ETV Bharat / state

'முன் பிணை வேணுமா... சிறார் கூர் நோக்கு இல்லத்துக்கு ரூ.15 ஆயிரம் கட்டுங்க' - அதிரடி காட்டிய மதுரை நீதிபதி - two person got prebail at madurai high court

மதுரை: மணல் கடத்தல் வழக்கில் முன் பிணை கோரிய இருவர், தலா 7500 ரூபாய் வீதம் மொத்தம் 15,000 ரூபாயை, சிறார் கூர் நோக்கு இல்லத்திற்குச் செலுத்த உத்தரவிட்டு, இருவருக்கும் முன் பிணை வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

உயர் நீதிமன்ற மதுரை கிளை!
உயர் நீதிமன்ற மதுரை கிளை!
author img

By

Published : Feb 11, 2020, 5:02 PM IST

திருமங்கலம் அருகே உள்ள பாப்பான்குளம் கண்மாயில் கடந்த ஜனவரி மாதம் 20ஆம் தேதி இரவு அங்கு மணல் திருட்டு நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு விரைந்த வருவாய்த் துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையில், அங்கிருந்த மணல் அள்ளும் இயந்திரம், இரண்டு லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்தப் புகாரின் பேரில் திருமங்கலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, இசக்கி என்பவரைக் கைது செய்தனர். இதையடுத்து, இசக்கி என்பவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், லாரி ஓட்டுநர்களான திண்டுக்கல்லைச் சேர்ந்த கார்த்திக், மதுரை மேலக்கால் பகுதியைச் சேர்ந்த செந்தில் ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், கார்த்திக் மற்றும் செந்தில் தங்களுக்கு இந்த வழக்கில் முன் பிணை கோரி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர் . இந்த மனுவானது நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அவர், " முன் பிணை கோரிய இருவரும் தலா 7, 500 ரூபாய் வீதம் 15,000 ரூபாயை, மதுரை காமராஜர் சாலையில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்துக்குச் செலுத்த வேண்டும். இந்தத் தொகையைக் கொண்டு, அங்கு துப்பரவுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதற்குக் காரணம் கூர்நோக்கு இல்லத்தில் கடந்த சில வாரத்திற்கு முன்பு உயர் நீதி மன்ற நீதிபதி ராஜா ஆய்வு மேற்கொண்ட போது, கழிவறை மற்றும் அறைகள் பராமரிப்பில்லாமல் இருப்பது தெரியவந்தது.

எனவே, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கூர்நோக்கு இல்லங்களை , அப்பகுதி உயர் நீதிமன்றங்கள் கண்காணிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. மேலும், தமிழ்நாடு அரசு, கூர்நோக்கு இல்லத்திற்கு துப்புரவுப் பணியாளர்களை நியமிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் உத்தரவிட்டு, இருவருக்கும் முன் பிணை வழங்கினார்.

இதைத் தொடர்ந்து, ''கூர் நோக்கு இல்லத்தில் கழிப்பறைகள் சுத்தமாக பராமரிக்கப்படுகிறது என்பதை, ஒவ்வொரு மாதமும் 5ஆம் தேதி இல்லத்தின் கண்காணிப்பாளர், அதற்கான அறிக்கையை உயர் நீதிமன்ற பதிவாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்" என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: மன்னிப்பு கேட்க வந்த இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்... 6 பேர் கைது!

திருமங்கலம் அருகே உள்ள பாப்பான்குளம் கண்மாயில் கடந்த ஜனவரி மாதம் 20ஆம் தேதி இரவு அங்கு மணல் திருட்டு நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு விரைந்த வருவாய்த் துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையில், அங்கிருந்த மணல் அள்ளும் இயந்திரம், இரண்டு லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்தப் புகாரின் பேரில் திருமங்கலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, இசக்கி என்பவரைக் கைது செய்தனர். இதையடுத்து, இசக்கி என்பவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், லாரி ஓட்டுநர்களான திண்டுக்கல்லைச் சேர்ந்த கார்த்திக், மதுரை மேலக்கால் பகுதியைச் சேர்ந்த செந்தில் ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், கார்த்திக் மற்றும் செந்தில் தங்களுக்கு இந்த வழக்கில் முன் பிணை கோரி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர் . இந்த மனுவானது நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அவர், " முன் பிணை கோரிய இருவரும் தலா 7, 500 ரூபாய் வீதம் 15,000 ரூபாயை, மதுரை காமராஜர் சாலையில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்துக்குச் செலுத்த வேண்டும். இந்தத் தொகையைக் கொண்டு, அங்கு துப்பரவுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதற்குக் காரணம் கூர்நோக்கு இல்லத்தில் கடந்த சில வாரத்திற்கு முன்பு உயர் நீதி மன்ற நீதிபதி ராஜா ஆய்வு மேற்கொண்ட போது, கழிவறை மற்றும் அறைகள் பராமரிப்பில்லாமல் இருப்பது தெரியவந்தது.

