சீனாவில் உருவான கரோனா வைரஸ் தொற்று பரவல் உலக நாடுகளை ஆட்கொண்டுள்ளது. இதில் இந்தியாவும் விதிவிலக்கில்லை. இந்தியாவில் இதுவரை எட்டாயிரத்திற்கும் அதிகமானோர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தமிழ்நாட்டில் ஆயிரத்து 75 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த அவசரகாலத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள், செய்தியாளர்கள் உள்ளிட்டோர் இரவு பகலாக பணியாற்றிவருகின்றனர்.
இந்தநிலையில் மதுரை வில்லபுரம் பகுதியில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களை கவுரவபடுத்தும் விதமாக அப்பகுதி இளைஞர்கள், பெண்கள் அவர்களுக்கு பாதபூஜை செய்தனர். இதைத்தொடர்ந்து அவர்களுக்கு நன்றி தெரிவித்து, புத்தாடையும் வழங்கினர்.
இதையும் படிங்க...தன்னார்வலர்கள் நேரடியாக நிவாரணப் பொருள்கள் வழங்கத் தடை