ETV Bharat / state

கைகளால் மனித கழிவுகளை அகற்றும் தொழிலாளர்களுக்கு நிவாரணம் கோரிய வழக்கு: உள்ளாட்சி நிர்வாகங்கள் பதில் அளிக்க உத்தரவு

கைகளால் மனித கழிவுகளை அகற்றும் தொழிலாளர்களுக்கு உச்சநீதிமன்ற உத்தரவின்படி, அடையாள அட்டை வழங்கி நிவாரணம் வழங்கக் கோரிய வழக்கில், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாக அலுவலர்கள் ஜூலை 7ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

author img

By

Published : Jun 5, 2021, 5:37 PM IST

மதுரைக்கிளை உத்தரவு
மதுரைக்கிளை உத்தரவு

மதுரை வழக்கறிஞர் சகாய பிலோமின் ராஜ், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்தார். அதில், ’மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் தூய்மைப் பணியாளர்கள் எவ்வித உபகரணங்களும் இல்லாமல் மனிதக் கழிவுகளை அகற்றிவருகின்றனர். உச்ச நீதிமன்றம் கைகளால் மலம் அள்ளுபவர்களை அடையாளம்கண்டு, அவர்களுக்கு வீடு கட்டுவதற்கு இடம், நிதியுதவி, குழந்தைகளுக்கு கல்வி, குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என 2014-ல் உத்தரவிட்டது.

தூய்மை பணியாளர்களுக்கு அடையாள அட்டை

இந்த வசதிகளை பெற மனித கழிவுகளை அகற்றுபவர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். மதுரை, விருதுநகர் மாவட்டத்தில் 169 பேர் மனிதகழிவுகளை அகற்றும் பணியை செய்து வருகின்றனர். இவர்களுக்கு அடையாள அட்டை வழங்கவில்லை. எனவே, அடையாளம் காணப்பட்டுள்ள மனிதக் கழிவுகளை அகற்றும் தூய்மை பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கவும், கைகளால் மனிதக்கழிவுகளை அகற்றுவோர்களை கணக்கெடுக்குவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உத்தரவிட வேண்டும்’ என அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கூறும்போது, ’தமிழ்நாட்டில் மனித கழிவுகளை அகற்றும் பணியில் பலர் உயிரிழந்து வருவதை தீவிரமாக அணுக வேண்டும். இதை தடுக்க நடவடிக்கை எடுக்காத அலுவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த வழக்கு 2017-இல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என 2018-ஒல் கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பதில் மனு தாக்கல் செய்யவில்லை’ என்றார். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கு குறித்து ஜூலை 7-ஆம் தேதிக்குள் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய செயலர், நகராட்சி நிர்வாக மண்டல ஆணையர், மதுரை, விருதுநகர் ஆட்சியர்கள், மதுரை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: காயிதே மில்லத் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மரியாதை!

மதுரை வழக்கறிஞர் சகாய பிலோமின் ராஜ், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்தார். அதில், ’மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் தூய்மைப் பணியாளர்கள் எவ்வித உபகரணங்களும் இல்லாமல் மனிதக் கழிவுகளை அகற்றிவருகின்றனர். உச்ச நீதிமன்றம் கைகளால் மலம் அள்ளுபவர்களை அடையாளம்கண்டு, அவர்களுக்கு வீடு கட்டுவதற்கு இடம், நிதியுதவி, குழந்தைகளுக்கு கல்வி, குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என 2014-ல் உத்தரவிட்டது.

தூய்மை பணியாளர்களுக்கு அடையாள அட்டை

இந்த வசதிகளை பெற மனித கழிவுகளை அகற்றுபவர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். மதுரை, விருதுநகர் மாவட்டத்தில் 169 பேர் மனிதகழிவுகளை அகற்றும் பணியை செய்து வருகின்றனர். இவர்களுக்கு அடையாள அட்டை வழங்கவில்லை. எனவே, அடையாளம் காணப்பட்டுள்ள மனிதக் கழிவுகளை அகற்றும் தூய்மை பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கவும், கைகளால் மனிதக்கழிவுகளை அகற்றுவோர்களை கணக்கெடுக்குவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உத்தரவிட வேண்டும்’ என அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கூறும்போது, ’தமிழ்நாட்டில் மனித கழிவுகளை அகற்றும் பணியில் பலர் உயிரிழந்து வருவதை தீவிரமாக அணுக வேண்டும். இதை தடுக்க நடவடிக்கை எடுக்காத அலுவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த வழக்கு 2017-இல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என 2018-ஒல் கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பதில் மனு தாக்கல் செய்யவில்லை’ என்றார். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கு குறித்து ஜூலை 7-ஆம் தேதிக்குள் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய செயலர், நகராட்சி நிர்வாக மண்டல ஆணையர், மதுரை, விருதுநகர் ஆட்சியர்கள், மதுரை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: காயிதே மில்லத் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மரியாதை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.