் தலைவர் இரா.மாணிக்கம், தமிழ்நாடு அரசு இசைப்பள்ளி கலை மற்றும் பண்பாட்டு துறை இயக்குனர் திருமதி பூரண புஷ்கலா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய திருவாடுதுறை ஆதீன மடாதிபதி, தமிழ் மொழியின் வளர்ச்சியில் தேவாரம், திருவாசகம் ஆகியவற்றிற்கு பங்கு உண்டு.
தெய்வ பக்தியுடன் தமிழை வளர்த்தனர். இன்று ஆலயங்களில் தேவாரம் பாடும் ஓதுவார்கள் எண்ணிக்கை குறைந்து வருகின்றது. போதிய சம்பளம் இல்லாததால் ஆலயங்களில் தமிழ் வேதங்கள் பாடுவதற்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய அரசே கோவில்களில் ஓதுவார்களை நியமித்து சம்பளம் வழங்க வேண்டும். உழவாரப்பணிகளை செய்வதற்கு தற்போது ஆட்கள் முன்வருவதில்லை என்றும், செலவு செய்து படித்த மாணவர்கள் வேலை கிடைக்காமல் ஏமாந்து போகிறார்கள். ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி அனைத்து சமுதாயத்தையும் அரவணைத்து நல்லது செய்கின்றார். அதுபோல தமிழக அரசு செய்ய வேண்டும் என்று பேசினார்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.