ETV Bharat / state

கடத்தப்பட்டாரா? தலைமறைவானாரா? தெளிவுபடுத்தினால் முகிலனுக்கு ஜாமின் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை! - முகிலன் ஜாமீன் வழக்கு

மதுரை: கடத்தப்பட்டாரா? அல்லது தலைமறைவாக இருந்தாரா? என்பது குறித்து முகிலன் தரப்பில் தெளிவு படுத்தினால் அவருக்கு ஜாமீன் வழங்க பரிசீலிக்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

madurai-branch
author img

By

Published : Oct 30, 2019, 3:14 PM IST

சமூக ஆர்வலர் முகிலன் (எ) சண்முகம்(53) இயற்கை வளப் பாதுகாப்பு, ஜல்லிக்கட்டு போராட்டம் உள்ளிட்ட பல சமூகப் போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டுவந்தார். கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய இவர், பிறகு மாயமானார்.

அதன்பின் அவரை மீட்க ஆட்கொணர்வு வழக்கு தொடரப்பட்டு அது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதற்கிடையில் அவர்மீது கரூரைச் சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்தார். இதனால் சிபிசிஐடியினர், முகிலன் மீது பாலியல் வழக்குப் பதிவு செய்த நிலையில், முகிலன் திருப்பதி ரயில் நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். பின்னர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட முகிலன், தான் கடத்தப்பட்டதாக ஜாமின் கேட்டு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு அளித்தார்.

இந்த மனு, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையில் அரசு தரப்பு வழக்கறிஞர், முகிலனுக்கு ஜாமின் வழங்கக் கூடாது எனவும் அவர் கடத்தப்படவில்லை, அவர் மீது பாலியல் குற்றசாட்டு உள்ளதால் தலைமறைவாகிவிட்டார் எனவும் வாதாடினார். மேலும் அவருக்கு ஜாமின் வழங்கினால் மீண்டும் தலைமறைவாக வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்தார்.

இதனையடுத்து முகிலன் கடத்தப்பட்டாரா? தலைமறைவானாரா? என்பது குறித்து அவர் தரப்பில் தெளிவு படுத்தப்பட்டால், ஜாமின் வழங்க பரிசீலிக்கப்படும் எனக்கூறிய நீதிபதி வழக்கை நவம்பர் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: கனிமொழி மீதான தேர்தல் வழக்கு: விரைந்து முடிக்க உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!

சமூக ஆர்வலர் முகிலன் (எ) சண்முகம்(53) இயற்கை வளப் பாதுகாப்பு, ஜல்லிக்கட்டு போராட்டம் உள்ளிட்ட பல சமூகப் போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டுவந்தார். கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய இவர், பிறகு மாயமானார்.

அதன்பின் அவரை மீட்க ஆட்கொணர்வு வழக்கு தொடரப்பட்டு அது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதற்கிடையில் அவர்மீது கரூரைச் சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்தார். இதனால் சிபிசிஐடியினர், முகிலன் மீது பாலியல் வழக்குப் பதிவு செய்த நிலையில், முகிலன் திருப்பதி ரயில் நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். பின்னர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட முகிலன், தான் கடத்தப்பட்டதாக ஜாமின் கேட்டு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு அளித்தார்.

இந்த மனு, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையில் அரசு தரப்பு வழக்கறிஞர், முகிலனுக்கு ஜாமின் வழங்கக் கூடாது எனவும் அவர் கடத்தப்படவில்லை, அவர் மீது பாலியல் குற்றசாட்டு உள்ளதால் தலைமறைவாகிவிட்டார் எனவும் வாதாடினார். மேலும் அவருக்கு ஜாமின் வழங்கினால் மீண்டும் தலைமறைவாக வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்தார்.

இதனையடுத்து முகிலன் கடத்தப்பட்டாரா? தலைமறைவானாரா? என்பது குறித்து அவர் தரப்பில் தெளிவு படுத்தப்பட்டால், ஜாமின் வழங்க பரிசீலிக்கப்படும் எனக்கூறிய நீதிபதி வழக்கை நவம்பர் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: கனிமொழி மீதான தேர்தல் வழக்கு: விரைந்து முடிக்க உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!

Intro:கடத்தப்பட்டாரா..? அல்லது தலைமறைவானாரா..? - முகிலன் தெளிவுபடுத்தினால் ஜாமீன் உயர்நீதிமன்ற மதுரை கிளை

முகிலன் கடத்தப்பட்டாரா? அல்லது தலைமறைவானாரா? என்பது குறித்து முகிலன் தரப்பில் தெளிவு படுத்தினால் ஜாமின் வழங்க பரிசீலிக்கிறோம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.Body:கடத்தப்பட்டாரா..? அல்லது தலைமறைவானாரா..? - முகிலன் தெளிவுபடுத்தினால் ஜாமீன் உயர்நீதிமன்ற மதுரை கிளை

முகிலன் கடத்தப்பட்டாரா? அல்லது தலைமறைவானாரா? என்பது குறித்து முகிலன் தரப்பில் தெளிவு படுத்தினால் ஜாமின் வழங்க பரிசீலிக்கிறோம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

சமூக ஆர்வலர் முகிலன் (எ) சண்முகம் (53). இயற்கை வள பாதுகாப்பு, ஜல்லிக்கட்டு போராட்டம் உள்ளிட்ட பல சமூக பிரச்னைகளில் தீவிரமாக செயல்பட்டார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக சென்னையில் கடந்த பிப். 15ல் பேட்டியளித்தவர் திடீரென மாயமானார்.இவர் மாயமான 
வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. ஒரு பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக  சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர், திருப்பதி ரயில் நிலையத்தில் முகிலன் கைதுதானார். திருச்சி மத்திய சிறையில் உள்ள முகிலன் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்திருந்தார்.
 
இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது,முகிலனுக்கு ஜாமின் வழங்க கூடாது,அவர் கடத்தப்படவில்லை,அவர் மீது பாலியல் குற்றசாட்டு உள்ளது,எனவே தலைமறைவாகிவிட்டார். அவருக்கு ஜாமின் வழங்கினால், மீண்டும் தலைமறைவாக வாய்ப்பு உள்ளது என அரசு தரப்பு வழக்கறிஞர் வாதம்.முகிலன் கடத்தப்பட்டாரா? அல்லது தலைமறைவானாரா? என்பது குறித்து முகிலன் தரப்பில் தெளிவு படுத்தினால் ஜாமின் வழங்க பரிசீலிக்கப்படும் என உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 6 ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.