ETV Bharat / state

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க தயக்கம் ஏன்? - ஆர்.பி. உதயகுமார் கேள்வி

author img

By

Published : Jul 18, 2021, 7:40 PM IST

பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்போம் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்துவிட்டு, தற்போது தயக்கம் ஏன் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆர் பி உதயகுமார்
ஆர் பி உதயகுமார்

மதுரை: அதிமுக புறநகர் மேற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில் கலந்தாய்வுக் கூட்டம் திருமங்கலம் அருகே உள்ள அம்மா கோயிலில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் ராஜா தலைமை தாங்கினார்.

இந்தக் கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளருமான ஆர்.பி. உதயகுமார் ஆலோசனை வழங்கினார்.

அப்போது ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது, "உலகளவில் தடுப்பூசிக்கு டெண்டர் விட்டு இதன் மூலம் கோடிக்கணக்கில் தடுப்பூசி பெறுவோம் என்று கூறினார்கள். ஆனால் மக்களுக்கு ஏமாற்றத்தை தந்தனர். அதேபோல் நீட் தேர்வை ஆட்சிக்கு வந்தவுடன் ரத்து செய்வோம் என்று கூறினார்கள். அதிலும் தமிழ்நாடு மக்களுக்கு ஏமாற்றத்தையை தந்துள்ளனர்.

நாடாளுமன்றம் முடக்கம்

காவிரி பிரச்னைக்காக நாடாளுமன்றத்தை அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 21 நாட்கள் முடக்கினர். இதைத்தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி காவிரி ஆணையத்தை பெற்றுத்தந்தோம். தோழமைக் கூட்டணியாக பாஜக இருந்தாலும் தமிழ்நாட்டின் உரிமைகளை என்றைக்கும் விட்டுக்கொடுத்ததில்லை.

பெட்ரோல், டீசல் மற்ற மாநில வரி வசூல்

ஒவ்வொரு மாநிலத்திலும் அரசு ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் வரியை ஒப்பிட்டுப் பார்க்கும்போது பிகாரை எடுத்துக்கொண்டால் ஒரு லிட்டருக்கு பெட்ரோலுக்கு 24.71 விழுக்காடும், டீசலுக்கு 18.34 விழுக்காடும், டெல்லியில் பெட்ரோலுக்கு 27 விழுக்காடும், டீசலுக்கு 17.24 விழுக்காடும், கோவாவில் பெட்ரோலுக்கு 16.66 விழுக்காடும், டீசலுக்கு 18.88 விழுக்காடும், குஜராத்தில் 25.45 விழுக்காடும், டீசலுக்கு 25.55 விழுக்காடும், மேற்கு வங்க மாநிலத்தில் பெட்ரோலுக்கு 25.25 விழுக்காடும் டீசலுக்கு 17.54 விழுக்காடும், உத்தரப்பிரதேசத்தில் பெட்ரோலுக்கு 26.90 விழுக்காடும், டீசலுக்கு 16.84 விழுக்காடும், உத்தரகாண்டில் பெட்ரோலுக்கு 27.15 விழுக்காடும், டீசலுக்கு 16.82 விழுக்காடும் வரி விதிக்கப்படுகிறது.

ஆர் பி உதயகுமார்
ஆர். பி. உதயகுமார்

ஆனால், தமிழ்நாட்டில் பெட்ரோலுக்கு 32.16 விழுக்காடும், டீசலுக்கு 24.08 விழுக்காடும் விதிக்கப்படுகிறது. இதன் மூலம் பெட்ரோலுக்கு ஒரு லிட்டருக்கு ரூ.27.75, டீசலுக்கு ரூ.20.35, அரசுக்கு வருவாய் கிடைக்கிறது.

வாக்குறுதி நிறைவேற்றவில்லை

திமுக தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், பெட்ரோல் விலை லிட்டருக்கு ஐந்து ரூபாய், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் குறைப்போம் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு, 75 நாட்களாகவும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை.

பெட்ரோல், டீசல் விலை குறைக்கும் அதிகாரத்தில் அரசு உள்ளது. அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி பெட்ரோல், டீசல் விலையை அரசு குறைக்க வேண்டும். இதனால், அத்தியாவசியப் பொருட்களின் விலை குறையும்.

தடுப்பூசியில் வெள்ளை அறிக்கை

தடுப்பூசியில் வெள்ளை அறிக்கை வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதை வெளியிட அரசுக்கு தயக்கம் ஏன்?. ஆனால், எங்கள் மீது பழி சுமத்தும் வண்ணம் தடுப்பூசி அதிமுக ஆட்சியில் வீணடிக்கப்பட்டதாக கூறுகின்றனர்.

அப்போது தடுப்பூசி போடுதல் குறித்த விழிப்புணர்வு மக்களிடத்தில் குறைவாக இருந்தது. மேலும் தடுப்பூசி போடுவதால் உயிர் பலி ஏற்படும் என்று மக்கள் மத்தியில் சிலர் அச்சத்தை பரப்பிவிட்டனர்.‌

தற்போது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. ஆகவே, எங்கள் மீது பழி சுமத்தாமல் தடுப்பூசியில் வெள்ளை அறிக்கை வெளியிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பேனர் வைக்கும் திமுகவினர் மீது நடவடிக்கை பாயும் - ஆர்.எஸ். பாரதி எம்.பி

மதுரை: அதிமுக புறநகர் மேற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில் கலந்தாய்வுக் கூட்டம் திருமங்கலம் அருகே உள்ள அம்மா கோயிலில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் ராஜா தலைமை தாங்கினார்.

