ETV Bharat / state

'சைக்கோ' பட பாணியில் நடந்த கொலைச் சம்பவம் - தலையைத் தேடிவரும் காவல்துறை!

author img

By

Published : Mar 7, 2020, 2:58 PM IST

மதுரை: திருப்பரங்குன்றம் வைக்கம் பெரியார் நகரில் இளைஞரை கழுத்தறுத்து கொலை செய்து, தலையை மட்டும் எடுத்துச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

vaikam periyar nagar murderers take head and leave body on spot
vaikam periyar nagar murderers take head and leave body on spot

மதுரை மாவட்டம், அவனியாபுரம் அருகே வைக்கம் பெரியார் நகரில், இன்று காலை தலை இல்லாமல் கிடந்த உடலைக் கண்ட நாய் குறைத்தது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் பார்த்தனர். அப்போது அங்கு இறந்த நிலையில் தலை இல்லாமல் கிடந்த உடலை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து சிலைமான் காவல் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த சிலைமான், அவனியாபுரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். முதல்கட்ட விசாரணையில், நேற்றிரவு சிலர் மது அருந்த வைக்கம் பெரியார் நகர் பகுதிக்கு வந்திருக்க வேண்டும். அப்போது தகராறு ஏற்பட்டு கொலை நடந்திருக்கலாம். கொலை செய்து தலையை எடுத்துச் சென்றதால், ஏற்கனவே முன்விரோதத்தால் திட்டமிட்டு கொலை நிகழ்ந்திருக்க வேண்டும் என்றும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

இளைஞரை கொலை செய்து தலையை தூக்கிச் சென்ற நபர்கள்.

தற்போது வரை கொலை செய்யப்பட்ட நபர் யார் என்று அடையாளம் தெரியவில்லை. சம்பவ இடத்துக்கு மதுரை மாநகர் துணை ஆணையர் கார்த்திக் நேரில் சென்று விசாரணை நடத்தினார். கொலை செய்யப்பட்ட நபரின் உடல் கைப்பற்றப்பட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இளைஞரின் தலையை காவல்துறையினர் அப்பகுதி முழுவதும் தேடி வருகின்றனர்.

இளைஞரை கொலை செய்துவிட்டு, தலையை தூக்கிச் சென்ற கொடூரம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சிலைமான் காவல்துறையினர் தலைமறைவான கொலையாளிகளை தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க... கொலை செய்து மருத்துவமனைக்கு தம்பியை தூக்கி வந்த அண்ணன்!

மதுரை மாவட்டம், அவனியாபுரம் அருகே வைக்கம் பெரியார் நகரில், இன்று காலை தலை இல்லாமல் கிடந்த உடலைக் கண்ட நாய் குறைத்தது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் பார்த்தனர். அப்போது அங்கு இறந்த நிலையில் தலை இல்லாமல் கிடந்த உடலை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து சிலைமான் காவல் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த சிலைமான், அவனியாபுரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். முதல்கட்ட விசாரணையில், நேற்றிரவு சிலர் மது அருந்த வைக்கம் பெரியார் நகர் பகுதிக்கு வந்திருக்க வேண்டும். அப்போது தகராறு ஏற்பட்டு கொலை நடந்திருக்கலாம். கொலை செய்து தலையை எடுத்துச் சென்றதால், ஏற்கனவே முன்விரோதத்தால் திட்டமிட்டு கொலை நிகழ்ந்திருக்க வேண்டும் என்றும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

இளைஞரை கொலை செய்து தலையை தூக்கிச் சென்ற நபர்கள்.

தற்போது வரை கொலை செய்யப்பட்ட நபர் யார் என்று அடையாளம் தெரியவில்லை. சம்பவ இடத்துக்கு மதுரை மாநகர் துணை ஆணையர் கார்த்திக் நேரில் சென்று விசாரணை நடத்தினார். கொலை செய்யப்பட்ட நபரின் உடல் கைப்பற்றப்பட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இளைஞரின் தலையை காவல்துறையினர் அப்பகுதி முழுவதும் தேடி வருகின்றனர்.

இளைஞரை கொலை செய்துவிட்டு, தலையை தூக்கிச் சென்ற கொடூரம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சிலைமான் காவல்துறையினர் தலைமறைவான கொலையாளிகளை தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க... கொலை செய்து மருத்துவமனைக்கு தம்பியை தூக்கி வந்த அண்ணன்!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.