மதுரை மாவட்டத்தில் கூத்தியார்குண்டு கிராமத்தின் 2ஆவது வார்டு உறுப்பினர் விஜயலட்சுமி வடிவேலன், தனது வார்டுக்குள்பட்ட பொதுச் சுவர்களில் கரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தனித்திருத்தலின் அவசியம் குறித்து வாசகங்களும் ஓவியங்களும் வரைந்து அசத்தியுள்ளார்.
இது குறித்து விஜயலட்சுமி கூறுகையில், ”தற்போதைய சூழலில் கரோனா குறித்த முழுமையான விழிப்புணர்வு மக்களுக்கு இருந்தால்தான் ஊரடங்கின் நோக்கம் வெற்றிபெறும்.
இதன் அடிப்படையில்தான் இதுபோன்ற விழிப்புணர்வு ஓவியங்களை எனது வார்டுக்குள்பட்ட பகுதியில் வரைந்துள்ளேன்” என்றார்.
இதையும் படிங்க: ஓவியம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓவியர்கள்!