ETV Bharat / state

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் உயிரிழப்பு! - உறவினர்கள் போராட்டம்

author img

By

Published : Oct 26, 2019, 3:31 PM IST

மதுரை: ஆள்கடத்தல் விவகாரத்தில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட இளைஞர் மரணத்திற்கு காவல் துறையினர் காரணம் என்று கூறி அவரின் உறவினர்கள் மதுரை அரசு இராசாசி மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

madurai youth death in police custody

மதுரை வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரின் மகன் கடத்தப்பட்ட விவகாரம் குறித்து சோலை அழகுபுரம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் உள்பட எட்டு பேரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்திவந்தனர். இந்நிலையில், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பாலமுருகனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதனையடுத்து சிகிச்சைக்காக அவர், மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றிரவு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். காவல் துறையினர்தான் விசாரணை என்ற பேரில் அழைத்துச்சென்று அடித்துக் கொன்றுள்ளனர் என்று கூறி பாலமுருகனின் உறவினர்கள் இன்று காலை அரசு இராசாசி மருத்துவமனையின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், பாலமுருகனின் இறப்புக்குக் காரணமான காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாலமுருகனின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

பாலமுருகனின் உறவினர்கள் போராட்டம்

மதுரை மாநகர காவல் துறை ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதியின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்துசென்றனர்.

இதையும் படிங்க: லாக்-அப்பில் இளைஞர் கொலை? - சிசிடிவி பதிவை பாதுகாக்க நீதிமன்றம் உத்தரவு

மதுரை வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரின் மகன் கடத்தப்பட்ட விவகாரம் குறித்து சோலை அழகுபுரம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் உள்பட எட்டு பேரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்திவந்தனர். இந்நிலையில், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பாலமுருகனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதனையடுத்து சிகிச்சைக்காக அவர், மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றிரவு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். காவல் துறையினர்தான் விசாரணை என்ற பேரில் அழைத்துச்சென்று அடித்துக் கொன்றுள்ளனர் என்று கூறி பாலமுருகனின் உறவினர்கள் இன்று காலை அரசு இராசாசி மருத்துவமனையின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், பாலமுருகனின் இறப்புக்குக் காரணமான காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாலமுருகனின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

பாலமுருகனின் உறவினர்கள் போராட்டம்

மதுரை மாநகர காவல் துறை ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதியின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்துசென்றனர்.

இதையும் படிங்க: லாக்-அப்பில் இளைஞர் கொலை? - சிசிடிவி பதிவை பாதுகாக்க நீதிமன்றம் உத்தரவு

Intro:*காவல் நிலையம் சென்ற இளைஞர் மர்மமான முறையில் இறந்த விவகாரம் - உறவினர்களிடம் காவல்துறை ஆணையர் பேச்சுவார்த்தைBody:*காவல் நிலையம் சென்ற இளைஞர் மர்மமான முறையில் இறந்த விவகாரம் - உறவினர்களிடம் காவல்துறை ஆணையர் பேச்சுவார்த்தை*

மதுரை வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரின் மகன் பார்த்திபன் என்பவரை கடந்த சில தினங்களுக்கு முன்பாக மர்ம கும்பல் கடத்தி 20 லட்ச ரூபாய் கேட்ட விவகாரம் தொடர்பாக சோலை அழகுபுரம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் உட்பட 8 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் விசாரணைக்காக அழைத்துச் சென்ற பாலமுருகன் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பாலமுருகன் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இந்நிலையில் காவல்துறையினர் தாக்கியதால் தான் அவருடைய மகன் இறந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டி


இன்று காலை முதல் அரசு ராஜாஜி மருத்துவமனையில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் இந்தநிலையில் மதுரை மாநகர காவல்துறை ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் அவருடைய உறவினர்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை இறந்த இளைஞரின் உறவினர்கள் முன்வைக்கின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.