ETV Bharat / state

நாகையில் எமன் சம்ஹார நிகழ்ச்சி! - eman samharam

நாகை: திருக்கடையூரில் அமைந்துள்ள அபிராமி அம்மன் சமேத அமிர்த கடேஸ்வரர் ஆலயத்தில் எமன் சம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.

நாகையில் எமன் சம்ஹார நிகழ்ச்சி!
author img

By

Published : Apr 16, 2019, 12:42 PM IST

நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் அமைந்துள்ள அபிராமி அம்மன் சமேத அமிர்த கடேஸ்வரர் ஆலயம் வரலாற்று புகழ் பெற்றது.

இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் நடைபெறும் பிரம்மோற்சவத்தில் எமன் சம்ஹாரம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் கால சம்ஹாரமூர்த்தி, பாலாம்பிகையுடன் வீர நடனம் புரிதல் நிகழ்வு, பின்னர் எமன் எருமைக்கடா வாகனத்தில் மார்க்கண்டேயரை துரத்தும் நிகழ்வு, இதைத்தொடர்ந்து எமனை இறைவன் சம்ஹாரம் செய்ய முயற்சிக்கும் நிகழ்வுகள் இடம் பெற்றன.

நாகையில் எமன் சம்ஹார நிகழ்ச்சி!

இந்நிகழ்சியில் தருமபுரி ஆதின இளைய மடாதிபதி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் அமைந்துள்ள அபிராமி அம்மன் சமேத அமிர்த கடேஸ்வரர் ஆலயம் வரலாற்று புகழ் பெற்றது.

இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் நடைபெறும் பிரம்மோற்சவத்தில் எமன் சம்ஹாரம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் கால சம்ஹாரமூர்த்தி, பாலாம்பிகையுடன் வீர நடனம் புரிதல் நிகழ்வு, பின்னர் எமன் எருமைக்கடா வாகனத்தில் மார்க்கண்டேயரை துரத்தும் நிகழ்வு, இதைத்தொடர்ந்து எமனை இறைவன் சம்ஹாரம் செய்ய முயற்சிக்கும் நிகழ்வுகள் இடம் பெற்றன.

நாகையில் எமன் சம்ஹார நிகழ்ச்சி!

இந்நிகழ்சியில் தருமபுரி ஆதின இளைய மடாதிபதி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Intro:திருக்கடையூர் அபிராமி உடனாகிய அமிர்த கடேஸ்வரர் ஆலயத்தில் புகழ்பெற்ற எமன் சம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


Body:நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் அமைந்துள்ள அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயம் வரலாற்றுப் புகழ் பெற்றதாகும். புராணகாலத்தில், பக்த மார்க்கண்டேயர் உயிரைப் பறிக்க எமன் பாசக்கயிற்றை வீசியபோது, மார்க்கண்டேயர் சிவலிங்கத்தை கட்டியணைத்தார். அப்போது இறைவன் தோன்றி எமனை சம்ஹாரம் செய்ததாக ஆலய வரலாறு கூறுகின்றது. பின்னர் பூமாதேவியின் வேண்டுகோளுக்கு இணங்க எமனை சிவபெருமான் மீண்டும் உயிர்ப்பித்தார். இதனால் இங்கு ஆயுள் சம்பந்தமான வழிபாடுகள், 60ம் கல்யாணம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும் .இந்த ஆலயத்தின் வரலாற்றை விளக்கும் வகையில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் நடைபெறும் பிரம்மோற்சவத்தில் எமன் சம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறும் இதனை முன்னிட்டு கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான எமனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி இன்று நள்ளிரவு நடைபெற்றது. இதனையொட்டி காலசம்ஹாரமூர்த்தி, பாலாம்பிகையுடன் வீர நடன மண்டபத்திற்கு எழுந்தருளி வீர நடனம் புரிந்தார். பின்னர் எமன் எருமைக்கடா வாகனத்தில் மார்க்கண்டேயரை துரத்தும் நிகழ்ச்சியும், தொடர்ந்து எமனை இறைவன் சம்ஹாரம் செய்யும் முயற்சியும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் தருமபுர ஆதின இளையமடாதிபதி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.