ETV Bharat / state

பேராயர் மீதான அவதூறு வழக்கு: காவல்துறை விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

author img

By

Published : Oct 28, 2022, 1:27 PM IST

பேராயர் மீதான அவதூறு வழக்கில், காவல்துறை விசாரணை அறிக்கை தாக்கல் செய்யவும், கொடைக்கானல் காவல் ஆய்வாளர் நேரில் ஆஜராகவும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

பேராயர் மீதான அவதூறு வழக்கு: காவல்துறை விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்..
பேராயர் மீதான அவதூறு வழக்கு: காவல்துறை விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்..

மதுரை: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த மரிய செல்வி, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் “எனது தாய்மாமா அந்தோணி பாப்புசாமி, மதுரை உயர்மறை மாவட்ட பேராயராக உள்ளார். மக்கள் பேராயர் என அனைத்து மதத்தினராலும் புகழப்பட்டவர்.

இந்த நிலையில் சிலரின் தூண்டுதலின் பேரில், அவர் மீதும் மேலும் சிலர் மீதும் அவதூறு பரப்பும் வகையில், கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான விருந்தினர் மாளிகையில் பல தகாத செயல்களில் ஈடுபட்டார் என இதழ் ஒன்றில் செய்தி வெளியிட்டுள்ளனர்.

இது அவரது மரியாதையை சீர்குலைக்கும் வகையிலும், மதக் கலவரத்தை தூண்டும் வகையில் உள்ளது. எனவே இந்த வார இதழ் மீது அவதூறு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து பதில் அளிக்க கொடைக்கானல் காவல்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று (அக் 28) நீதிபதி இளங்கோவன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது “இந்த குற்றச்சாட்டு மிகவும் தீவிரமானது. எனவே இது சம்பந்தமாக கொடைக்கானல் காவல் ஆய்வாளர் நேரில் ஆஜராக வேண்டும்.

இந்த வழக்கில் இதுவரை எடுக்கபட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். மேலும் இவ்வழக்கு தொடர்பான விசாரணை நவம்பர் முதல் வாரத்திற்கு ஒத்தி வைக்கப்படுகிறது” என நீதிபதி இளங்கோவன் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: ’கர்மாவின் அடிப்படையில் நீதிமன்றம் செயல்படாது..!’ - உயர்நீதிமன்ற மதுரை கிளை

மதுரை: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த மரிய செல்வி, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் “எனது தாய்மாமா அந்தோணி பாப்புசாமி, மதுரை உயர்மறை மாவட்ட பேராயராக உள்ளார். மக்கள் பேராயர் என அனைத்து மதத்தினராலும் புகழப்பட்டவர்.

இந்த நிலையில் சிலரின் தூண்டுதலின் பேரில், அவர் மீதும் மேலும் சிலர் மீதும் அவதூறு பரப்பும் வகையில், கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான விருந்தினர் மாளிகையில் பல தகாத செயல்களில் ஈடுபட்டார் என இதழ் ஒன்றில் செய்தி வெளியிட்டுள்ளனர்.

இது அவரது மரியாதையை சீர்குலைக்கும் வகையிலும், மதக் கலவரத்தை தூண்டும் வகையில் உள்ளது. எனவே இந்த வார இதழ் மீது அவதூறு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து பதில் அளிக்க கொடைக்கானல் காவல்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று (அக் 28) நீதிபதி இளங்கோவன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது “இந்த குற்றச்சாட்டு மிகவும் தீவிரமானது. எனவே இது சம்பந்தமாக கொடைக்கானல் காவல் ஆய்வாளர் நேரில் ஆஜராக வேண்டும்.

இந்த வழக்கில் இதுவரை எடுக்கபட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். மேலும் இவ்வழக்கு தொடர்பான விசாரணை நவம்பர் முதல் வாரத்திற்கு ஒத்தி வைக்கப்படுகிறது” என நீதிபதி இளங்கோவன் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: ’கர்மாவின் அடிப்படையில் நீதிமன்றம் செயல்படாது..!’ - உயர்நீதிமன்ற மதுரை கிளை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.