ETV Bharat / state

'பஞ்சாயத்து தலைவர் நாற்காலியில் கூட அமர முடியவில்லை' பட்டியலின ஊராட்சி தலைவர்களின் தீராத வேதனை.. அரசு நடவடிக்கை தேவை

author img

By

Published : Apr 29, 2023, 11:05 PM IST

'சாதியின் அடிப்படையில் தொடரும் பாகுபாடு நீடிக்கின்ற காரணத்தால் பஞ்சாயத்து தலைவருக்கான நாற்காலியில் கூட அமர முடியாத நிலை உள்ளது' என ஊராட்சித் தலைவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

பஞ்சாயத்து தலைவருக்கான நாற்காலியில் கூட அமர முடியாத நிலை உள்ளது என ஊராட்சி தலைவர்கள் வேதனை

மதுரை: எவிடென்ஸ் அமைப்பின் (Evidence Executive Director A.Kathir) சார்பாக, 'பட்டியலின பஞ்சாயத்து தலைவர்கள் பேசுகிறார்கள்' என்ற தலைப்பில் கலந்தாய்வு கூட்டம் மதுரையில் இன்று (ஏப்.29) நடைபெற்றது. இந்த கலந்தாய்வு கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பட்டியலின பஞ்சாயத்து தலைவர்கள் கலந்துகொண்டனர்.

தமிழ்நாட்டில் பட்டியலின பஞ்சாயத்து தலைவர்கள் மீது தொடர்ந்து சாதிய ரீதியான தீண்டாமைகளும், வன்கொடுமைகளும் நடந்து வருவதாக எழுந்த புகாரை முன்வைத்து எவிடென்ஸ் அமைப்பு மாநிலம் முழுவதும் உள்ள 19 மாவட்டங்களில் 114 தலைவர்களிடம் 40 நாட்களாக ஆய்வு நடத்தியது.

இது தொடர்பாக, இன்று மதுரை தமிழ் சங்கம் சாலையில் அமைந்துள்ள தனியார் விடுதியில் பாதிக்கப்பட்ட பட்டியலின பஞ்சாயத்து தலைவர்கள் பேசுகிறார்கள் என்ற தலைப்பில் மாநில அளவிலான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், மாணவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பட்டியலின பஞ்சாயத்து தலைவர்கள் பங்கேற்று தங்களுக்கு நடந்த கொடுமைகளை சாட்சிகளாக பதிவு செய்தனர்.

அப்போது பேசிய பிரபல மனித உரிமை ஆர்வலர் மஞ்சுளா பிரதீப், பட்டியலின பெண் ஊராட்சி மன்ற தலைவிகள் உட்பட பலரும் இங்கு அனுபவிக்கு பிரச்சனைகளை மாநில அரசு, காவல்துறை மற்றும் நம்மை சுற்றியுள்ள அமைப்புகள் தான் கேள்வி கேட்க வேண்டும் என்றார். மேலும், சமூகத்தில் மற்ற பிரச்சனைகளுக்கு நடுவே, பட்டியலின பெண்கள் கூடுதலான பிரச்சனைகளை தங்கள் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டுள்ளதாக வேதனையுடன் கூறினார்.

இதையும் படிங்க: Republic Day 2023:குடியரசு தின விழா; பட்டியல் இனத்தவர்களுக்கு சாதி பாகுபாடின்றி கொடியேற்ற நடவடிக்கை

இந்த கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலான பெண் பஞ்சாயத்து தலைவர்கள் தங்களை பட்டியலின பெண்கள் என சாதிய காரணம் காட்டி தங்கள் பகுதியில் உள்ள பல தரப்பினராலும் அவமரியாதை செய்யப்பட்டதாக பெண் பட்டியலின பஞ்சாயத்து தலைவர்கள், பஞ்சாயத்து துணை தலைவர்கள் பஞ்சாயத்து செயலாளர்கள் மற்றும் பிடிஓ-கள் போன்ற அதிகாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில், இதுகுறித்து சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கால்பிரவு ஊராட்சி மன்ற தலைவியான ராஜேஸ்வரி பேசுகையில், "போட்டியின்றி வெற்றி பெற்று கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக ஊராட்சி மன்ற தலைவியாக பதவி வகித்து வருகிறேன். ஏற்கனவே, பதவியில் இருந்த பஞ்சாயத்து தலைவர் நாற்காலியில் அமர விடாமலும், அலுவலக சாவியை கொடுக்காமலும் தற்போது வரையில், சாதியின் அடிப்படையில் அதிகாரம் செய்தும் மிரட்டுகிறார். இதற்கு தக்க நடவடிக்கை மேற்கொண்டு தங்களை பணி செய்ய அனுமதி பெற்று தர வேண்டும்"என்று வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: சாதி பெயரைச் சொல்லி திட்டியதாக நெல்லை மேயர் மீது புகார்.. தொடரும் திமுக உட்கட்சி பூசல்

