ETV Bharat / state

பெண்ணை தகாத வார்த்தையால் பேசி, தாக்கிய காவல்துறை மீது நடவடிக்கை - உயர் நீதிமன்றக்கிளை அதிரடி! - பெண்ணை தகாத வார்த்தையால் பேசி, தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை

மதுரை: காவல் நிலையத்தில் வைத்து விஜயலட்சுமி எனும் பெண்ணை தகாத வார்த்தைகளால் பேசியும், தாக்கியும் காயம் ஏற்படுத்திய காவலர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும், மன உளைச்சலுக்கு இழப்பீடு வழங்கவும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Madurai
author img

By

Published : Oct 20, 2019, 9:47 AM IST

மதுரை சிவானந்தா சாலையைச் சேர்ந்த விஜயலட்சுமி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், "எனது கணவர் சரவணனுக்கும் அவரது சகோதரருக்கும் தொழிலில் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. இதில், அவரின் சகோதரர் என்னை மிரட்டி எனது புகைப்படத்தை மார்ஃபிங் செய்து இணையதளத்தில் வெளியிடுவதாகத் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து நான் சைபர் க்ரைம் காவல்துறையில் புகார் அளித்தேன். இந்த புகார் மதுரை தெற்கு அனைத்து மகளிர் காவல்துறைக்கு மாற்றப்பட்டது. இதுகுறித்து விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், என் கணவரின் சகோதரரின் புகாரின் பேரில் திலகர் திடல் காவல் துறையினர் கடந்த ஜனவரி 14ஆம் தேதி இரவு 8 மணியளவில் என்னைக் கைது செய்து காவல்துறைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு காவல்துறையினர் என்னை மிரட்டி வழக்கை திரும்பப் பெறுமாறு கூறினார். அதுமட்டுமல்லாமல் தகாத வார்த்தைகளால் பேசியும், கடுமையாக என்னைத் தாக்கவும் செய்தனர். எனவே அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவும், எனக்கு உரிய இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தவிடவேண்டுமெனக் கூறியிருந்தார்".

இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், மனுதாரருக்கு இழப்பீடாக ரூ.50 ஆயிரம் அரசுத் தரப்பில் வழங்க வேண்டுமெனவும், தொடர்புடைய காவலர்கள் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.

மேலும் படிங்க: கொலை வழக்கிற்கு இதுதான் தண்டனையா? - உயர் நீதிமன்றம் அதிரடி கேள்வி

மதுரை சிவானந்தா சாலையைச் சேர்ந்த விஜயலட்சுமி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், "எனது கணவர் சரவணனுக்கும் அவரது சகோதரருக்கும் தொழிலில் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. இதில், அவரின் சகோதரர் என்னை மிரட்டி எனது புகைப்படத்தை மார்ஃபிங் செய்து இணையதளத்தில் வெளியிடுவதாகத் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து நான் சைபர் க்ரைம் காவல்துறையில் புகார் அளித்தேன். இந்த புகார் மதுரை தெற்கு அனைத்து மகளிர் காவல்துறைக்கு மாற்றப்பட்டது. இதுகுறித்து விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், என் கணவரின் சகோதரரின் புகாரின் பேரில் திலகர் திடல் காவல் துறையினர் கடந்த ஜனவரி 14ஆம் தேதி இரவு 8 மணியளவில் என்னைக் கைது செய்து காவல்துறைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு காவல்துறையினர் என்னை மிரட்டி வழக்கை திரும்பப் பெறுமாறு கூறினார். அதுமட்டுமல்லாமல் தகாத வார்த்தைகளால் பேசியும், கடுமையாக என்னைத் தாக்கவும் செய்தனர். எனவே அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவும், எனக்கு உரிய இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தவிடவேண்டுமெனக் கூறியிருந்தார்".

இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், மனுதாரருக்கு இழப்பீடாக ரூ.50 ஆயிரம் அரசுத் தரப்பில் வழங்க வேண்டுமெனவும், தொடர்புடைய காவலர்கள் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.

