ETV Bharat / state

மதுரை அருகே ஆன்லைனில் லாட்டரி விற்பனை - ஐந்து பேர் கைது

author img

By

Published : Dec 16, 2019, 3:18 PM IST

மதுரை: திருப்பரங்குன்றம் அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

Madurai online lottery sellers
Online lottery sellers arrest

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த நிலையூர் கைத்தறிநகரில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து ஆஸ்டின்பட்டி காவல் துறையினர் ரகசியமாக கண்காணிப்புப் பணி மேற்கொண்டதில், கைத்தறி நகரைச் சேர்ந்த பாஸ்கர் (வயது 54), இடியாப்ப ரவி (55), கிருஷ்ணா ராவ் (55), கோபிநாத் (36), கேரளா சுரேஷ் (36) ஆகிய ஐந்து பேரும் ஆன்லைன் மூலம் விற்பனை செய்தது தெரிய வந்தது.

இதனையடுத்து ஐந்து பேரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 5 செல்போன்கள், 5 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், ஐந்து பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஆன்லைனில் லாட்டரி விற்பனை செய்த ஐந்து பேர் கைது

அண்மையில் 3ஆம் நம்பர் லாட்டரியால் நகைத் தொழிலாளி குடும்பத்தோடு தற்கொலை செய்த சம்பவத்தை அடுத்து தமிழ்நாடு முழுவதும் காவல் துறையினர் 3ஆம் நம்பர் லாட்டரி குறித்து தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஒரே பகுதியைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் கைத்தறி நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: லாட்டரியால் சீரழிந்த குடும்பம் - 5 பேர் தற்கொலை..

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த நிலையூர் கைத்தறிநகரில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து ஆஸ்டின்பட்டி காவல் துறையினர் ரகசியமாக கண்காணிப்புப் பணி மேற்கொண்டதில், கைத்தறி நகரைச் சேர்ந்த பாஸ்கர் (வயது 54), இடியாப்ப ரவி (55), கிருஷ்ணா ராவ் (55), கோபிநாத் (36), கேரளா சுரேஷ் (36) ஆகிய ஐந்து பேரும் ஆன்லைன் மூலம் விற்பனை செய்தது தெரிய வந்தது.

இதனையடுத்து ஐந்து பேரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 5 செல்போன்கள், 5 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், ஐந்து பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஆன்லைனில் லாட்டரி விற்பனை செய்த ஐந்து பேர் கைது

அண்மையில் 3ஆம் நம்பர் லாட்டரியால் நகைத் தொழிலாளி குடும்பத்தோடு தற்கொலை செய்த சம்பவத்தை அடுத்து தமிழ்நாடு முழுவதும் காவல் துறையினர் 3ஆம் நம்பர் லாட்டரி குறித்து தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஒரே பகுதியைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் கைத்தறி நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: லாட்டரியால் சீரழிந்த குடும்பம் - 5 பேர் தற்கொலை..

Intro:திருப்பரங்குன்றம் அருகே ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டுகள் விற்பனை
5 பேர் கைதுBody:திருப்பரங்குன்றம் அருகே ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டுகள் விற்பனை
5 பேர் கைது-5000 ரூபணம் பறிமுதல்

திருப்பரங்குன்றத்தை அடுத்த
நிலையூர் கைத்தறிநகரில் ஆன்லைன் மூலம் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது இதனையடுத்து ஆஸ்டின்பட்டி போலீசார் ரகசியமாக கண்காணிப்பு பணி மேற்கொண்டதில் கைத்தறி நகரை சேர்ந்த பாஸ்கர் (54) இடியாப்ப ரவி (55) கிருஷ்ணாராவ் (55) கோபிநாத் (36)கேரளாசுரேஷ் (36) ஆகிய 5 பேர் ஆன்லைன் மூலம் கேரள மாநில 3நம்பர் லாட்டரி விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து 5 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 5 செல்போன்கள் 5 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் ஐந்து பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அண்மையில் 3 நம்பர் லாட்டரியால் நகை தொழிலாளி குடும்பத்தோடு தற்கொலை செய்த சம்பவத்தை அடுத்து தமிழகம் முழுவதும் போலீசார் 3 நம்பர் லாட்டரி குறித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன். இந்நிலையில் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஒரே பகுதியை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் கைத்தறி நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.