பஞ்சாயத்து தலைவருக்கான நாற்காலியில் கூட அமர முடியாத நிலை உள்ளது என ஊராட்சி தலைவர்கள் வேதனை

மதுரை: எவிடென்ஸ் அமைப்பின் (Evidence Executive Director A.Kathir) சார்பாக, 'பட்டியலின பஞ்சாயத்து தலைவர்கள் பேசுகிறார்கள்' என்ற தலைப்பில் கலந்தாய்வு கூட்டம் மதுரையில் இன்று (ஏப்.29) நடைபெற்றது. இந்த கலந்தாய்வு கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பட்டியலின பஞ்சாயத்து தலைவர்கள் கலந்துகொண்டனர்.

தமிழ்நாட்டில் பட்டியலின பஞ்சாயத்து தலைவர்கள் மீது தொடர்ந்து சாதிய ரீதியான தீண்டாமைகளும், வன்கொடுமைகளும் நடந்து வருவதாக எழுந்த புகாரை முன்வைத்து எவிடென்ஸ் அமைப்பு மாநிலம் முழுவதும் உள்ள 19 மாவட்டங்களில் 114 தலைவர்களிடம் 40 நாட்களாக ஆய்வு நடத்தியது.

இது தொடர்பாக, இன்று மதுரை தமிழ் சங்கம் சாலையில் அமைந்துள்ள தனியார் விடுதியில் பாதிக்கப்பட்ட பட்டியலின பஞ்சாயத்து தலைவர்கள் பேசுகிறார்கள் என்ற தலைப்பில் மாநில அளவிலான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், மாணவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பட்டியலின பஞ்சாயத்து தலைவர்கள் பங்கேற்று தங்களுக்கு நடந்த கொடுமைகளை சாட்சிகளாக பதிவு செய்தனர்.

அப்போது பேசிய பிரபல மனித உரிமை ஆர்வலர் மஞ்சுளா பிரதீப், பட்டியலின பெண் ஊராட்சி மன்ற தலைவிகள் உட்பட பலரும் இங்கு அனுபவிக்கு பிரச்சனைகளை மாநில அரசு, காவல்துறை மற்றும் நம்மை சுற்றியுள்ள அமைப்புகள் தான் கேள்வி கேட்க வேண்டும் என்றார். மேலும், சமூகத்தில் மற்ற பிரச்சனைகளுக்கு நடுவே, பட்டியலின பெண்கள் கூடுதலான பிரச்சனைகளை தங்கள் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டுள்ளதாக வேதனையுடன் கூறினார்.

இதையும் படிங்க: Republic Day 2023:குடியரசு தின விழா; பட்டியல் இனத்தவர்களுக்கு சாதி பாகுபாடின்றி கொடியேற்ற நடவடிக்கை

இந்த கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலான பெண் பஞ்சாயத்து தலைவர்கள் தங்களை பட்டியலின பெண்கள் என சாதிய காரணம் காட்டி தங்கள் பகுதியில் உள்ள பல தரப்பினராலும் அவமரியாதை செய்யப்பட்டதாக பெண் பட்டியலின பஞ்சாயத்து தலைவர்கள், பஞ்சாயத்து துணை தலைவர்கள் பஞ்சாயத்து செயலாளர்கள் மற்றும் பிடிஓ-கள் போன்ற அதிகாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில், இதுகுறித்து சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கால்பிரவு ஊராட்சி மன்ற தலைவியான ராஜேஸ்வரி பேசுகையில், "போட்டியின்றி வெற்றி பெற்று கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக ஊராட்சி மன்ற தலைவியாக பதவி வகித்து வருகிறேன். ஏற்கனவே, பதவியில் இருந்த பஞ்சாயத்து தலைவர் நாற்காலியில் அமர விடாமலும், அலுவலக சாவியை கொடுக்காமலும் தற்போது வரையில், சாதியின் அடிப்படையில் அதிகாரம் செய்தும் மிரட்டுகிறார். இதற்கு தக்க நடவடிக்கை மேற்கொண்டு தங்களை பணி செய்ய அனுமதி பெற்று தர வேண்டும்"என்று வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: சாதி பெயரைச் சொல்லி திட்டியதாக நெல்லை மேயர் மீது புகார்.. தொடரும் திமுக உட்கட்சி பூசல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.