ETV Bharat / state

சீமானுக்கு எதிரான புகார் மனு: பெயர் போடுவதில் காங்கிரஸ் கட்சியினரிடையே வாக்குவாதம் - nagai district news

நாகை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்ய வலியுறுத்தி நாகை நகர காவல்நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் அளித்த புகார் மனுவில் நிர்வாகிகளின் பெயர் போடுவதில் முன்னுரிமை வழங்கப்படவில்லை எனக் கூறி இரு நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காங்கிரஸ் கட்சியினர்
author img

By

Published : Oct 16, 2019, 3:07 PM IST

தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதிகளுக்கு வரும் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, கடந்த 12 ஆம் தேதி விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை குறித்து அவதூறாக பேசி இருந்தார். இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சீமான் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் 50க்கும் மேற்பட்டோர் நாகை நகர காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.

ராஜீவ் காந்தி கொலை குறித்து அவதூறாக பேசிய சீமான் மீது சட்ட நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்ய வேண்டும் என புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

அந்த புகார் மனுவில் கட்சியினர் பெயரை குறிப்பிட்டதில் முன்னுரிமை வழங்கப்படவில்லை எனக் கூறி மாநில பொதுக்குழு உறுப்பினர்களான நவ்ஷாத் அலி மற்றும் அமிர்தராஜ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

வாக்குவாதத்தில் ஈடுபடும் காங்கிரசார்

இதையும் படிங்க:ஏழு பேர் விடுதலை; ஆளுநரிடம் விளக்கம் கேட்க முடியாது - தமிழ்நாடு அரசு

தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதிகளுக்கு வரும் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, கடந்த 12 ஆம் தேதி விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை குறித்து அவதூறாக பேசி இருந்தார். இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சீமான் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் 50க்கும் மேற்பட்டோர் நாகை நகர காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.

ராஜீவ் காந்தி கொலை குறித்து அவதூறாக பேசிய சீமான் மீது சட்ட நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்ய வேண்டும் என புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

அந்த புகார் மனுவில் கட்சியினர் பெயரை குறிப்பிட்டதில் முன்னுரிமை வழங்கப்படவில்லை எனக் கூறி மாநில பொதுக்குழு உறுப்பினர்களான நவ்ஷாத் அலி மற்றும் அமிர்தராஜ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

வாக்குவாதத்தில் ஈடுபடும் காங்கிரசார்

இதையும் படிங்க:ஏழு பேர் விடுதலை; ஆளுநரிடம் விளக்கம் கேட்க முடியாது - தமிழ்நாடு அரசு

Intro:தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்ய வலியுறுத்தி நாகை நகர காவல்நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் புகார். புகார் மனுவில் கட்சியினர் பெயரை போடுவதில் ஏற்பட்ட சிக்கல் : காவல் நிலைய வாயிலில் வாக்குவாதம்.Body: தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்ய வலியுறுத்தி நாகை நகர காவல்நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் புகார். புகார் மனுவில் கட்சியினர் பெயரை போடுவதில் ஏற்பட்ட சிக்கல் : காவல் நிலைய வாயிலில் வாக்குவாதம்.

கடந்த 12 -ஆம் தேதி விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி உயிரிழப்பு குறித்து அவதூறாக பேசி இருந்தார். இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் 50-க்கும் மேற்பட்டோர் நாகை நகர காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து அவதூறாக பேசிய சீமான் மீது சட்ட நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்ய வேண்டும் என புகார் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதனை தொடர்ந்து காவல் நிலைய வாயிலில் முன்பு நிலையத்தில் கொடுக்க பட்ட புகார் மனுவில் கட்சியினர் பெயரை எழுதியது முன்னுரிமை வழங்கப்படவில்லை என கூறி மாநில பொதுக்குழு உறுப்பினர்களான நவ்ஷாத் அலி மற்றும் அமிர்தராஜ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பேட்டி ; ராமலிங்கம், மாநில பொதுக்குழு உறுப்பினர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.