மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் மாதவன்(45). இவர் பொறையாரில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.
இவருக்கு சித்ரா என்ற பெண்ணுடன் திருமணமாகி ஒன்பது ஆண்டுகள் கடந்த நிலையில், குழந்தை இல்லை. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த வாரம் ஏற்பட்ட தகராறில் சித்ரா தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
சித்ரா மீண்டும் தனது வீட்டிற்கு வராததால் மாதவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவலறிந்து வந்த காவல் துறையினர், சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது உயிரிழப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மழையால் வீட்டின் சுவர் இடிந்து 11 வயது சிறுமி உயிரிழப்பு