ETV Bharat / state

"பள்ளி, கல்லூரி அருகே டாஸ்மாக்கை அமைத்தால் மாணவர்கள் எப்படி கெட்டுப்போகாமல் இருப்பார்கள்?" - நீதிபதிகள் கேள்வி!

author img

By

Published : Apr 3, 2023, 5:26 PM IST

புதுக்கோட்டை மாவட்டம், நற்பவளக்குடி கிராமத்தில் கல்வி நிலையங்கள் அருகே உள்ள மதுபானக் கடை செயல்பட இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

district
பள்ளி

மதுரை: புதுக்கோட்டை மாவட்டம், நற்பவளக்குடி கிராமத்தைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அதில், "புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நற்பவளக்குடி கிராமத்தில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அங்கு 6,750 என்ற எண் கொண்ட மதுபானக்கடையை அரசு திறந்துள்ளது. இந்த மதுபானக்கடை தற்போது மாற்றப்பட்டுள்ள இடத்திற்கு அருகில் கல்வி நிலையங்கள் செயல்படுகிறது. இங்கு மது அருந்த வருபவர்கள், மது குடித்துவிட்டு பாட்டில்களை கல்வி நிலையங்களில் போட்டுவிட்டுச் செல்கின்றனர். இதனால், மாணவ - மாணவிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.

இந்த மதுக்கடையால் மாணவர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். மதுபானக் கடையை அகற்ற கிராம மக்கள் பல்வேறு கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, நற்பவளக்குடி கிராமத்தில் இடம் மாற்றப்பட்டுள்ள 6,750 என்ற எண் கொண்ட டாஸ்மாக் கடையை செயல்படத் தடை விதிக்கவும், இக்கடையை வேறு இடத்திற்கு மாற்றவும் உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு இன்று(ஏப்.3) நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் ராமகிருஷ்ணன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கல்வி நிறுவனம் அருகில் புதிய மதுபானக் கடை எவ்வாறு அமைக்கப்பட்டது? எனக் கேள்வி எழுப்பினர். அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில், ''கல்வி நிறுவனம் செயல்படாமல் உள்ளது’’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள், ''கல்வி நிறுவனம் அருகில் மதுபானக் கடை அமைக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியருக்கு தெரியாதா?’’ என கேள்வி எழுப்பினர்.

’’பள்ளி, கல்லூரி அருகே டாஸ்மாக் கடைகளை அமைத்தால், மாணவர்கள் எவ்வாறு கெட்டுப் போகாமல் இருப்பார்கள்? - போதைப்பொருள் இல்லா தமிழ்நாட்டினை உருவாக்குவோம் என சட்டம் பேசிவிட்டு, கல்லூரி அருகில் மதுபானக் கடைகளை அமைக்கலாமா?’’ என சரமாரியாக கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ’’மதுக்கடைகளால்தான் இந்தச் சமூகம் கெட்டு குட்டிச்சுவர் ஆகி உள்ளது’’ என வேதனைத் தெரிவித்தனர்.

''மதுபானக் கடை அமைப்பது அரசின் கொள்கை முடிவாக இருக்கலாம், ஆனால் அதனை உள்ளூர் கிராம மக்கள் எதிர்க்கும்போது, அதில் நீதிமன்றம் தலையிட வேண்டி உள்ளது'' எனக்கூறி, மதுபானக் கடை செயல்பட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

மேலும், ''நற்பவளக்குடியில் மதுபானக் கடை உள்ள இடத்தில் கல்வி நிறுவனம் செயல்பாட்டில் உள்ளதா? அங்கு எத்தனை பேர் படித்து வருகின்றனர்?’’ என்பது குறித்தும், ''இந்த மதுக்கடை மாற்றப்பட உள்ள இடத்தின் அருகே எத்தனை பள்ளி, கல்லூரிகள், கோயில்கள் உள்ளன?'' என்பது குறித்தும், தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க: அதிமுக பொதுச்செயலாளர் விவகாரத்தில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது - உயர்நீதிமன்றம்

மதுரை: புதுக்கோட்டை மாவட்டம், நற்பவளக்குடி கிராமத்தைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அதில், "புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நற்பவளக்குடி கிராமத்தில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அங்கு 6,750 என்ற எண் கொண்ட மதுபானக்கடையை அரசு திறந்துள்ளது. இந்த மதுபானக்கடை தற்போது மாற்றப்பட்டுள்ள இடத்திற்கு அருகில் கல்வி நிலையங்கள் செயல்படுகிறது. இங்கு மது அருந்த வருபவர்கள், மது குடித்துவிட்டு பாட்டில்களை கல்வி நிலையங்களில் போட்டுவிட்டுச் செல்கின்றனர். இதனால், மாணவ - மாணவிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.

இந்த மதுக்கடையால் மாணவர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். மதுபானக் கடையை அகற்ற கிராம மக்கள் பல்வேறு கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, நற்பவளக்குடி கிராமத்தில் இடம் மாற்றப்பட்டுள்ள 6,750 என்ற எண் கொண்ட டாஸ்மாக் கடையை செயல்படத் தடை விதிக்கவும், இக்கடையை வேறு இடத்திற்கு மாற்றவும் உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு இன்று(ஏப்.3) நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் ராமகிருஷ்ணன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கல்வி நிறுவனம் அருகில் புதிய மதுபானக் கடை எவ்வாறு அமைக்கப்பட்டது? எனக் கேள்வி எழுப்பினர். அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில், ''கல்வி நிறுவனம் செயல்படாமல் உள்ளது’’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள், ''கல்வி நிறுவனம் அருகில் மதுபானக் கடை அமைக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியருக்கு தெரியாதா?’’ என கேள்வி எழுப்பினர்.

’’பள்ளி, கல்லூரி அருகே டாஸ்மாக் கடைகளை அமைத்தால், மாணவர்கள் எவ்வாறு கெட்டுப் போகாமல் இருப்பார்கள்? - போதைப்பொருள் இல்லா தமிழ்நாட்டினை உருவாக்குவோம் என சட்டம் பேசிவிட்டு, கல்லூரி அருகில் மதுபானக் கடைகளை அமைக்கலாமா?’’ என சரமாரியாக கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ’’மதுக்கடைகளால்தான் இந்தச் சமூகம் கெட்டு குட்டிச்சுவர் ஆகி உள்ளது’’ என வேதனைத் தெரிவித்தனர்.

''மதுபானக் கடை அமைப்பது அரசின் கொள்கை முடிவாக இருக்கலாம், ஆனால் அதனை உள்ளூர் கிராம மக்கள் எதிர்க்கும்போது, அதில் நீதிமன்றம் தலையிட வேண்டி உள்ளது'' எனக்கூறி, மதுபானக் கடை செயல்பட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

மேலும், ''நற்பவளக்குடியில் மதுபானக் கடை உள்ள இடத்தில் கல்வி நிறுவனம் செயல்பாட்டில் உள்ளதா? அங்கு எத்தனை பேர் படித்து வருகின்றனர்?’’ என்பது குறித்தும், ''இந்த மதுக்கடை மாற்றப்பட உள்ள இடத்தின் அருகே எத்தனை பள்ளி, கல்லூரிகள், கோயில்கள் உள்ளன?'' என்பது குறித்தும், தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க: அதிமுக பொதுச்செயலாளர் விவகாரத்தில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது - உயர்நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.