ETV Bharat / state

Photo Studio Robbery: மதுரை அருகே ஸ்டுடியோவில் கேமராக்கள், பணம் கொள்ளை

author img

By

Published : Dec 25, 2021, 6:48 PM IST

Photo Studio Robbery: மதுரை அருகே நள்ளிரவில் போட்டோ ஸ்டுடியோ கடையின் கதவை திறந்து விலை உயர்ந்த கேமராக்கள், ஏழாயிரம் ரூபாய் பணம் உள்ளிட்டவற்றை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றது தொடர்பான சிசிடிவி பதிவு வெளியாகியுள்ளது.

போட்டோ ஸ்டுடியோ கொள்ளை தொடர்பான சிசிடிவி காணொலி
போட்டோ ஸ்டுடியோ கொள்ளை தொடர்பான சிசிடிவி காணொலி

Photo Studio Robbery: மதுரை: வாடிப்பட்டி அருகே உள்ள விராலிப்பட்டியை சேர்ந்தவர் ஞானபதி. இவர் வாடிப்பட்டியில் சொந்தமாக போட்டோ ஸ்டூடியோ கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று (டிசம்பர் 25) இரவு கடையின் வெளிப்புற ஷட்டரை பூட்டு போடாமல் கவனக்குறைவாக அடைத்து விட்டு சென்றுள்ளார்.

பின்னர் இரவு அவரது கடை வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் கடைக்குள் புகுந்து கேமரா, ஹார்ட் டிஸ்க், ஏழாயிரம் ரூபாய் பணம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றனர். வழக்கம்போல் இன்று (டிசம்பர் 25) காலை ஞானபதி கடையை திறக்கச் சென்றுள்ளார்.

அப்போது கடையின் உள்ளே பொருட்கள் திருடுபோனதை கண்டு ஞானபதி அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றினர்.

போட்டோ ஸ்டுடியோ கொள்ளை தொடர்பான சிசிடிவி காணொலி

அதில் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்கள் கடைக்குள் சென்று பொருட்களை திருடிச் செல்வது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் திருட்டில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: மதுரை அருகே ரூ.12 லட்சம் மதிப்புடைய கள்ளநோட்டுகள் பறிமுதல்

Photo Studio Robbery: மதுரை: வாடிப்பட்டி அருகே உள்ள விராலிப்பட்டியை சேர்ந்தவர் ஞானபதி. இவர் வாடிப்பட்டியில் சொந்தமாக போட்டோ ஸ்டூடியோ கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று (டிசம்பர் 25) இரவு கடையின் வெளிப்புற ஷட்டரை பூட்டு போடாமல் கவனக்குறைவாக அடைத்து விட்டு சென்றுள்ளார்.

பின்னர் இரவு அவரது கடை வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் கடைக்குள் புகுந்து கேமரா, ஹார்ட் டிஸ்க், ஏழாயிரம் ரூபாய் பணம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றனர். வழக்கம்போல் இன்று (டிசம்பர் 25) காலை ஞானபதி கடையை திறக்கச் சென்றுள்ளார்.

அப்போது கடையின் உள்ளே பொருட்கள் திருடுபோனதை கண்டு ஞானபதி அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றினர்.

போட்டோ ஸ்டுடியோ கொள்ளை தொடர்பான சிசிடிவி காணொலி

அதில் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்கள் கடைக்குள் சென்று பொருட்களை திருடிச் செல்வது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் திருட்டில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: மதுரை அருகே ரூ.12 லட்சம் மதிப்புடைய கள்ளநோட்டுகள் பறிமுதல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.