ETV Bharat / state

மதுவாங்க காரைக்கால் வழியாக படையெடுக்கும் குடிமகன்கள் : தொற்று அதிகரிக்கும் அபாயம்

நாகப்பட்டினம்: பொது முடக்க தளர்வுகள் வழங்கப்படாததால் காரைக்கால் வழியாக படையெடுக்கும் குடிமகன்களால் கரோனா தொற்று அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

author img

By

Published : Jun 14, 2021, 2:19 AM IST

மதுவாங்க காரைக்கால் வழியாக படையெடுக்கும் குடிமகன்கள் : தொற்று அதிகரிக்கும் அபாயம்
மதுவாங்க காரைக்கால் வழியாக படையெடுக்கும் குடிமகன்கள் : தொற்று அதிகரிக்கும் அபாயம்

தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் கடந்த சில நாள்களாக குறைய தொடங்கியுள்ளது.

இதன்காரணமாக கரோனா தொற்று பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில், பொது முடக்கத்தில் தமிழ்நாடு அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளது. மேலும் டெல்டா மாவட்டங்கள் உள்ளி்ட்ட 11 மாவட்டங்களில் தொற்று குறையாத காரணத்தால் தளர்வில்லாத பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் மதுபானக்கடைகள் அண்மையில் திறக்கப்பட்டன. இதன்காரணமாக அண்டை மாவட்டங்களிலிருந்து மது வாங்க பல குடிமகன்கள் புதுச்சேரி மாநிலத்திற்கு படையெடுத்து வருகின்றனர்.

புதுச்சேரி மாநிலத்திற்குள்பட்ட காரைக்கால் மாவட்டத்திற்கு தஞ்சாவூர், அரியலுார், பெரம்பலுார் பகுதியை ஒட்டியுள்ள தரங்கம்பாடி வழியாக இருசக்கர வாகனங்களில் வரும் குடிமகன்கள், மாவட்ட எல்லையில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு முன்பாகவே இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு, ஆற்றின் வழியாக நடந்து சென்று மதுவாங்கி வருகின்றனர்.

மதுவாங்க காரைக்கால் வழியாக படையெடுக்கும் குடிமகன்கள்

சோதனைச்சாவடியில் காவல்துறையினர் கெடுபிடி காட்டி, வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வந்தாலும், குடிமகன்களின் வருகையை கட்டுப்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது.

இன்று முதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ளன. இருப்பினும் தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் தளர்வுகள் அறிவிக்கப்படவில்லை

இதன் காரணமாக இந்த மாவட்டங்களிலிருந்து மதுப்பிரியர்கள் காரைக்காலுக்கு வரும் சூழல் உள்ளதால் காவல்துறையினர் சோதனையை தீவிரப்படுத்தி, கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த நடவடடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு 50 படுக்கைகள் வழங்கல்!

தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் கடந்த சில நாள்களாக குறைய தொடங்கியுள்ளது.

இதன்காரணமாக கரோனா தொற்று பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில், பொது முடக்கத்தில் தமிழ்நாடு அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளது. மேலும் டெல்டா மாவட்டங்கள் உள்ளி்ட்ட 11 மாவட்டங்களில் தொற்று குறையாத காரணத்தால் தளர்வில்லாத பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் மதுபானக்கடைகள் அண்மையில் திறக்கப்பட்டன. இதன்காரணமாக அண்டை மாவட்டங்களிலிருந்து மது வாங்க பல குடிமகன்கள் புதுச்சேரி மாநிலத்திற்கு படையெடுத்து வருகின்றனர்.

புதுச்சேரி மாநிலத்திற்குள்பட்ட காரைக்கால் மாவட்டத்திற்கு தஞ்சாவூர், அரியலுார், பெரம்பலுார் பகுதியை ஒட்டியுள்ள தரங்கம்பாடி வழியாக இருசக்கர வாகனங்களில் வரும் குடிமகன்கள், மாவட்ட எல்லையில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு முன்பாகவே இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு, ஆற்றின் வழியாக நடந்து சென்று மதுவாங்கி வருகின்றனர்.

மதுவாங்க காரைக்கால் வழியாக படையெடுக்கும் குடிமகன்கள்

சோதனைச்சாவடியில் காவல்துறையினர் கெடுபிடி காட்டி, வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வந்தாலும், குடிமகன்களின் வருகையை கட்டுப்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது.

இன்று முதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ளன. இருப்பினும் தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் தளர்வுகள் அறிவிக்கப்படவில்லை

இதன் காரணமாக இந்த மாவட்டங்களிலிருந்து மதுப்பிரியர்கள் காரைக்காலுக்கு வரும் சூழல் உள்ளதால் காவல்துறையினர் சோதனையை தீவிரப்படுத்தி, கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த நடவடடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு 50 படுக்கைகள் வழங்கல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.