ETV Bharat / state

சுற்றுச்சூழல் பாதுகாப்பு: நடு வீதியில் நாடகம் நடத்தி பெண்கள் விழிப்புணர்வு! - NCC பெண்கள் நடத்திய சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு மதுரை

மதுரை: திருப்பரங்குன்றம் பகுதியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து தேசிய மாணவர் படையினர் (மகளிர் பிரிவு) NCC மாணவிகள் நடுவீதியில் நடத்திய நாடகங்கள் அப்பகுதி மக்களை வெகுவாகக் கவர்ந்தது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவிகள்
author img

By

Published : Oct 6, 2019, 2:51 PM IST

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் முன்பாக தேசிய மாணவர் படை (மகளிர் பிரிவு) NCC மாணவிகள், பொது மக்களுக்கு சுற்றுச்சூழல் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாடல்கள் பாடியும் நடு வீதியில் நாடகங்கள் நடித்தும் பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக வந்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவிகள்

பொது இடங்களில் எவ்வாறு பொதுமக்கள் நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து சுற்றுச்சூழலை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பது குறித்தும் மாணவிகள் நடத்திய நாடகம் திருப்பரங்குன்றம் மக்களை வெகுவாகக் கவர்ந்தது.

சுற்றுச்சூழல் குறித்து தேசிய மாணவர் படை மகளிர் பிரிவு மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பொதுமக்களிடம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து எடுத்துரைத்தனர். இந்த விழிப்புணர்வு பேரணி திருப்பரங்குன்றம் பகுதியிலிருந்து தென்பரங்குன்றம் வரை நடைபெற்றது.

இதையும் படிங்க: காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சைக்கிளில் விழிப்புணர்வு!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் முன்பாக தேசிய மாணவர் படை (மகளிர் பிரிவு) NCC மாணவிகள், பொது மக்களுக்கு சுற்றுச்சூழல் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாடல்கள் பாடியும் நடு வீதியில் நாடகங்கள் நடித்தும் பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக வந்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவிகள்

பொது இடங்களில் எவ்வாறு பொதுமக்கள் நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து சுற்றுச்சூழலை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பது குறித்தும் மாணவிகள் நடத்திய நாடகம் திருப்பரங்குன்றம் மக்களை வெகுவாகக் கவர்ந்தது.

சுற்றுச்சூழல் குறித்து தேசிய மாணவர் படை மகளிர் பிரிவு மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பொதுமக்களிடம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து எடுத்துரைத்தனர். இந்த விழிப்புணர்வு பேரணி திருப்பரங்குன்றம் பகுதியிலிருந்து தென்பரங்குன்றம் வரை நடைபெற்றது.

இதையும் படிங்க: காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சைக்கிளில் விழிப்புணர்வு!

Intro:*திருப்பரங்குன்றம் பகுதியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து தேசிய மாணவர் படையினர் (மகளிர் பிரிவு) NCC நடத்திய நாடகங்கள் அப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்தது*Body:*திருப்பரங்குன்றம் பகுதியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து தேசிய மாணவர் படையினர் (மகளிர் பிரிவு) NCC நடத்திய நாடகங்கள் அப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்தது*

மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் அமைந்துள்ள முதல் படைவீடான சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் முன்பாக தேசிய மாணவர் படையினர் (மகளிர் பிரிவினர்) NCC மாணவிகள் பொது மக்களுக்கு சுற்றுச்சூழல் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாடல்கள் பாடியும், வீதி நாடகங்கள் நடித்தியும் மற்றும் ஊர்வலமாக பதாகைகளை ஏந்தியும் ஊர்வலமாக வந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தேசிய மாணவர் படையினர் மகளிர் பிரிவு மாணவிகள் திருப்பரங்குன்றம் கோயில் முன்பு பாடல்கள் பாடி விழிப்புணர்வை ஏற்படுத்தினர், பல நாடகங்களை தெருக்களில் நடத்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த பதாகைகளை ஏந்தி கோஷங்கள் இட்டும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

பொதுமக்கள் பொது இடங்களில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் சுற்றுச் சூழலை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பது குறித்து மாணவிகள் நடத்திய நாடகம் திருப்பரங்குன்றம் மக்களை வெகுவாக கவர்ந்தது.

சுற்றுச்சூழல் குறித்து தேசிய மாணவர் படையினர் மகளிர் பிரிவு மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பொது இடங்களில் எச்சில் உமிழாதீர்கள், சிறுநீர் கழிக்காதீர்கள், குப்பைகளை குப்பைத் தொட்டியில் போட வேண்டும் என்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் இருந்தது.

இந்த விழிப்புணர்வு பேரணி திருப்பரங்குன்றம் பகுதியிலிருந்து தென்பரங்குன்றம் வரை நடைபெற்றது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.