எனவே, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கூர்நோக்கு இல்லங்களை , அப்பகுதி உயர் நீதிமன்றங்கள் கண்காணிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. மேலும், தமிழ்நாடு அரசு, கூர்நோக்கு இல்லத்திற்கு துப்புரவுப் பணியாளர்களை நியமிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் உத்தரவிட்டு, இருவருக்கும் முன் பிணை வழங்கினார்.

இதைத் தொடர்ந்து, ''கூர் நோக்கு இல்லத்தில் கழிப்பறைகள் சுத்தமாக பராமரிக்கப்படுகிறது என்பதை, ஒவ்வொரு மாதமும் 5ஆம் தேதி இல்லத்தின் கண்காணிப்பாளர், அதற்கான அறிக்கையை உயர் நீதிமன்ற பதிவாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்" என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: மன்னிப்பு கேட்க வந்த இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்... 6 பேர் கைது!

Intro:மணல் கடத்தல் வழக்கில் முன் ஜாமின் கோரிய இருவரும், தலா 7500 ரூபாய் வீதம் மொத்தம் 15,000 ரூபாய், மதுரையில் உள்ள சிறார் கூர் நோக்கு இல்லத்திற்க் கு செலுத்த உத்தரவிட்டு, இருவருக்கும் முன் ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த தொகையை கொண்டு, மதுரை கூர் நோக்குஇல்லத்தில் உள்ள கழிப்பறை உள்ளிட்ட பகுதிகளை தூய்மையாக வைத்திருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் .. நீதிபதி உத்தரவு ..Body:மணல் கடத்தல் வழக்கில் முன் ஜாமின் கோரிய இருவரும், தலா 7500 ரூபாய் வீதம் மொத்தம் 15,000 ரூபாய், மதுரையில் உள்ள சிறார் கூர் நோக்கு இல்லத்திற்க் கு செலுத்த உத்தரவிட்டு, இருவருக்கும் முன் ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த தொகையை கொண்டு, மதுரை கூர் நோக்குஇல்லத்தில் உள்ள கழிப்பறை உள்ளிட்ட பகுதிகளை தூய்மையாக வைத்திருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் .. நீதிபதி உத்தரவு ..

தமிழக அரசு , கூர் நோக்கு இல்லத்திற்கு தேவையான துப்புரவு பணியாளர் களை நியமிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் என்றும் நீதிபதி உத்தரவு ..

திருமங்கலம் அருகே உள்ள பாப்பான்குளம் கண்மாயில் கடந்த ஜனவரி மாதம் 20ஆம் தேதி இரவு அங்கு மணல் திருட்டு நடந்து கொண்டிருந்தது..
அப்போது அங்கு,
வருவாய்த்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் அங்கிருந்த மணல் அள்ளும் இயந்திரம் மற்றும் இரண்டு லாரிகளை பறிமுதல் செய்தனர் .
இதுகுறித்து புகாரின் பேரில் திருமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து, இசக்கி என்பவரை கைது செய்தனர் . இந்த நிலையில் இசக்கி என்பவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் , லாரி ஓட்டுநர்களான . திண்டுக்கல் தர்மத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த கார்த்திக், மதுரை வாடிப்பட்டி அடுத்த மேலக்கால் பகுதியைச் சேர்ந்த செந்தில் ஆகியோர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிலையில் கார்த்திக் மற்றும் செந்தில் தங்களுக்கு இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர் .

இந்த மனுவை விசாரித்த நீதிபதி G.R. சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு:


முன்ஜாமீன் கோரிய இருவரும் தலா 7, 500. ரூபாய் வீதம் 15,000 ரூபாயை மதுரை காமராஜர் சாலையில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்துக்கு செலுத்த வேண்டும். இந்த தொகை யை கொண்டு அங்கு துப்பரவு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
காரணம் கூர்நோக்கு இல்லத்தில் கடந்த சில கடந்த வாரம் உயர்நீதி மன்ற நீதிபதி ராஜா ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்குள்ள கழிவறை மற்றும் அங்குள்ள அறைகள் பராமரிப்பில்லாமல் காணப்பட்டது.
எனவே உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கூர்நோக்கு இல்லங்க.ளை , அந்த பகுதி உயர்நீதிமன்றங்கள் கண்காணிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. எனது மனுதாரர்களுக்கு தலா 7500 ரூபாயை சிறார் கூர்நோக்கு இல்லத்துக்கு செலுத்த வேண்டும் . மேலும் தமிழக அரசு , கூர் நோக்கு இல்லத்திற்கு துப்புரவு பணியாளர் களை நியமிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருவருக்கும் முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டார் .மேலும் கூர் நோக்கு இல்லத்தில் கழிப்பறைகள் சுத்தமாக பராமரிக்கப்படுகிறது என்பதை ஒவ்வொரு மாதமும் 5 தேதி இல்லத்தின் கண்காணிப்பாளர் , அதற்கான அறிக்கையை உயர் நீதிமன்ற பதிவாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்...Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.