ETV Bharat / state

'முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி 8,000 பேர் குணமடைந்துள்ளனர்'- அமைச்சர் உதயகுமார்!

author img

By

Published : Jul 30, 2020, 7:46 PM IST

மதுரை: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பத்தாயிரம் பேரில் எட்டாயிரம் பேர் குணமடைந்துள்ளனர் என அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

'முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி 8000 பேர் கரோணாவிலிருந்து குணமடைந்துள்ளனர்'- அமைச்சர் உதயகுமார்!
அமைச்சர் உதயகுமார்

மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியை தமிழ்நாடு வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தொடங்கிவைத்தார்.

பின்னர் பேசிய அவர் கூறுகையில், "மதுரையில் பத்து ஆயிரம் பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி எட்டு ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்.

கரோனா வைரஸிற்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. மதுரையில் ஒரு நாளைக்கு 250 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுகின்றனர்.

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் முகக்கவசம் வழங்கும் பணியை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார்.

இதனை தொடர்ந்து வருகிற 5ஆம் தேதி முதல், ஒரு நபருக்கு இரண்டு முகக்கவசங்கள் வழங்கும் பணி நடைபெறும்.

கரோனா தொற்றிற்கு மருந்து கண்டுபிடிக்கும் வரை முகக்கவசங்கள் தான் நமக்கு உயிர் கவசங்கள்" எனத் தெரிவித்தார். மேலும், இந்தியாவிலேயே 14 ஆயிரம் கோடி பேருக்கு முகக்கவசங்கள் வழங்கிய ஒரே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் என்றார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியை தமிழ்நாடு வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தொடங்கிவைத்தார்.

பின்னர் பேசிய அவர் கூறுகையில், "மதுரையில் பத்து ஆயிரம் பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி எட்டு ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்.

கரோனா வைரஸிற்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. மதுரையில் ஒரு நாளைக்கு 250 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுகின்றனர்.

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் முகக்கவசம் வழங்கும் பணியை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார்.

இதனை தொடர்ந்து வருகிற 5ஆம் தேதி முதல், ஒரு நபருக்கு இரண்டு முகக்கவசங்கள் வழங்கும் பணி நடைபெறும்.

கரோனா தொற்றிற்கு மருந்து கண்டுபிடிக்கும் வரை முகக்கவசங்கள் தான் நமக்கு உயிர் கவசங்கள்" எனத் தெரிவித்தார். மேலும், இந்தியாவிலேயே 14 ஆயிரம் கோடி பேருக்கு முகக்கவசங்கள் வழங்கிய ஒரே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.