ETV Bharat / state

வழக்கறிஞர் நந்தினிக்கு ஆதரவாக உண்ணாவிரதம்: சகோதரி கைது - உண்ணாவிரதம்

மதுரை: வழக்கறிஞர் நந்தினிக்கு ஆதரவாக உண்ணாவிரதம் மேற்கொள்ள இருந்த அவரது சகோதரி நிரஞ்சனாவை, போலீசார் கைது செய்தனர்.

நிரஞ்சனா போலீஸாரால் கைது.
author img

By

Published : Jul 8, 2019, 11:42 AM IST

Updated : Jul 8, 2019, 2:55 PM IST

2014ஆம் ஆண்டு டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம் நடத்திய வழக்கறிஞர் நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தன் மீது திருப்பத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 27ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, ஐ.பி.சி. 328-படி, டாஸ்மாக் மூலம் போதைப்பொருள் விற்கப்படுவது குற்றமில்லையா என நீதிபதியிடம் நந்தினி கேள்வி எழுப்பினார்.

இதனால் அவர் மீதும், அவரது தந்தை மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். ஜூலை 5ஆம் தேதி நந்தினிக்கும், குணா ஜோதிபாசு என்பவருக்கும் மதுரையில் திருமணம் நடக்க இருந்த நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவால் திருமணம் தள்ளி வைக்கப்பட்டது.

நிரஞ்சனா ஆதரவுகோரி பதிவிட்ட வீடியோ

இந்நிலையில், இருவரின் சிறை தண்டனையை கண்டித்து நந்தினியின் சகோதரியும், மதுரை சட்டக்கல்லூரியில் ஐந்தாம் ஆண்டு பயிலும் மாணவியுமான நிரஞ்சனா ஆனந்தன், இன்று காலை சட்டக்கல்லூரி முன்பாக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்தார்.

நந்தினிக்கு ஆதரவாக உண்ணாவிரதம் மேற்கொள்ளவிருந்த நிரஞ்சனா போலீஸாரால் கைது

இதற்கு, ஆதரவு வழங்கக்கோரி சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றையும் பதிவிட்டார். இதையறிந்த மதுரை காவல்துறையினர் நிரஞ்சனாவை, கைது செய்தனர்.

2014ஆம் ஆண்டு டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம் நடத்திய வழக்கறிஞர் நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தன் மீது திருப்பத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 27ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, ஐ.பி.சி. 328-படி, டாஸ்மாக் மூலம் போதைப்பொருள் விற்கப்படுவது குற்றமில்லையா என நீதிபதியிடம் நந்தினி கேள்வி எழுப்பினார்.

இதனால் அவர் மீதும், அவரது தந்தை மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். ஜூலை 5ஆம் தேதி நந்தினிக்கும், குணா ஜோதிபாசு என்பவருக்கும் மதுரையில் திருமணம் நடக்க இருந்த நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவால் திருமணம் தள்ளி வைக்கப்பட்டது.

நிரஞ்சனா ஆதரவுகோரி பதிவிட்ட வீடியோ

இந்நிலையில், இருவரின் சிறை தண்டனையை கண்டித்து நந்தினியின் சகோதரியும், மதுரை சட்டக்கல்லூரியில் ஐந்தாம் ஆண்டு பயிலும் மாணவியுமான நிரஞ்சனா ஆனந்தன், இன்று காலை சட்டக்கல்லூரி முன்பாக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்தார்.

நந்தினிக்கு ஆதரவாக உண்ணாவிரதம் மேற்கொள்ளவிருந்த நிரஞ்சனா போலீஸாரால் கைது

இதற்கு, ஆதரவு வழங்கக்கோரி சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றையும் பதிவிட்டார். இதையறிந்த மதுரை காவல்துறையினர் நிரஞ்சனாவை, கைது செய்தனர்.

Intro:நந்தினிக்கு ஆதரவாக உண்ணாவிரதம் மேற்கொள்ளவிருந்த நிரஞ்சனா போலீஸாரால் கைது

மது ஒழிப்புப் போராளி வழக்குரைஞர் நந்தினியின் கைதைக் கண்டித்து இன்றிலிருந்து காலவரையற்ற உண்ணாவிரதம் அறிவித்திருந்த அவரது தங்கை நிரஞ்சனா ஆனந்தனை அவரது வீட்டின் முன்பாக இன்று காலை போலீஸார் கைது செய்தனர்.
Body:நந்தினிக்கு ஆதரவாக உண்ணாவிரதம் மேற்கொள்ளவிருந்த நிரஞ்சனா போலீஸாரால் கைது

மது ஒழிப்புப் போராளி வழக்குரைஞர் நந்தினியின் கைதைக் கண்டித்து இன்றிலிருந்து காலவரையற்ற உண்ணாவிரதம் அறிவித்திருந்த அவரது தங்கை நிரஞ்சனா ஆனந்தனை அவரது வீட்டின் முன்பாக இன்று காலை போலீஸார் கைது செய்தனர்.

கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டத்தின்போது அவர்மீது வழக்கொன்று காவல்துறையால் பதிவு செய்யப்பட்டது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 27-ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

அவ்வழக்கின் குறுக்கு விசாரணையின்போது டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படுவது போதைப் பொருளா..? உணவுப் பொருளா..? அல்லது மருந்துப் பொருளா..? இந்திய குற்றவியல் சட்டம் 328-ன்படி டாஸ்மாக் மூலம் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவது குற்றமில்லையா..? என்று நந்தினியின் தரப்பில் வாதம் செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து நீதிமன்ற அவதூறு என்ற அடிப்படையில் நீதிபதி சாமுண்டீஸ்வரி பிரபா வருகின்ற ஜூலை 9-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து கடந்த 27-ஆம் தேதி நந்தினி மற்றும் அவரது தந்தையார் ஆனந்தன் ஆகியோர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

வருகின்ற ஜூலை 5-ஆம் தேதி நந்தினிக்கும் குணா ஜோதிபாசு என்பவருக்கும் மதுரையில் திருமணம் நடைபெறவுள்ள நிலையில், திருப்பத்தூர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. சமூக வலை தளங்களிலும் நீதிமன்றத்தில் இந்த உத்தரவு தொடர்பாக கடந்த எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

இந்நிலையில் நந்தினி மற்றும் ஆனந்தன் ஆகியோரின் கைதைக் கண்டித்து நந்தினியின் தங்கையும், மதுரை சட்டக்கல்லூரியில் ஐந்தாம் ஆண்டு பயிலும் நிரஞ்சனா ஆனந்தன் இன்று காலை 9 மணி முதல் சட்டக்கல்லூரி முன்பாக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்திருந்தார். இதற்காக ஆதரவு கோரி சமூக வலைதளங்களில் தனது வீடியோவையும் வைரலாக்கியிருந்தார்.

உண்ணாவிரதப் போராட்டத்திற்காக இன்று காலை புதூரிலுள்ள தனது வீட்டிலிருந்து வெளியேறும் சமயம் நிரஞ்சனா ஆனந்தன் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
Conclusion:null
Last Updated : Jul 8, 2019, 2:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.