ETV Bharat / state

செல்போன்கள் கையிலிருக்கும் அணுகுண்டு - உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் வேதனை

மதுரை: செல்போன் கையில் இருக்கும் அணுகுண்டைப் போல பேராபத்தாக உள்ளது. அதன் நன்மை தீமைகள் குறித்து தெளிவாக அறியாமல் பயன்படுத்துவதன் விளைவே பொள்ளாச்சி சம்பவம் போன்ற வருந்தத்தக்க நிகழ்வுகளுக்கு காரணம் என நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

author img

By

Published : Mar 14, 2019, 8:31 PM IST

உயர்நீதிமன்ற மதுரை கிளை

மதுரை கீழக்குயில்குடியைச் சேர்ந்த விஜயகுமார் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், 'இணையதளத்தின் பயன்பாட்டால் உலகம் சுருங்கி ஒவ்வொருவரின் உள்ளங்கையில்உள்ளது. முன்பு இணையதளத்தை பயன்படுத்த இணையதள மையங்களுக்குச் செல்ல வேண்டும். ஆனால் செல்போன் பயன்பாடுகளின் காரணமாக இன்று ஒவ்வொருவரும் இருந்த இடத்திலேயே இணையத்தை பயன்படுத்துகின்றனர்.அரசின் பணிகள் உட்பட அனைத்தும் இணையத்தை சார்ந்தே இருக்கின்றன. அதே சமயம் அதன் தீங்குகளும் வளரத்தொடங்கின.

குழந்தைகளை தவறாக பயன்படுத்துதல், ஆபாச இணையதளங்களின் பயன்பாடு, புளூவேல், வெப் புல்லிங் போன்ற விளையாட்டுக்களால் உயிரிழப்புகள் ஏற்படுவது என இணையதளத்தின் தீங்குகளும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன. இது பள்ளியில் படிக்கும் குழந்தைகளை வெகுவாக பாதிக்கிறது. Parental window என்ற மென்பொருள் குறித்தும், அதன் பயன்பாடு குறித்தும் வாடிக்கையாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது இணைய சேவை வழங்குவோரின் கடமை.
இதுகுறித்து 2017 ஆம் ஆண்டு மத்தியதொலைதொர்பு துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது ..

ஆகவே, இணைய சேவை வழங்க உரிமம் பெற்றவர்கள். Parentel window மென்பொருள் குறித்து ஊடகங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் "எனகூறியிருந்தார்.

இந்த வழக்கு இன்றுநீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போதுமனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இணைய சேவை முறைப்படுத்தப்படாததே சமூகத்தின் பல்வேறு பிரச்சினைகளுக்கும் காரணம் என தெரிவித்தார்.

High Court Madurai bench
உயர்நீதிமன்ற மதுரை கிளை

அதற்கு நீதிபதிகள் பேஸ்புக் செல்போன்ஆகியவற்றின் பயன்பாடு இன்று அதிக அளவில் உள்ளது. செல்போன் கையில் இருக்கும் அணுகுண்டைப் போல பேராபத்தாக உள்ளது. அதன் நன்மை தீமைகள் குறித்து தெளிவாக அறியாமல் பயன்படுத்துவதன் விளைவே பொள்ளாச்சி சம்பவம் போன்ற வருந்தத்தக்க நிகழ்வுகளுக்கு காரணம் இது தொடர்பாக அதிகாரிகளும் கவனம் செலுத்த வேண்டும். அது நீதிமன்றத்தின் பணி மட்டுமல்ல.ஆபாச வலைத்தளங்கள், மது ஆகிய இரண்டும் சமூகத்தை மாசுபடுத்தும் மிகப் பெரும் பிரச்சினைகளாக காணப்படுகின்றன.

இவற்றை முறைப்படுத்த தவறினால் இளைஞர்கள் தங்களின் ஆரோக்கியத்தையும், வளமான எதிர்காலத்தையும், சிந்தனையும் இழக்கும் நிலை உருவாகும். பெற்றோர்களும் தங்களின் குழந்தைகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும் என கருத்து தெரிவித்த நீதிபதிகள் இது குறித்து இணைய சேவை வழங்குவோர் சங்க செயலர், குழந்தைகள் உரிமை பாதுகாப்பிற்கான தேசிய ஆணையம் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.

