ETV Bharat / state

அணைக்கரை விவசாயி உயிரிழந்த விவகாரம்: விசாரணையை ஒத்திவைத்த மதுரைக்கிளை

author img

By

Published : Sep 16, 2020, 9:38 PM IST

மதுரை: விவசாயி அணைக்கரை முத்து உயிரிழந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு அறிவித்தபடி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு வேலை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியருக்கு உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

madurai highcourt
madurai highcourt

தென்காசி மாவட்டம், வாகைக்குளத்தைச் சேர்ந்த அணைக்கரை முத்து, தோட்டத்துக் காய்கறிகளை விலங்குகள் சேதப்படுத்துவதைத் தடுப்பதற்காக தோட்டத்தைச் சுற்றி மின்வேலி அமைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்த வனத்துறை அலுவலர்கள், தோட்டத்தைச் சுற்றி மின்வேலி அமைத்தாகக் கூறி, அணைக்கரை முத்துவைச் சிவசைலம் வனச்சரக அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இந்நிலையில் அவர் திடீரென உயிரிழந்தாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்த உயிரிழந்த விவசாயின் மனைவி பாலம்மாள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், "விசாரணைக்காக அழைத்துச் சென்ற கணவரை வனத்துறையினர் தாக்கியதன் காரணமாகவே உயிரிழந்தார். ஆகவே தனது கணவரின் உடலை மூத்த தடயவியல் மருத்துவர்கள் குழு உடற்கூறாய்வு செய்யவும், தொடர்புடைய வனத்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யவும், வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றவும், உரிய இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும்" என மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி பொங்கியப்பன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் கூறுகையில், உடற்கூறாய்வின் அறிக்கையின் இறுதி அறிக்கை வழங்க உத்தரவிட வேண்டும். வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், வனத்துறையில் உள்ள அலுவலர்கள் உள்பட பொது மக்கள் என 45 சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரண்டாவது உடற்கூறாய்வு நடத்தப்பட்டுள்ளது என காவல் துறை சார்பில் தாக்கல் செய்ய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு அறிவித்தபடி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு வேலை வழங்க மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 16ஆம் தேதி ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

தென்காசி மாவட்டம், வாகைக்குளத்தைச் சேர்ந்த அணைக்கரை முத்து, தோட்டத்துக் காய்கறிகளை விலங்குகள் சேதப்படுத்துவதைத் தடுப்பதற்காக தோட்டத்தைச் சுற்றி மின்வேலி அமைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்த வனத்துறை அலுவலர்கள், தோட்டத்தைச் சுற்றி மின்வேலி அமைத்தாகக் கூறி, அணைக்கரை முத்துவைச் சிவசைலம் வனச்சரக அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இந்நிலையில் அவர் திடீரென உயிரிழந்தாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்த உயிரிழந்த விவசாயின் மனைவி பாலம்மாள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், "விசாரணைக்காக அழைத்துச் சென்ற கணவரை வனத்துறையினர் தாக்கியதன் காரணமாகவே உயிரிழந்தார். ஆகவே தனது கணவரின் உடலை மூத்த தடயவியல் மருத்துவர்கள் குழு உடற்கூறாய்வு செய்யவும், தொடர்புடைய வனத்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யவும், வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றவும், உரிய இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும்" என மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி பொங்கியப்பன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் கூறுகையில், உடற்கூறாய்வின் அறிக்கையின் இறுதி அறிக்கை வழங்க உத்தரவிட வேண்டும். வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், வனத்துறையில் உள்ள அலுவலர்கள் உள்பட பொது மக்கள் என 45 சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரண்டாவது உடற்கூறாய்வு நடத்தப்பட்டுள்ளது என காவல் துறை சார்பில் தாக்கல் செய்ய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு அறிவித்தபடி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு வேலை வழங்க மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 16ஆம் தேதி ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.