மதுரை உலக தமிழ்ச் சங்கத்தில் தமிழன்னை சிலை என்ற பெயரில் ஆரியமாதா சிலை அமைக்கப்படவுள்ளதற்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடைபெற்றது.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள திருவள்ளுவர் சிலை முன்பு நடைபெற்ற இப்போரட்டத்தில் தமிழ் தேசிய இயக்கம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்புகள் கலந்துகொண்டனர்.
போராட்டத்திற்குப் பின்பு செய்தியாளர்களை சந்தித்த தமிழ்த் தேசிய பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன்,
தமிழன்னை சிலையை தமிழ்ப் பண்பாட்டோடு அமைக்க வேண்டும், ஆரிய கலப்போடு தமிழன்னை சிலையை நிறுவ முயற்சிக்கும் தமிழ்நாடு அரசு தன் முடிவை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். கண்டன போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். தமிழன்னை சிலை நிறுவ தமிழ் நாடு அரசு தற்போது தடை விதித்து ஆணை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.