ETV Bharat / state

பிரதமரின் கிசான் திட்டத்தில் மோசடி: ரூ.30 லட்சம் வசூல்

author img

By

Published : Oct 10, 2020, 12:24 PM IST

மதுரை: திருமங்கலத்தில் பிரதமரின் வேளாண் திட்ட மோசடி தொடர்பாக 30 லட்சம் ரூபாய் திரும்ப வசூலிக்கட்டது.

திருமங்கலம் கிசான் மோசடியில் ரூ.30 லட்சம் வசூல்
திருமங்கலம் கிசான் மோசடியில் ரூ.30 லட்சம் வசூல்

மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகாவில் பிரதமர் வேளாண் உதவித்தொகை (பி.எம். கிசான்) திட்டத்தில் இரண்டாயிரத்து 59 போலி கணக்குகள் மூலம் 70 லட்சம் ரூபாய் வரை மோசடி நடந்துள்ளது.

இந்த மோசடி குறித்து வேளாண் இணை இயக்குநர் விவேகானந்தன், உதவி இயக்குநர் (பயிர்காப்பீடு) செல்வம், உதவி இயக்குநர் சொர்ணபாரதி, காவல் துறையினர், கிராம நிர்வாக அலுவலர்கள் பல்வேறு கிராமங்களுக்குச் சென்று மோசடி நபர்கள் குறித்து விசாரித்துவருகின்றனர்.

வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட பணத்தைக் கைப்பற்றினர். மேலக்கோட்டை, மேலஉரப்பனுார் உள்ளிட்ட 11 கிராமங்களில் அதிக அளவில் மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மோசடி தொகையில் 30 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகாவில் பிரதமர் வேளாண் உதவித்தொகை (பி.எம். கிசான்) திட்டத்தில் இரண்டாயிரத்து 59 போலி கணக்குகள் மூலம் 70 லட்சம் ரூபாய் வரை மோசடி நடந்துள்ளது.

இந்த மோசடி குறித்து வேளாண் இணை இயக்குநர் விவேகானந்தன், உதவி இயக்குநர் (பயிர்காப்பீடு) செல்வம், உதவி இயக்குநர் சொர்ணபாரதி, காவல் துறையினர், கிராம நிர்வாக அலுவலர்கள் பல்வேறு கிராமங்களுக்குச் சென்று மோசடி நபர்கள் குறித்து விசாரித்துவருகின்றனர்.

வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட பணத்தைக் கைப்பற்றினர். மேலக்கோட்டை, மேலஉரப்பனுார் உள்ளிட்ட 11 கிராமங்களில் அதிக அளவில் மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மோசடி தொகையில் 30 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.