ETV Bharat / state

அஷ்டமி சப்பரத்தில் உலா வந்த மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர்!

author img

By

Published : Jan 6, 2021, 8:08 AM IST

அனைத்து ஜீவராசிகளுக்கும் படியளக்கும் அஷ்டமி சப்பர லீலையை உணர்த்தும் வகையில் மதுரையில் ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர், பிரியாவிடை சப்பரங்களில் நான்கு வெளிவீதிகளில் பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார்.

அஷ்டமி சப்பரத்தில் உலா வந்த மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர்
அஷ்டமி சப்பரத்தில் உலா வந்த மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர்

சிவபெருமான் ஈ, எறும்பு உள்ளிட்ட அனைத்து ஜீவராசிகளுக்கும் படியளந்து வாழ்வளிக்க கூடியவர் என்பதை உணர்த்தும் வகையில், ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதத்தில் தேய்பிறை அஷ்டமி தினத்தில் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் சப்பரங்களில் பவனி வந்து மதுரையில் நான்கு வீதிகளிலும் பக்தர்களுக்கு காட்சி கொடுப்பது வழக்கம்.
அந்த வகையில் தேய்பிறை அஷ்டமி இன்று சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் சார்பாக மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் மற்றும் பிரியாவிடை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து புறப்பட்டு தனித்தனி சப்பரங்களில் கீழமாசி வீதி, கீழ வெளி வீதி, வெளி வீதி, வடக்கு வெளி வீதி உள்ளிட்ட மதுரையின் முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.

அஷ்டமி சப்பரத்தில் உலா வந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர்
ஸ்ரீ சுந்தரேஸ்வரர் பிரியாவிடை ஒரு சப்பரத்திலும் ஸ்ரீமீனாட்சி அம்மன் ஒரு சப்பரத்திலும் விசேஷ அலங்காரத்தில் எழுந்தருளினார்.
இந்நிகழ்ச்சியில் ஆண்கள் பெண்கள் என ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சப்பரங்களை வடம் பிடித்து இழுத்தனர்.

இதையும் படிங்க: தைப்பூச திருநாளை பொது விடுமுறை நாளாக அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது!

சிவபெருமான் ஈ, எறும்பு உள்ளிட்ட அனைத்து ஜீவராசிகளுக்கும் படியளந்து வாழ்வளிக்க கூடியவர் என்பதை உணர்த்தும் வகையில், ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதத்தில் தேய்பிறை அஷ்டமி தினத்தில் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் சப்பரங்களில் பவனி வந்து மதுரையில் நான்கு வீதிகளிலும் பக்தர்களுக்கு காட்சி கொடுப்பது வழக்கம்.
அந்த வகையில் தேய்பிறை அஷ்டமி இன்று சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் சார்பாக மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் மற்றும் பிரியாவிடை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து புறப்பட்டு தனித்தனி சப்பரங்களில் கீழமாசி வீதி, கீழ வெளி வீதி, வெளி வீதி, வடக்கு வெளி வீதி உள்ளிட்ட மதுரையின் முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.

அஷ்டமி சப்பரத்தில் உலா வந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர்
ஸ்ரீ சுந்தரேஸ்வரர் பிரியாவிடை ஒரு சப்பரத்திலும் ஸ்ரீமீனாட்சி அம்மன் ஒரு சப்பரத்திலும் விசேஷ அலங்காரத்தில் எழுந்தருளினார்.
இந்நிகழ்ச்சியில் ஆண்கள் பெண்கள் என ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சப்பரங்களை வடம் பிடித்து இழுத்தனர்.

இதையும் படிங்க: தைப்பூச திருநாளை பொது விடுமுறை நாளாக அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.