மதுரை கீழக்குயில்குடியைச் சேர்ந்த விஜயகுமார் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், 'இணையதளத்தின் பயன்பாட்டால் உலகம் சுருங்கி ஒவ்வொருவரின் உள்ளங்கையில்உள்ளது. முன்பு இணையதளத்தை பயன்படுத்த இணையதள மையங்களுக்குச் செல்ல வேண்டும். ஆனால் செல்போன் பயன்பாடுகளின் காரணமாக இன்று ஒவ்வொருவரும் இருந்த இடத்திலேயே இணையத்தை பயன்படுத்துகின்றனர்.அரசின் பணிகள் உட்பட அனைத்தும் இணையத்தை சார்ந்தே இருக்கின்றன. அதே சமயம் அதன் தீங்குகளும் வளரத்தொடங்கின.

குழந்தைகளை தவறாக பயன்படுத்துதல், ஆபாச இணையதளங்களின் பயன்பாடு, புளூவேல், வெப் புல்லிங் போன்ற விளையாட்டுக்களால் உயிரிழப்புகள் ஏற்படுவது என இணையதளத்தின் தீங்குகளும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன. இது பள்ளியில் படிக்கும் குழந்தைகளை வெகுவாக பாதிக்கிறது. Parental window என்ற மென்பொருள் குறித்தும், அதன் பயன்பாடு குறித்தும் வாடிக்கையாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது இணைய சேவை வழங்குவோரின் கடமை.
இதுகுறித்து 2017 ஆம் ஆண்டு மத்தியதொலைதொர்பு துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது ..

ஆகவே, இணைய சேவை வழங்க உரிமம் பெற்றவர்கள். Parentel window மென்பொருள் குறித்து ஊடகங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் "எனகூறியிருந்தார்.

இந்த வழக்கு இன்றுநீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போதுமனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இணைய சேவை முறைப்படுத்தப்படாததே சமூகத்தின் பல்வேறு பிரச்சினைகளுக்கும் காரணம் என தெரிவித்தார்.

High Court Madurai bench
உயர்நீதிமன்ற மதுரை கிளை

அதற்கு நீதிபதிகள் பேஸ்புக் செல்போன்ஆகியவற்றின் பயன்பாடு இன்று அதிக அளவில் உள்ளது. செல்போன் கையில் இருக்கும் அணுகுண்டைப் போல பேராபத்தாக உள்ளது. அதன் நன்மை தீமைகள் குறித்து தெளிவாக அறியாமல் பயன்படுத்துவதன் விளைவே பொள்ளாச்சி சம்பவம் போன்ற வருந்தத்தக்க நிகழ்வுகளுக்கு காரணம் இது தொடர்பாக அதிகாரிகளும் கவனம் செலுத்த வேண்டும். அது நீதிமன்றத்தின் பணி மட்டுமல்ல.ஆபாச வலைத்தளங்கள், மது ஆகிய இரண்டும் சமூகத்தை மாசுபடுத்தும் மிகப் பெரும் பிரச்சினைகளாக காணப்படுகின்றன.

இவற்றை முறைப்படுத்த தவறினால் இளைஞர்கள் தங்களின் ஆரோக்கியத்தையும், வளமான எதிர்காலத்தையும், சிந்தனையும் இழக்கும் நிலை உருவாகும். பெற்றோர்களும் தங்களின் குழந்தைகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும் என கருத்து தெரிவித்த நீதிபதிகள் இது குறித்து இணைய சேவை வழங்குவோர் சங்க செயலர், குழந்தைகள் உரிமை பாதுகாப்பிற்கான தேசிய ஆணையம் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.

