ETV Bharat / state

முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமன விவகாரம் - நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு!

author img

By

Published : Jul 15, 2023, 1:53 PM IST

முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமன விவகாரத்தில்,அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரிய விவகாரத்தில், மனுதாரருக்கு அரசு பணி வழங்கியதாக கூறப்பட்ட தகவலை பதிவு செய்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தது.

முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமன விவகாரம் - நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு!
முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமன விவகாரம் - நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு!

மதுரை: தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தின் சார்பில் 387 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு, கடந்த 2017ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதற்கான தேர்வில் தவறான வினா - விடை இடம் பெற்றதாக சிலர் கடந்த 2017ஆம் ஆண்டில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்து இருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, தவறாக கேட்கப்பட்ட வினா எண் 14, 43, 63 மற்றும் 72 ஆகியவற்றிற்கு தலா ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதை எதிர்த்து ஆசிரியர் தேர்வு வாரியம் தரப்பில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தேர்வு எழுதியவர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து, சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க அனுமதித்து பணி வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் தாரணி என்பவரின் மனுவையும் பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால், அவரது கோரிக்கை ஏற்கப்படவில்லை. இதை அடுத்து, அவர் சீராய்வு மனுத் தாக்கல் செய்து இருந்தார். அதனை விசாரித்த நீதிபதி, இது தொடர்பான முந்தைய உத்தரவு, மனுதாரருக்கும் பொருந்தும். ஆனால், நீதிமன்ற உத்தரவை ஏற்று தனக்கு இன்னும் பணி வழங்கப்படவில்லை எனக்கூறி, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க மனுத்தாக்கல் செய்து உள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் மற்றும் விஜயகுமார் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை ஏற்கனவே விசாரணை செய்த நீதிமன்றம், நீதிமன்ற உத்தரவு முறையாக பின்பற்றப்படுவதில்லை என்றும், மேலும் அதற்கான விளக்கமும் நீதிமன்றத்தில் தெரிவிப்பதில்லை என்றும், எனவே பள்ளிக்கல்வித்துறை செயலர் உள்பட அதிகாரிகள் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பித்து இருந்தனர்.

இந்த வழக்கு மீண்டும் நேற்று (ஜூலை 15) விசாரணைக்கு வந்தது. 2017ஆம் ஆண்டில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பதவி வகித்த பிரதீப் யாதவ் மற்றும் அப்போதைய ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா ஐஏஎஸ் ஆகியோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.

நீதிமன்றத்தின் உத்தரவு பின்பற்றப்பட்டு மனுதாரருக்கு அரசு பணி வழங்கி விட்டதாக அரசு தரப்பு வழக்கறிஞர் தகவல் தெரிவித்தார். இதனை பதிவு செய்த நீதிபதி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: கஞ்சா போதையில் ரகளை: வடபழனி அருகே டாஸ்மாக் மூடியதற்கு எதிர்ப்பு!

மதுரை: தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தின் சார்பில் 387 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு, கடந்த 2017ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதற்கான தேர்வில் தவறான வினா - விடை இடம் பெற்றதாக சிலர் கடந்த 2017ஆம் ஆண்டில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்து இருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, தவறாக கேட்கப்பட்ட வினா எண் 14, 43, 63 மற்றும் 72 ஆகியவற்றிற்கு தலா ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதை எதிர்த்து ஆசிரியர் தேர்வு வாரியம் தரப்பில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தேர்வு எழுதியவர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து, சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க அனுமதித்து பணி வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் தாரணி என்பவரின் மனுவையும் பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால், அவரது கோரிக்கை ஏற்கப்படவில்லை. இதை அடுத்து, அவர் சீராய்வு மனுத் தாக்கல் செய்து இருந்தார். அதனை விசாரித்த நீதிபதி, இது தொடர்பான முந்தைய உத்தரவு, மனுதாரருக்கும் பொருந்தும். ஆனால், நீதிமன்ற உத்தரவை ஏற்று தனக்கு இன்னும் பணி வழங்கப்படவில்லை எனக்கூறி, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க மனுத்தாக்கல் செய்து உள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் மற்றும் விஜயகுமார் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை ஏற்கனவே விசாரணை செய்த நீதிமன்றம், நீதிமன்ற உத்தரவு முறையாக பின்பற்றப்படுவதில்லை என்றும், மேலும் அதற்கான விளக்கமும் நீதிமன்றத்தில் தெரிவிப்பதில்லை என்றும், எனவே பள்ளிக்கல்வித்துறை செயலர் உள்பட அதிகாரிகள் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பித்து இருந்தனர்.

இந்த வழக்கு மீண்டும் நேற்று (ஜூலை 15) விசாரணைக்கு வந்தது. 2017ஆம் ஆண்டில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பதவி வகித்த பிரதீப் யாதவ் மற்றும் அப்போதைய ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா ஐஏஎஸ் ஆகியோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.

நீதிமன்றத்தின் உத்தரவு பின்பற்றப்பட்டு மனுதாரருக்கு அரசு பணி வழங்கி விட்டதாக அரசு தரப்பு வழக்கறிஞர் தகவல் தெரிவித்தார். இதனை பதிவு செய்த நீதிபதி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: கஞ்சா போதையில் ரகளை: வடபழனி அருகே டாஸ்மாக் மூடியதற்கு எதிர்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.