மேலும் படிங்க: கொலை வழக்கிற்கு இதுதான் தண்டனையா? - உயர் நீதிமன்றம் அதிரடி கேள்வி

Intro:காவல் நிலையத்தில் தாக்கிய போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

காவல் நிலையத்தில் வைத்து தகாத வார்த்தைகளால் பேசியும், தாக்கி காயம் ஏற்படுத்திய சம்பந்தப்பட்ட போலீசார் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும், மன உளைச்சலுக்கு இழப்பீடு வழங்க கோரிய வழக்கில் இழப்பீடாக ரூ.50 ஆயிரம் அரசுத் தரப்பில் வழங்கவும் ,இந்த பணத்தை சம்பந்தப்பட்ட போலீசாரிடம் வசூலித்து கொள்ளலாம், மேலும் துறைரீதியான நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.Body:காவல் நிலையத்தில் தாக்கிய போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

காவல் நிலையத்தில் வைத்து தகாத வார்த்தைகளால் பேசியும், தாக்கி காயம் ஏற்படுத்திய சம்பந்தப்பட்ட போலீசார் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும், மன உளைச்சலுக்கு இழப்பீடு வழங்க கோரிய வழக்கில் இழப்பீடாக ரூ.50 ஆயிரம் அரசுத் தரப்பில் வழங்கவும் ,இந்த பணத்தை சம்பந்தப்பட்ட போலீசாரிடம் வசூலித்து கொள்ளலாம், மேலும் துறைரீதியான நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

மதுரை, சிவானந்தா சாலையைச் சேர்ந்த விஜயலட்சுமி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: என் கணவர் சரவணன். மதுரை ஒர்க்‌ ஷாப் ரோட்டில் டயர் விற்பனை கடை வைத்துள்ளார். இந்த கடைக்கு எதிரே அதே பெயரில் என் கணவரின் சசோதரரும் டயர் கடை வைத்துள்ளார். என் கணவரின் வியாபாராத்தையும் கைப்பற்றும் முயற்சியில் அவரது சகோதரர் ஈடுபட்டார். என் கணவரை கட்டாயப்படுத்தி வெற்று பத்திரங்களில் கையெழுத்து பெற்றார். இது குறித்து என் கணவர் திலகர்திடல் போலீசில் புகார் அளித்தார். ஆனால், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
 
இதன் பிறகு எங்கள் கடைக்கு வந்த என் கணவரின் சகோதரர் என்னை மிரட்டினார். என் படத்தை மார்பிங் செய்து வாட்ஸ் ஆப்பில் வெளியிட்டு அசிங்கபடுத்துவதாக கூறினார். இது குறித்த எனது புகாரின் பேரில் சைபர் க்ரைம் போலீசார் அவரிடம் இருந்து 3 வீடியோக்களை பறிமுதல் செய்து, எனது புகாரை அனைத்து மகளிர் போலீசுக்கு(தெற்கு) மாற்றினர். அவர்கள் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால், போலீசார் ஒருதலைபட்சமாகவே செயல்பட்டனர். புகாரை திரும்ப பெறுமாறு என் கணவரை வற்புறுத்தினர். பின்னர் வழக்கு பதிவு செய்தனர். அதே நேரம் என் கணவரின் சகோதரரின் புகாரின் பேரில் எங்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். திடீரென திலகர் திடல் போலீசார் இரவு 8 மணியளவில் என்னை கைது செய்து அழைத்து சென்றனர். காவல் நிலையத்தில் என்னை வைத்து தகாத வார்த்தைகளால் பேசி தாக்கினர். இதில் எனக்கு காயம் ஏற்பட்டது. நீதிமன்றத்தில் என்னை ஆஜர்படுத்திய போது நடந்தவற்றை நான் வாக்குமூலமாக கூறினேன். நீதிபதி அதை பதிவு செய்து கொண்டார். இரவில் என்னை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றது சட்டவிரோதம். எனவே, இதில் சம்பந்தப்பட்ட போலீசார் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும், எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.ஒரு லட்சம் வழங்கவும் உத்தரவிட வேண்டும்.
 
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
 
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், மனுதாரருக்கு இழப்பீடாக ரூ.50 ஆயிரம் அரசுத் தரப்பில் வழங்க வேண்டும். இந்த பணத்தை சம்பந்தப்பட்ட போலீசாரிடம் வசூலித்து கொள்ளலாம். இவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.
 Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.