ETV Bharat / state

நிவர் புயல்: தரங்கம்பாடியில் கடல் அலை சீற்றம் - அச்சப்படும் மீனவர்கள்

author img

By

Published : Nov 24, 2020, 9:33 PM IST

நாகப்பட்டினம்: நிவர் புயல் கடல் சீற்றத்தால் தரங்கம்பாடியில் கட்டப்பட்டு வரும் துறைமுகத்தில் கருங்கல் அலை தடுப்புகள் சேதமடைந்து கடலில் அடித்து செல்லப்பட்டதால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

nagapattinam
nagapattinam

நிவர் புயல் நாளை (நவ.24) மாலை புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என்று வானிலைஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயலால் அதி தீவிர மழை மற்றும் சூரைக்காற்று 110 கீலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க தமிழ்நாடு அரசு எச்சரித்துள்ளது.

அந்த வகையில், நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரையில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. கடந்த ஆண்டு முதல் 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மதிப்பீட்டில் தரங்கம்பாடியில் மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கான வேலைகள் தொடங்கி நடந்து வருகிறது. துறைமுகம் அமைப்பதற்காக கடலில் கருங்கற்களால் ஆன அலை தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டு கடலில், படகு நிறுத்தும் தளம் மற்றும் மீன்வலை கூடம் அமைக்கப்பட்டு வருகிறது.

தற்போது நிவர் புயல் கடல் சீற்றம் காரணமாக கடலில் அமைக்கப்பட்டுள்ள அலை தடுப்பின் பகுதி சேதமடைந்து கருங்கற்கள் கடலில், அடித்து செல்லப்பட்டு வருகிறது. அலை தடுப்புச் சுவரை மிகக் குறைந்த உயரத்தில் அமைக்கப்பட்டதால், அலைகள் அலை தடுப்புச் சுவரை தாண்டி துறைமுக பகுதியில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால், மீனவர்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: மத்திய அரசை கண்டித்து மத்திய தொழிற்சங்கங்கள் நவ.26இல் பொது வேலைநிறுத்தம்

நிவர் புயல் நாளை (நவ.24) மாலை புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என்று வானிலைஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயலால் அதி தீவிர மழை மற்றும் சூரைக்காற்று 110 கீலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க தமிழ்நாடு அரசு எச்சரித்துள்ளது.

அந்த வகையில், நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரையில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. கடந்த ஆண்டு முதல் 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மதிப்பீட்டில் தரங்கம்பாடியில் மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கான வேலைகள் தொடங்கி நடந்து வருகிறது. துறைமுகம் அமைப்பதற்காக கடலில் கருங்கற்களால் ஆன அலை தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டு கடலில், படகு நிறுத்தும் தளம் மற்றும் மீன்வலை கூடம் அமைக்கப்பட்டு வருகிறது.

தற்போது நிவர் புயல் கடல் சீற்றம் காரணமாக கடலில் அமைக்கப்பட்டுள்ள அலை தடுப்பின் பகுதி சேதமடைந்து கருங்கற்கள் கடலில், அடித்து செல்லப்பட்டு வருகிறது. அலை தடுப்புச் சுவரை மிகக் குறைந்த உயரத்தில் அமைக்கப்பட்டதால், அலைகள் அலை தடுப்புச் சுவரை தாண்டி துறைமுக பகுதியில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால், மீனவர்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: மத்திய அரசை கண்டித்து மத்திய தொழிற்சங்கங்கள் நவ.26இல் பொது வேலைநிறுத்தம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.