ETV Bharat / state

கோவிட்-19 குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

author img

By

Published : Aug 23, 2020, 12:02 AM IST

மதுரை : மதுரையில் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

கோவிட்-19 குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை அதிகரிப்பு!
கோவிட்-19 குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

மதுரையில் கடந்த மார்ச் இரண்டாவது வாரத்தில் தொடங்கிய கரோனா வைரஸ் தொற்றுநோய் பாதிப்பு மே, ஜூன் மாதங்களில் கடுமையாக அதிகரித்தது. ஜூன் இறுதி வாரத்தில் இருந்து அதன் தாக்கம் குறைய தொடங்கி தற்போது வரை குணமடைந்து வீட்டிற்கு திரும்பும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், நேற்று ஒரே நாளில் (ஆகஸ்ட் 22) கரோனா வைரஸ் தொற்று காரணமாக புதிதாக 96 பேர் ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போதுவரை 172 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்ததாக அறிய முடிகிறது.

நாளொன்றுக்கு சராசரியாக 3 ஆயிரத்தில் இருந்து 4 ஆயிரம் பேர் வரை கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இதன் காரணமாக தற்போது தொற்று பரவும் வேகம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மதுரை நகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் மிகத் தீவிரமாக நடத்தப்பட்டு வருகின்றன.

மதுரையில் இதுவரை 13 ஆயிரத்து 328 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 12 ஆயிரத்து 75 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 921 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 332 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். பிளாஸ்மா தானம் மூலம் இதுவரை 7 பேர் குணமடைந்துள்ளனர்.

மதுரையில் கடந்த மார்ச் இரண்டாவது வாரத்தில் தொடங்கிய கரோனா வைரஸ் தொற்றுநோய் பாதிப்பு மே, ஜூன் மாதங்களில் கடுமையாக அதிகரித்தது. ஜூன் இறுதி வாரத்தில் இருந்து அதன் தாக்கம் குறைய தொடங்கி தற்போது வரை குணமடைந்து வீட்டிற்கு திரும்பும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், நேற்று ஒரே நாளில் (ஆகஸ்ட் 22) கரோனா வைரஸ் தொற்று காரணமாக புதிதாக 96 பேர் ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போதுவரை 172 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்ததாக அறிய முடிகிறது.

நாளொன்றுக்கு சராசரியாக 3 ஆயிரத்தில் இருந்து 4 ஆயிரம் பேர் வரை கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இதன் காரணமாக தற்போது தொற்று பரவும் வேகம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மதுரை நகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் மிகத் தீவிரமாக நடத்தப்பட்டு வருகின்றன.

மதுரையில் இதுவரை 13 ஆயிரத்து 328 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 12 ஆயிரத்து 75 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 921 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 332 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். பிளாஸ்மா தானம் மூலம் இதுவரை 7 பேர் குணமடைந்துள்ளனர்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.