ETV Bharat / state

கணவன், மனைவியை தாக்கி துப்பாக்கியால் மிரட்டல்: முன்னாள் ராணுவவீரர் கைது

author img

By

Published : Jun 8, 2022, 9:56 PM IST

மயிலாடுதுறை அருகே சொத்து தகராறில் கணவன், மனைவியை தாக்கி துப்பாக்கியை காட்டி மிரட்டிய முன்னாள் ராணுவ வீரரை காவல் துறையினர் கைது செய்தனர்.

துப்பாக்கியை காட்டி மிரட்டிய முன்னாள் ராணுவ வீரர்
துப்பாக்கியை காட்டி மிரட்டிய முன்னாள் ராணுவ வீரர்

மயிலாடுதுறை: மன்னம்பந்தல் திருக்குளத்தெருவில் குடியிருந்து வருபவர்கள் தமிழ்செல்வன், சுதா தம்பதி. இவர்கள் குடியிருந்த வீட்டை கங்கா என்பவரிடம் ரூ. 12 லட்சம் கொடுத்து வாங்கியதாகவும், அதே வீட்டை இவர்களுக்கு முன்பே மூங்கில்தோட்டம் மெயின்ரோட்டை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவவீரர் பழனிவேல் வாங்கியதாகவும் இவர்கள் இருவரிடையே சொத்து தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த பிரச்சனை தொடர்பாக நேற்று (ஜுன். 7) பழனிவேல், சுதா வீட்டிற்கு சென்று வீட்டை காலி செய்ய சொல்லி வீட்டில் இருந்த பொருட்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளார். அதோடு சுதா, அவரது கணவர் தமிழ்செல்வன் ஆகியோரை தாக்கிய முன்னாள் ராணுவவீரர் தான் வைத்திருந்த துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார்.

துப்பாக்கியை காட்டி மிரட்டிய முன்னாள் ராணுவ வீரர்

இதில் காயமடைந்த தமிழ்செல்வன், சுதா ஆகியோர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து சுதா கொடுத்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் ஆம்ஸ்ஆக்ட், சாதியைசொல்லி திட்டியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பழனிவேலை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் அவரின் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சிகிச்சையை மறைத்து ஏன் திருமணம் செய்தாய்? கணவன் தகராறு: மனைவி தற்கொலை

மயிலாடுதுறை: மன்னம்பந்தல் திருக்குளத்தெருவில் குடியிருந்து வருபவர்கள் தமிழ்செல்வன், சுதா தம்பதி. இவர்கள் குடியிருந்த வீட்டை கங்கா என்பவரிடம் ரூ. 12 லட்சம் கொடுத்து வாங்கியதாகவும், அதே வீட்டை இவர்களுக்கு முன்பே மூங்கில்தோட்டம் மெயின்ரோட்டை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவவீரர் பழனிவேல் வாங்கியதாகவும் இவர்கள் இருவரிடையே சொத்து தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த பிரச்சனை தொடர்பாக நேற்று (ஜுன். 7) பழனிவேல், சுதா வீட்டிற்கு சென்று வீட்டை காலி செய்ய சொல்லி வீட்டில் இருந்த பொருட்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளார். அதோடு சுதா, அவரது கணவர் தமிழ்செல்வன் ஆகியோரை தாக்கிய முன்னாள் ராணுவவீரர் தான் வைத்திருந்த துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார்.

துப்பாக்கியை காட்டி மிரட்டிய முன்னாள் ராணுவ வீரர்

இதில் காயமடைந்த தமிழ்செல்வன், சுதா ஆகியோர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து சுதா கொடுத்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் ஆம்ஸ்ஆக்ட், சாதியைசொல்லி திட்டியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பழனிவேலை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் அவரின் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சிகிச்சையை மறைத்து ஏன் திருமணம் செய்தாய்? கணவன் தகராறு: மனைவி தற்கொலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.