ETV Bharat / state

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீ விபத்து - புகையால் நோயாளிகள் அவதி!

author img

By

Published : Sep 4, 2019, 3:05 PM IST

Updated : Sep 4, 2019, 3:21 PM IST

மதுரை: அரசு இராசாசி மருத்துவமனையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

rajaji-hospital

மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் பெண்களுக்கான அறுவை சிகிச்சைப் பிரிவான 227இல் இன்று பிற்பகல் ஒரு மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து திடீர் நகர் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த பணியாளர்கள் தீயை அணைத்தனர். இதனால் வார்டு முழுவதும் பரவிய புகை மூட்டம் காரணமாக நோயாளிகளும், பொதுமக்களும் அவதிக்குள்ளாகினர்.

தொடர்ந்து மருத்துவமனை கண்காணிப்பாளர் சங்குமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வார்டு எண் 228 அருகே உள்ள சிறிய அறையில் வைக்கப்பட்டுள்ள தலையணை, போர்வை உள்ளிட்டவற்றில் எதிர்பாராத விதமாக தீப்பற்றியது. சிறிய அளவிலான நெருப்பு அங்கே புகை மூட்டத்தை உருவாக்கியதாகவும், மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்படவில்லை எனவும் தெரிவித்தார்.

அரசு இராசசி மருத்துவமனையில் திடீர் தீ விபத்து

இது குறித்து பேசிய தீயணைப்புத் துறையின் தென் மண்டல துணை இயக்குநர் சரவண குமார், இந்த தீ விபத்தால் எந்தவிதமான அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுக்கப்பட்டதாகவும், நோயாளிகள் அல்லது நோயாளிகளை பார்க்கவந்த யாரோ ஒருவர் போட்டுவிட்டுச் சென்ற நெருப்பு போன்ற பொருளால்தான் இந்த தீ விபத்து நிகழ்ந்திருக்க வேண்டும் எனவும் கூறினார்.

தற்போதைய நிலையில் தற்காலிகமாக ஒரு தீயணைப்பு வாகனம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவமனைக்கு அருகிலேயே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீயணைப்பு வாகனங்கள் போதுமான எண்ணிக்கையில் இருப்பதால் பதற்றம் அடைய வேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவித்தார்.

மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் பெண்களுக்கான அறுவை சிகிச்சைப் பிரிவான 227இல் இன்று பிற்பகல் ஒரு மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து திடீர் நகர் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த பணியாளர்கள் தீயை அணைத்தனர். இதனால் வார்டு முழுவதும் பரவிய புகை மூட்டம் காரணமாக நோயாளிகளும், பொதுமக்களும் அவதிக்குள்ளாகினர்.

தொடர்ந்து மருத்துவமனை கண்காணிப்பாளர் சங்குமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வார்டு எண் 228 அருகே உள்ள சிறிய அறையில் வைக்கப்பட்டுள்ள தலையணை, போர்வை உள்ளிட்டவற்றில் எதிர்பாராத விதமாக தீப்பற்றியது. சிறிய அளவிலான நெருப்பு அங்கே புகை மூட்டத்தை உருவாக்கியதாகவும், மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்படவில்லை எனவும் தெரிவித்தார்.

அரசு இராசசி மருத்துவமனையில் திடீர் தீ விபத்து

இது குறித்து பேசிய தீயணைப்புத் துறையின் தென் மண்டல துணை இயக்குநர் சரவண குமார், இந்த தீ விபத்தால் எந்தவிதமான அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுக்கப்பட்டதாகவும், நோயாளிகள் அல்லது நோயாளிகளை பார்க்கவந்த யாரோ ஒருவர் போட்டுவிட்டுச் சென்ற நெருப்பு போன்ற பொருளால்தான் இந்த தீ விபத்து நிகழ்ந்திருக்க வேண்டும் எனவும் கூறினார்.

தற்போதைய நிலையில் தற்காலிகமாக ஒரு தீயணைப்பு வாகனம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவமனைக்கு அருகிலேயே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீயணைப்பு வாகனங்கள் போதுமான எண்ணிக்கையில் இருப்பதால் பதற்றம் அடைய வேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவித்தார்.

Intro:மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிறிய அளவிலான தீ விபத்தால் பரபரப்பு

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் திடீரென ஏற்பட்ட சிறிய அளவிலான தீ விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.Body:மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிறிய அளவிலான தீ விபத்தால் பரபரப்பு

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் திடீரென ஏற்பட்ட சிறிய அளவிலான தீ விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பெண்களுக்கான அறுவை சிகிச்சை பிரிவான 227 ல் ஏற்பட்ட சிறிய அளவிலான தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வார்டு எண் 227ல் இன்று பிற்பகல் ஒரு மணி அளவில் கவனக் குறைவின் காரணமாக திடீரென தீப்பற்றியது. இதனையடுத்து திடீர் நகர் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக அவர்கள் வந்து அணைத்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. வார்டு முழுவதும் பரவிய புகை மூட்டம் காரணமாக நோயாளிகளும், பொதுமக்களும் பீதி அடைந்தனர்.

இதுகுறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் சங்குமணி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், வார்டு எண் 228 அருகே உள்ள சிறிய அறையில் வைக்கப்பட்டுள்ள தலையணை பெட்ஷீட் பறவையியல் சிறிய அளவிலான நெருப்பு அங்கே புகை மூட்டத்தை உருவாக்கியது இதன் காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்படவில்லை என்றார்

தீயணைப்புத் துறையின் தென் மண்டல துணை இயக்குனர் சரவண குமார் கூறுகையில், இது சிறிய அளவிலான தீ விபத்து தான் எந்தவிதமான அசம்பாவிதமும் நடைபெறவில்லை அதேபோன்று நோயாளிகள் அல்லது நோயாளிகளை பார்க்க வந்த யாரேனும் ஒருவர் போட்டு விட்டுச் சென்ற நெருப்பு போன்ற பொருளால் தான் இந்த தீ விபத்து நிகழ்ந்தது நாங்கள் வருவதற்கு முன்பாகவே மருத்துவமனை ஊழியர்களே தீயை உடனடியாக அணைத்து விட்டனர் இதற்கு காரணம் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இங்கே பேரிடர் மேலாண்மைகுறித்து ஒரு பயிற்சி அளித்து இருந்தோம் அந்த பயிற்சியே அவர்களுக்குப் போதுமானதாக இருந்தது. தற்போதைய நிலையில் தற்காலிகமாக ஒரு தீயணைப்பு வாகனம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மருத்துவ மனைக்கு அருகிலேயே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீயணைப்பு வாகனங்கள் போதுமான எண்ணிக்கையில் இருப்பதால் பதற்றம் அடைய வேண்டிய அவசியமில்லை என்றார்Conclusion:
Last Updated : Sep 4, 2019, 3:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.