ETV Bharat / state

Video:நில உரிமையாளரைத்தாக்கி ஆக்கிரமிப்பு செய்ய முயன்ற திமுக ஊராட்சி மன்றத்தலைவியின் கணவர்

சீர்காழி அருகே திமுக ஊராட்சி மன்றத்தலைவியின் கணவர் ஆக்கிரமிப்பு செய்த இடத்தில் குடியிருந்து வருபவரை விரட்டி, அவர்களைத்தாக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

author img

By

Published : Oct 7, 2022, 4:56 PM IST

நில உரிமையாளரை தாக்கி ஆக்கிரமிப்பு செய்ய முயன்ற திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர்; வைரல் வீடியோ
நில உரிமையாளரை தாக்கி ஆக்கிரமிப்பு செய்ய முயன்ற திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர்; வைரல் வீடியோ

மயிலாடுதுறை: சீர்காழி அடுத்த காத்திருப்பு கிராமத்தின் ஊராட்சி மன்றத்தலைவி அன்புமணி என்பரின் கணவர் மணிமாறன், இடத்தகராறு காரணமாக பிரகலாதன் என்பவரைத்தாக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

காத்திருப்பு கிராமத்தில் ஊராட்சி மன்றத்தலைவியாக திமுகவைச்சேர்ந்த அன்புமணி இருந்து வருகிறார். இவரது கணவரும் முன்னாள் திமுக ஊராட்சி மன்ற தலைவருமான மணிமாறன் மற்றும் அவரது மகன்கள் இணைந்து, இவரது வீட்டின் அருகே உள்ள பிரகலாதன் என்பவரின் இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய, பல ஆண்டுகளாக தொடர்ந்து சண்டை இட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று(அக். 6) மாலை மணிமாறன் மற்றும் அவரது இரண்டு மகன்கள் சேர்ந்து பிரகலாதன் அனுபவித்து வரும் இடத்தைச்சுற்றி வைக்கப்பட்டிருந்த வேலியை தீ வைத்துக்கொளுத்தினராம். அப்போது இரு தரப்புக்கு இடையே ஏற்பட்ட தகராறில் பிரகலாதனையும் அவர் தந்தை மணியையும், மணிமாறன் தரப்பினர் கட்டையால் அடித்ததாகவும் கூறப்படுகிறது.

வைரல் வீடியோ

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த பிரகலாதன் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்நிலையில் திமுக ஊராட்சி மன்றத்தலைவியின் கணவர் மணிமாறன், பிரகலாதன் குடும்பத்தினரை அடித்து விரட்டும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.

இதையும் படிங்க: கருணாநிதி இருந்திருந்தால் எங்களுக்கு வாழ்க்கை கிடைத்திருக்கும் - விரிவுரையாளர்கள் வருத்தம்

மயிலாடுதுறை: சீர்காழி அடுத்த காத்திருப்பு கிராமத்தின் ஊராட்சி மன்றத்தலைவி அன்புமணி என்பரின் கணவர் மணிமாறன், இடத்தகராறு காரணமாக பிரகலாதன் என்பவரைத்தாக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

காத்திருப்பு கிராமத்தில் ஊராட்சி மன்றத்தலைவியாக திமுகவைச்சேர்ந்த அன்புமணி இருந்து வருகிறார். இவரது கணவரும் முன்னாள் திமுக ஊராட்சி மன்ற தலைவருமான மணிமாறன் மற்றும் அவரது மகன்கள் இணைந்து, இவரது வீட்டின் அருகே உள்ள பிரகலாதன் என்பவரின் இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய, பல ஆண்டுகளாக தொடர்ந்து சண்டை இட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று(அக். 6) மாலை மணிமாறன் மற்றும் அவரது இரண்டு மகன்கள் சேர்ந்து பிரகலாதன் அனுபவித்து வரும் இடத்தைச்சுற்றி வைக்கப்பட்டிருந்த வேலியை தீ வைத்துக்கொளுத்தினராம். அப்போது இரு தரப்புக்கு இடையே ஏற்பட்ட தகராறில் பிரகலாதனையும் அவர் தந்தை மணியையும், மணிமாறன் தரப்பினர் கட்டையால் அடித்ததாகவும் கூறப்படுகிறது.

வைரல் வீடியோ

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த பிரகலாதன் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்நிலையில் திமுக ஊராட்சி மன்றத்தலைவியின் கணவர் மணிமாறன், பிரகலாதன் குடும்பத்தினரை அடித்து விரட்டும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.

இதையும் படிங்க: கருணாநிதி இருந்திருந்தால் எங்களுக்கு வாழ்க்கை கிடைத்திருக்கும் - விரிவுரையாளர்கள் வருத்தம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.