செல்போன் கையில் இருக்கும் அணுகுண்டைப் போல பேராபத்தாக உள்ளது. அதன் நன்மை தீமைகள் குறித்து தெளிவாக அறியாமல் பயன்படுத்துவதன் விளைவே பொள்ளாச்சி சம்பவம் போன்ற வருந்தத்தக்க நிகழ்வுகளுக்கு காரணம் - நீதிபதிகள் வேதனை



மதுரை கீழக்குயில்குடியைச் சேர்ந்த விஜயகுமார் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்," 
இணையதளத்தின் பயன்பாட்டால் உலகம் சுருங்கி ஒவ்வொருவரின் உள்ளங்கையில்  உள்ளது. முன்பு இணையதளத்தை பயன்படுத்த இணையதள மையங்களுக்குச் செல்ல வேண்டும். ஆனால் செல்போன் பயன்பாடுகளின் காரணமாக இன்று ஒவ்வொருவரும் இருந்த இடத்திலேயே இணையத்தை பயன்படுத்துகின்றனர். 
அரசின் பணிகள் உட்பட அனைத்தும் இணையத்தை சார்ந்தே இருக்கின்றன. அதே சமயம் அதன் தீங்குகளும் வளரத்தொடங்கின. குழந்தைகளை தவறாக பயன்படுத்துதல், ஆபாச இணையதளங்களின் பயன்பாடு, புளூவேல், வெப் புல்லிங் போன்ற விளையாட்டுக்களால் உயிரிழப்புகள் ஏற்படுவது என இணையதளத்தின் தீங்குகளும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன. இது பள்ளியில் படிக்கும் குழந்தைகளை வெகுவாக பாதிக்கிறது ...
Parental window என்ற மென்பொருளை பயன்படுத்தி சிறார்கள்,  தவறான இணையதள முகவரிகளை குறிப்பாக புளுவேல் உள்ளிட்ட ஆபத்தான விளையாட்டுகள்,  ஆபாச இணைய தளங்களை பார்க்க முடியாமல் அந்த இணைய தள முகவரியை  பெற்றோர்கள் தடை செய்து கட்டுபடுத்தலாம். இந்த Parental window என்ற மென்பொருள் குறித்தும், அதன் பயன்பாடு குறித்தும் வாடிக்கையாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது இணைய சேவை வழங்குவோரின் கடமை.  இதுகுறித்து 2017 ஆம் ஆண்டு மத்திய  தொலைதொர்பு துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது ..
ஆகவே, இணைய சேவை வழங்க உரிமம் பெற்றவர்கள்,  Parentel window மென்பொருள் குறித்து ஊடகங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் "என  கூறியிருந்தார். 

இந்த வழக்கு இன்று  நீதிபதிகள் கிருபாகரன் எஸ் எஸ் சுந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது  மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இணைய சேவை முறைப்படுத்தப் படாததே சமூகத்தின் பல்வேறு பிரச்சினைகளுக்கும் காரணம் என தெரிவித்தார்.  அதற்கு நீதிபதிகள் பேஸ்புக் செல்போன்  ஆகியவற்றின் பயன்பாடு இன்று அதிக அளவில் உள்ளது. செல்போன் கையில் இருக்கும் அணுகுண்டைப் போல பேராபத்தாக உள்ளது. அதன் நன்மை தீமைகள் குறித்து தெளிவாக அறியாமல் பயன்படுத்துவதன் விளைவே பொள்ளாச்சி சம்பவம் போன்ற வருந்தத்தக்க நிகழ்வுகளுக்கு காரணம் இது தொடர்பாக அதிகாரிகளும் கவனம் செலுத்த வேண்டும். அது நீதிமன்றத்தின் பணி மட்டுமல்ல.  ஆபாச வலைத்தளங்கள் ,மது ஆகிய இரண்டும் சமூகத்தை மாசுபடுத்தும் மிகப் பெரும் பிரச்சினைகளாக காணப்படுகின்றன. இவற்றை முறைப்படுத்த தவறினால் இளைஞர்கள் தங்களின் ஆரோக்கியத்தையும் வளமான எதிர்காலத்தையும் சிந்தனையும் இழக்கும் நிலை உருவாகும். பெற்றோர்களும் தங்களின் குழந்தைகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும் என கருத்து தெரிவித்த நீதிபதிகள் இது குறித்து இணைய சேவை வழங்குவோர் சங்க செயலர், குழந்தைகள் உரிமை பாதுகாப்பிற்கான தேசிய ஆணையம் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.