ETV Bharat / state

சுகாதாரப் பணியாளர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க கோரிய வழக்கு - சுகாதாரத் துறை பதிலளிக்க மதுரைக்கிளை உத்தரவு!

author img

By

Published : Feb 24, 2021, 9:59 PM IST

மதுரை: கரோனா வார்டில் பணியில் இருந்த போது உயிரிழந்த சுகாதாரப் பணியாளர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு, அரசு வேலை வழங்க கோரிய வழக்கில் சுகாதாரத் துறை முதன்மை செயலாளர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

Case seeking appropriate compensation for the health worker's family
Case seeking appropriate compensation for the health worker's family

மதுரை தனக்கன்குளத்தை சேர்ந்த வேல்முருகன் என்பவரது மனைவி வளர்மதி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில்," எனது கணவர் வேல்முருகன் கடந்த 18 ஆண்டுகளாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தற்காலிக சுகாதாரப் பணியாளராக பணிபுரிந்து வந்தார்.

கரோனா பாதிப்பு போது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த கரோனா சிறப்பு வார்டில் அவர் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அவர் கடந்த ஆண்டு ஜுலை 27 ஆம் தேதி முதல் கடுமையான உடல் நிலை பாதிக்கப்பட்டார்.

அப்போது அவரை பரிசோதித்த போது அவருக்கு கரோனா பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. அதன் பின் கடந்த ஆண்டு ஜுலை 30 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதன் பின் அவரது உடலை மதுரை மாநகராட்சி ஊழியர்கள் எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர்.

போதிய வருமானம் இல்லாததால் எனது குடும்பத்தினர் மிகவும் சிரமப்பட்டு வருகிறது. எனவே அரசு அறிவித்துள்ளது போல சுகாதார பணியாளர் இறந்தால் உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும். அதேபோல் எனது குடும்பத்தில் எனது மகன்களின் யாராவது ஒருவருக்கு அவர்களது கல்வித் தகுதியை வைத்து ஏதாவது ஒரு அரசு வேலை வழங்க வேண்டும்” எனத் தெரிவித்தனர்.

இந்த மனு நீதிபதி பார்த்திபன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி இதுகுறித்து சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர், மதுரை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் உரிய பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரத்திற்கு ஒத்தி வைத்தார்.

இதையும் படிங்க: கிளைச்செயலாளர் முதல் முதலமைச்சர் வரை: எடப்பாடி பழனிசாமி கடந்து வந்த பாதை

மதுரை தனக்கன்குளத்தை சேர்ந்த வேல்முருகன் என்பவரது மனைவி வளர்மதி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில்," எனது கணவர் வேல்முருகன் கடந்த 18 ஆண்டுகளாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தற்காலிக சுகாதாரப் பணியாளராக பணிபுரிந்து வந்தார்.

கரோனா பாதிப்பு போது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த கரோனா சிறப்பு வார்டில் அவர் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அவர் கடந்த ஆண்டு ஜுலை 27 ஆம் தேதி முதல் கடுமையான உடல் நிலை பாதிக்கப்பட்டார்.

அப்போது அவரை பரிசோதித்த போது அவருக்கு கரோனா பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. அதன் பின் கடந்த ஆண்டு ஜுலை 30 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதன் பின் அவரது உடலை மதுரை மாநகராட்சி ஊழியர்கள் எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர்.

போதிய வருமானம் இல்லாததால் எனது குடும்பத்தினர் மிகவும் சிரமப்பட்டு வருகிறது. எனவே அரசு அறிவித்துள்ளது போல சுகாதார பணியாளர் இறந்தால் உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும். அதேபோல் எனது குடும்பத்தில் எனது மகன்களின் யாராவது ஒருவருக்கு அவர்களது கல்வித் தகுதியை வைத்து ஏதாவது ஒரு அரசு வேலை வழங்க வேண்டும்” எனத் தெரிவித்தனர்.

இந்த மனு நீதிபதி பார்த்திபன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி இதுகுறித்து சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர், மதுரை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் உரிய பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரத்திற்கு ஒத்தி வைத்தார்.

இதையும் படிங்க: கிளைச்செயலாளர் முதல் முதலமைச்சர் வரை: எடப்பாடி பழனிசாமி கடந்து வந்த பாதை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.