இந்தக் கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளருமான ஆர்.பி. உதயகுமார் ஆலோசனை வழங்கினார்.

அப்போது ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது, "உலகளவில் தடுப்பூசிக்கு டெண்டர் விட்டு இதன் மூலம் கோடிக்கணக்கில் தடுப்பூசி பெறுவோம் என்று கூறினார்கள். ஆனால் மக்களுக்கு ஏமாற்றத்தை தந்தனர். அதேபோல் நீட் தேர்வை ஆட்சிக்கு வந்தவுடன் ரத்து செய்வோம் என்று கூறினார்கள். அதிலும் தமிழ்நாடு மக்களுக்கு ஏமாற்றத்தையை தந்துள்ளனர்.

நாடாளுமன்றம் முடக்கம்

காவிரி பிரச்னைக்காக நாடாளுமன்றத்தை அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 21 நாட்கள் முடக்கினர். இதைத்தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி காவிரி ஆணையத்தை பெற்றுத்தந்தோம். தோழமைக் கூட்டணியாக பாஜக இருந்தாலும் தமிழ்நாட்டின் உரிமைகளை என்றைக்கும் விட்டுக்கொடுத்ததில்லை.

பெட்ரோல், டீசல் மற்ற மாநில வரி வசூல்

ஒவ்வொரு மாநிலத்திலும் அரசு ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் வரியை ஒப்பிட்டுப் பார்க்கும்போது பிகாரை எடுத்துக்கொண்டால் ஒரு லிட்டருக்கு பெட்ரோலுக்கு 24.71 விழுக்காடும், டீசலுக்கு 18.34 விழுக்காடும், டெல்லியில் பெட்ரோலுக்கு 27 விழுக்காடும், டீசலுக்கு 17.24 விழுக்காடும், கோவாவில் பெட்ரோலுக்கு 16.66 விழுக்காடும், டீசலுக்கு 18.88 விழுக்காடும், குஜராத்தில் 25.45 விழுக்காடும், டீசலுக்கு 25.55 விழுக்காடும், மேற்கு வங்க மாநிலத்தில் பெட்ரோலுக்கு 25.25 விழுக்காடும் டீசலுக்கு 17.54 விழுக்காடும், உத்தரப்பிரதேசத்தில் பெட்ரோலுக்கு 26.90 விழுக்காடும், டீசலுக்கு 16.84 விழுக்காடும், உத்தரகாண்டில் பெட்ரோலுக்கு 27.15 விழுக்காடும், டீசலுக்கு 16.82 விழுக்காடும் வரி விதிக்கப்படுகிறது.

ஆர் பி உதயகுமார்
ஆர். பி. உதயகுமார்

ஆனால், தமிழ்நாட்டில் பெட்ரோலுக்கு 32.16 விழுக்காடும், டீசலுக்கு 24.08 விழுக்காடும் விதிக்கப்படுகிறது. இதன் மூலம் பெட்ரோலுக்கு ஒரு லிட்டருக்கு ரூ.27.75, டீசலுக்கு ரூ.20.35, அரசுக்கு வருவாய் கிடைக்கிறது.

வாக்குறுதி நிறைவேற்றவில்லை

திமுக தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், பெட்ரோல் விலை லிட்டருக்கு ஐந்து ரூபாய், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் குறைப்போம் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு, 75 நாட்களாகவும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை.

பெட்ரோல், டீசல் விலை குறைக்கும் அதிகாரத்தில் அரசு உள்ளது. அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி பெட்ரோல், டீசல் விலையை அரசு குறைக்க வேண்டும். இதனால், அத்தியாவசியப் பொருட்களின் விலை குறையும்.

தடுப்பூசியில் வெள்ளை அறிக்கை

தடுப்பூசியில் வெள்ளை அறிக்கை வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதை வெளியிட அரசுக்கு தயக்கம் ஏன்?. ஆனால், எங்கள் மீது பழி சுமத்தும் வண்ணம் தடுப்பூசி அதிமுக ஆட்சியில் வீணடிக்கப்பட்டதாக கூறுகின்றனர்.

அப்போது தடுப்பூசி போடுதல் குறித்த விழிப்புணர்வு மக்களிடத்தில் குறைவாக இருந்தது. மேலும் தடுப்பூசி போடுவதால் உயிர் பலி ஏற்படும் என்று மக்கள் மத்தியில் சிலர் அச்சத்தை பரப்பிவிட்டனர்.‌

தற்போது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. ஆகவே, எங்கள் மீது பழி சுமத்தாமல் தடுப்பூசியில் வெள்ளை அறிக்கை வெளியிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பேனர் வைக்கும் திமுகவினர் மீது நடவடிக்கை பாயும் - ஆர்.எஸ். பாரதி எம்.பி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.