ETV Bharat / state

பாஜக நிர்வாகி S.G. சூர்யாவிற்கு வழங்கப்பட்ட நிபந்தனை ஜாமீனில், நிபந்தனை மாற்றத்திற்கு அனுமதி! - madurai

அவதூறு கருத்து பதிவிட்ட வழக்கில் பாஜக நிர்வாகி S.G. சூர்யாவுக்கு மதுரை JM 1 நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட நிபந்தனை ஜாமீனில், நிபந்தனை மாற்றத்திற்கு அனுமதி வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

பாஜக மாநிலச் செயலாளர் S.G சூர்யா வழக்கில் நிபந்தனை மாற்றத்திற்கு அனுமதி வழங்கி உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
பாஜக மாநிலச் செயலாளர் S.G சூர்யா வழக்கில் நிபந்தனை மாற்றத்திற்கு அனுமதி வழங்கி உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
author img

By

Published : Jul 14, 2023, 1:23 PM IST

மதுரை: பாஜக மாநிலச் செயலாளராக இருப்பவர் S.G சூர்யா மதுரை மக்களவைத் தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி.யான சு.வெங்கடேசனுக்கு எதிராக அவதூறு கருத்து வெளியிட்ட வழக்கில் கடந்த ஜூன் 16ஆம் தேதி போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் சூர்யாவிற்கு ஜாமீன் கோரிய வழக்கில், சைபர் கிரைம் போலீஸார் சூர்யாவை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரினர்.

இதனை தள்ளுபடி செய்த நீதிமன்றம், மதுரை கிரைம் போலீஸில் ஆஜராகி 30 நாட்களுக்கு கையெழுத்திட வேண்டும் என சூர்யாவிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலச் செயலாளர் S.G. சூர்யா உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ''தனக்கு வாய் பேச முடியாத தாய், 100 வயதான தாத்தா உள்ளனர். மேலும் தனது குடும்பத்தினர் சென்னையில் உள்ளனர். அவர்களை நான் தான் கவனிக்க வேண்டும்.

எனவே, எனது குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, எனது ஜாமீன் நிபந்தனையை மாற்றம் செய்து சென்னையில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடும் வகையில் ஜாமீன் நிபந்தனையை மாற்றம் செய்து உத்தரவிட வேண்டும்'' என மதுரை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் சூர்யா மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி சிவகடாட்சம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இந்த உத்தரவை ரத்து செய்து, சென்னையில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் நிபந்தனையை மாற்றம் செய்ய எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில், குடும்பச் சூழ்நிலை காரணமாக நிபந்தனையில் மாற்றம் செய்து உத்தரவிட வேண்டும் என வாதிட்டார். இதைத் தொடர்ந்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவில், நிபந்தனை ஜாமீனில் உள்ள S.G. சூர்யா சென்னை சைபர் கிரைம் போலீசில் நாள்தோறும் காலை கையெழுத்திட அனுமதி வழங்கி நிபந்தனையில் மாற்றம் செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: S Ve Shekher: எஸ்.வி சேகருக்கு எதிரான வழக்கு - சிறப்பு நீதிமன்ற விசாரணையில் தலையிட முடியாது!

மதுரை: பாஜக மாநிலச் செயலாளராக இருப்பவர் S.G சூர்யா மதுரை மக்களவைத் தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி.யான சு.வெங்கடேசனுக்கு எதிராக அவதூறு கருத்து வெளியிட்ட வழக்கில் கடந்த ஜூன் 16ஆம் தேதி போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் சூர்யாவிற்கு ஜாமீன் கோரிய வழக்கில், சைபர் கிரைம் போலீஸார் சூர்யாவை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரினர்.

இதனை தள்ளுபடி செய்த நீதிமன்றம், மதுரை கிரைம் போலீஸில் ஆஜராகி 30 நாட்களுக்கு கையெழுத்திட வேண்டும் என சூர்யாவிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலச் செயலாளர் S.G. சூர்யா உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ''தனக்கு வாய் பேச முடியாத தாய், 100 வயதான தாத்தா உள்ளனர். மேலும் தனது குடும்பத்தினர் சென்னையில் உள்ளனர். அவர்களை நான் தான் கவனிக்க வேண்டும்.

எனவே, எனது குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, எனது ஜாமீன் நிபந்தனையை மாற்றம் செய்து சென்னையில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடும் வகையில் ஜாமீன் நிபந்தனையை மாற்றம் செய்து உத்தரவிட வேண்டும்'' என மதுரை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் சூர்யா மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி சிவகடாட்சம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இந்த உத்தரவை ரத்து செய்து, சென்னையில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் நிபந்தனையை மாற்றம் செய்ய எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில், குடும்பச் சூழ்நிலை காரணமாக நிபந்தனையில் மாற்றம் செய்து உத்தரவிட வேண்டும் என வாதிட்டார். இதைத் தொடர்ந்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவில், நிபந்தனை ஜாமீனில் உள்ள S.G. சூர்யா சென்னை சைபர் கிரைம் போலீசில் நாள்தோறும் காலை கையெழுத்திட அனுமதி வழங்கி நிபந்தனையில் மாற்றம் செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: S Ve Shekher: எஸ்.வி சேகருக்கு எதிரான வழக்கு - சிறப்பு நீதிமன்ற விசாரணையில் தலையிட முடியாது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.