ETV Bharat / state

போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் மாநகராட்சி குப்பை லாரிகள் சிறைபிடிப்பு...!

மதுரை: முத்துப்பட்டி சாலையில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திவரும் மாநகராட்சி குப்பை லாரிகளை அப்பகுதி பொதுமக்களே சிறைபிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

author img

By

Published : Nov 25, 2020, 6:55 PM IST

Public protest by capturing corporation garbage trucks causing traffic congestion!
Public protest by capturing corporation garbage trucks causing traffic congestion!

மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு திருப்பரங்குன்றம் அருகேயுள்ள வெள்ளக்கல் பகுதியில் அமைந்துள்ளது. இந்த குப்பை கிடங்குக்கு செல்வதற்காக திருப்பரங்குன்றம், தியாகராஜர் கல்லூரி பின்புறம் வழியாக செல்ல பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குப்பை லாரி ஓட்டுநர்கள் அவ்வழியை பயன்படுத்தாமல் டீசலை மிச்சப்படுத்த, முத்துப்பட்டி சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் சுமார் 4 கிலோமீட்டருக்கான டீசல் மிச்சப்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. அதனை அவனியாபுரம் சாலையில் செல்லும் வழியில் லாரியை நிறுத்தி டீசலை ஓட்டுநர்களே திருடி, அதே பகுதியில் விற்பனை செய்வதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். குறிப்பாக முத்துப்பட்டி சாலையானது 16 அடி மட்டுமே உள்ள குறுகிய சாலை என்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், பள்ளி மாணவர்களுக்கான பேருந்துகளும் வந்து செல்ல பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றது.

இது குறித்து மாநகராட்சி அலுவலர்களுடன் பலமுறை வலியுறுத்திய பின்னர், முத்துப்பட்டி பகுதி வழியாக 4 குப்பை லாரிகள் மட்டும் சென்று வர அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் திருப்பரங்குன்றம் வழியாக மற்ற குப்பை லாரிகள் சென்றால் அதிக அளவு டீசல் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவும், டீசல் திருட முடியாது என்பதற்காகவும் குப்பை லாரி ஓட்டுநர்கள் முத்துப்பட்டி சாலையைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள் இன்று (நவம்பர் 25) லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த மாநகராட்சி அலுவலர்கள், காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடைவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறியதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.

இதையும் படிங்க:கோவையில் மூதாட்டியிடம் 10 பவுன் செயின் பறிப்பு!

மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு திருப்பரங்குன்றம் அருகேயுள்ள வெள்ளக்கல் பகுதியில் அமைந்துள்ளது. இந்த குப்பை கிடங்குக்கு செல்வதற்காக திருப்பரங்குன்றம், தியாகராஜர் கல்லூரி பின்புறம் வழியாக செல்ல பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குப்பை லாரி ஓட்டுநர்கள் அவ்வழியை பயன்படுத்தாமல் டீசலை மிச்சப்படுத்த, முத்துப்பட்டி சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் சுமார் 4 கிலோமீட்டருக்கான டீசல் மிச்சப்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. அதனை அவனியாபுரம் சாலையில் செல்லும் வழியில் லாரியை நிறுத்தி டீசலை ஓட்டுநர்களே திருடி, அதே பகுதியில் விற்பனை செய்வதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். குறிப்பாக முத்துப்பட்டி சாலையானது 16 அடி மட்டுமே உள்ள குறுகிய சாலை என்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், பள்ளி மாணவர்களுக்கான பேருந்துகளும் வந்து செல்ல பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றது.

இது குறித்து மாநகராட்சி அலுவலர்களுடன் பலமுறை வலியுறுத்திய பின்னர், முத்துப்பட்டி பகுதி வழியாக 4 குப்பை லாரிகள் மட்டும் சென்று வர அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் திருப்பரங்குன்றம் வழியாக மற்ற குப்பை லாரிகள் சென்றால் அதிக அளவு டீசல் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவும், டீசல் திருட முடியாது என்பதற்காகவும் குப்பை லாரி ஓட்டுநர்கள் முத்துப்பட்டி சாலையைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள் இன்று (நவம்பர் 25) லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த மாநகராட்சி அலுவலர்கள், காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடைவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறியதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.

இதையும் படிங்க:கோவையில் மூதாட்டியிடம் 10 பவுன் செயின் பறிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.