ETV Bharat / state

மருமகளுக்கு 101 வகையான விருந்து கொடுத்து அசத்திய மாமியார்!

author img

By

Published : Jul 27, 2020, 9:40 PM IST

மதுரை: மருமகளுக்கு 101 வகையான உணவு வழங்கி அசர வைத்த மாமியாரின் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மருமகளுக்கு விருந்து கொடுத்து அசத்திய மாமியார்
மருமகளுக்கு விருந்து கொடுத்து அசத்திய மாமியார்

மதுரை மாவட்டம் மூன்றுமாவடி பகுதியைச் சேர்ந்தவர்கள் அஹிலா - அபுல்கலாம் தம்பதியினர். இவர்களின் மகன் அபுல்ஹசனுக்கு கடந்த 9ஆம் தேதி ஷப்னா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. திருமண விருந்திற்காக உறவினர்கள் அழைப்பு விடுத்த நிலையில், புதுமணத் தம்பதியினர் ஊரடங்கு காரணமாக செல்ல முடியவில்லை.

இந்நிலையில், வீட்டிற்கு வந்த மருமகள் ஷப்னாவிற்கு தானே விருந்து அளிக்க நினைத்த மாமியார் அஹிலா, பிரியாணி, பிரைடு ரைஸ், மட்டன், சிக்கன், மீன், முட்டை, காடை, லெமன், புளியோதரை, தயிர் சாதம், ஆம்லேட், பரோட்டா, சப்பாத்தி தொடங்கி அனைத்து வகையான சூப்புகள், பழ ஜூஸ்கள் முதல் அப்பளம் வரை 101 வகையான உணவுகளை தயாரித்து, நீண்ட இலையில் மருமகளுக்கு விருந்து வைத்துள்ளார்.

மேலும், ஒவ்வொன்றின் சுவையையும் பார்த்து தானே தனது மருமகளுக்கு ஊட்டியும் விட்டுள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆந்திர மாநிலத்தில் 67 வகையான உணவுகளை மருமகனுக்கு வழங்கிய மாமியாரின் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகிய நிலையில், மதுரையைச் சேர்ந்த மாமியார், மருமகளுக்கு வழங்கிய இந்த பிரமாண்ட விருந்து அனைவரையும் வியக்கவைத்துள்ளது.

மருமகளை அசரவைக்க மாமியார் கொடுத்த இந்த தடபுடலான விருந்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

மருமகளுக்கு விருந்து கொடுத்து அசத்திய மாமியார்

இதையும் படிங்க: மருமகனுக்கு 67 வகை உணவை ஏற்பாடு செய்த மாமியார்' வைரலாகும் காணொலி

மதுரை மாவட்டம் மூன்றுமாவடி பகுதியைச் சேர்ந்தவர்கள் அஹிலா - அபுல்கலாம் தம்பதியினர். இவர்களின் மகன் அபுல்ஹசனுக்கு கடந்த 9ஆம் தேதி ஷப்னா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. திருமண விருந்திற்காக உறவினர்கள் அழைப்பு விடுத்த நிலையில், புதுமணத் தம்பதியினர் ஊரடங்கு காரணமாக செல்ல முடியவில்லை.

இந்நிலையில், வீட்டிற்கு வந்த மருமகள் ஷப்னாவிற்கு தானே விருந்து அளிக்க நினைத்த மாமியார் அஹிலா, பிரியாணி, பிரைடு ரைஸ், மட்டன், சிக்கன், மீன், முட்டை, காடை, லெமன், புளியோதரை, தயிர் சாதம், ஆம்லேட், பரோட்டா, சப்பாத்தி தொடங்கி அனைத்து வகையான சூப்புகள், பழ ஜூஸ்கள் முதல் அப்பளம் வரை 101 வகையான உணவுகளை தயாரித்து, நீண்ட இலையில் மருமகளுக்கு விருந்து வைத்துள்ளார்.

மேலும், ஒவ்வொன்றின் சுவையையும் பார்த்து தானே தனது மருமகளுக்கு ஊட்டியும் விட்டுள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆந்திர மாநிலத்தில் 67 வகையான உணவுகளை மருமகனுக்கு வழங்கிய மாமியாரின் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகிய நிலையில், மதுரையைச் சேர்ந்த மாமியார், மருமகளுக்கு வழங்கிய இந்த பிரமாண்ட விருந்து அனைவரையும் வியக்கவைத்துள்ளது.

மருமகளை அசரவைக்க மாமியார் கொடுத்த இந்த தடபுடலான விருந்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

மருமகளுக்கு விருந்து கொடுத்து அசத்திய மாமியார்

இதையும் படிங்க: மருமகனுக்கு 67 வகை உணவை ஏற்பாடு செய்த மாமியார்' வைரலாகும் காணொலி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.