ETV Bharat / state

Chithirai Festival: மதுரை மீனாட்சிக்கு கல்யாணம்.. 7500 கிலோ அரிசி, 6 டன் காய்கறியுடன் தயாராகும் விருந்து!

author img

By

Published : May 2, 2023, 7:45 AM IST

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு 1 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு மாப்பிள்ளை வீட்டார் சார்பில் விருந்து தடபுடலாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

a
a

மீனாட்சி திருக்கல்யாண விருந்து அமர்களம்!

மதுரை: உலகப்புகழ் வாய்ந்த மதுரை சித்திரைத் திருவிழா கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்கியது. பின்னர் ஒவ்வொரு நாளும் ஒரு வாகனத்தில் வந்து அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதைத் தொடர்ந்து மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் ஏப்.30 ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் மே 2 ஆம் தேதியான இன்று மீனாட்சிக்கும், சுந்தரேசுவரருக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருக்கல்யாண நிகழ்வை காண உள்ளனர். அதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகமும், அறநிலையத்துறையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் திருக்கல்யாண வைபவத்தின் போது பழமுதிர்ச்சோலை திருவருள் முருகன் பக்த சபை அறக்கட்டளை சார்பில், சேதுபதி மேல்நிலை பள்ளியில் திருக்கல்யாண விருந்து 23 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டும் பழமுதிர்சோலை திருவருள் முருகன் பக்தசபை அறக்கட்டளை சார்பில் 1 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாப்பிள்ளை அழைப்பிற்காகவும், திருக்கல்யாணம் நடைபெறும் இன்று காலை முதல் மாலை வரை சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு விருந்து அளிக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகளில் மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்று வருகிறது.

அதாவது சுமார் 7500 கிலோ அரிசி, 6 டன் காய்கறிகள் மற்றும் சமையல் பொருட்கள் பயன்படுத்தி, 300க்கும் அதிகமான பெண்கள் சமையல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் 100க்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் இப்பணியில் தன்னார்வலர்களாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். பொதுமக்கள் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த சுமார் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் விருந்துக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு பள்ளி மைதானத்தில் பந்தல் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு சுய சேவை முறையில் விருந்து பரிமாறப்படுகிறது. சித்திரைப் பெருந்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் இன்று கோயில் வளாகத்தில் உள்ள மேல - வடக்கு ஆடி வீதியில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெற உள்ளது.

இதைத் தொடர்ந்து மணமேடையில் மலர் அலங்காரப் பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் பழைய திருக்கல்யாண மண்டபத்திலும் மணமேடை அலங்கார பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. ஆகையால் திருக்கல்யாணத்திற்கு வரும் அனைத்து பக்தர்களும் சென்று விருந்தில் கலந்து கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க: ''சல்லடம் அணிந்தோருக்கு சங்கடம் இல்லை... கள்ளழகர் வாராரு துயரங்கள் இல்லை...''

மீனாட்சி திருக்கல்யாண விருந்து அமர்களம்!

மதுரை: உலகப்புகழ் வாய்ந்த மதுரை சித்திரைத் திருவிழா கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்கியது. பின்னர் ஒவ்வொரு நாளும் ஒரு வாகனத்தில் வந்து அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதைத் தொடர்ந்து மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் ஏப்.30 ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் மே 2 ஆம் தேதியான இன்று மீனாட்சிக்கும், சுந்தரேசுவரருக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருக்கல்யாண நிகழ்வை காண உள்ளனர். அதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகமும், அறநிலையத்துறையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் திருக்கல்யாண வைபவத்தின் போது பழமுதிர்ச்சோலை திருவருள் முருகன் பக்த சபை அறக்கட்டளை சார்பில், சேதுபதி மேல்நிலை பள்ளியில் திருக்கல்யாண விருந்து 23 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டும் பழமுதிர்சோலை திருவருள் முருகன் பக்தசபை அறக்கட்டளை சார்பில் 1 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாப்பிள்ளை அழைப்பிற்காகவும், திருக்கல்யாணம் நடைபெறும் இன்று காலை முதல் மாலை வரை சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு விருந்து அளிக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகளில் மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்று வருகிறது.

அதாவது சுமார் 7500 கிலோ அரிசி, 6 டன் காய்கறிகள் மற்றும் சமையல் பொருட்கள் பயன்படுத்தி, 300க்கும் அதிகமான பெண்கள் சமையல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் 100க்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் இப்பணியில் தன்னார்வலர்களாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். பொதுமக்கள் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த சுமார் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் விருந்துக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு பள்ளி மைதானத்தில் பந்தல் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு சுய சேவை முறையில் விருந்து பரிமாறப்படுகிறது. சித்திரைப் பெருந்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் இன்று கோயில் வளாகத்தில் உள்ள மேல - வடக்கு ஆடி வீதியில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெற உள்ளது.

இதைத் தொடர்ந்து மணமேடையில் மலர் அலங்காரப் பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் பழைய திருக்கல்யாண மண்டபத்திலும் மணமேடை அலங்கார பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. ஆகையால் திருக்கல்யாணத்திற்கு வரும் அனைத்து பக்தர்களும் சென்று விருந்தில் கலந்து கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க: ''சல்லடம் அணிந்தோருக்கு சங்கடம் இல்லை... கள்ளழகர் வாராரு துயரங்கள் இல்லை...''

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.